Tiruchirappalli

News January 27, 2025

திருச்சி காவிரியாற்றில் முதலைகள் நடமாட்டம்?

image

திருச்சி காவிரியாற்றில் உய்யக்கொண்டான், கோரையாறு ஆகிய இடங்களில் முதலைகள் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி அப்பகுதியில் கால்நடைகளை மேய்த்து வருவர்கள் கூறுகையில், முதலைகள் இருப்பது உண்மைதான். அதிலும் சற்று பெரிய முதலைகள் வாய்க்கால்களில் செடிகளுக்குள் மறைந்து கிடக்கின்றன. இதனால் கால்நடைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சில நேரம் மனிதர்களுக்கே ஆபத்து நேர வாய்ப்பு என்றனர்.

News January 27, 2025

பிப்.2 திருச்சி வரும் தமிழக முதல்வர்

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 28.01.2025 முதல் 03.02.2025 வரை நடைபெறவுள்ள தேசிய சாரண, சாரணியர் வைரவிழா பெருந்திரள் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பெருந்திரள் விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிப்ரவரி 2-ம் தேதி மதியம் 4 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.

News January 27, 2025

திருச்சி வரும் உதயநிதி ஸ்டாலின்

image

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் 28.01.2025 முதல் 03.02.2025 வரை நடைபெறவுள்ள தேசிய சாரண, சாரணியர் வைரவிழா பெருந்திரள் மற்றும் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரள் விழா நடைபெற உள்ளது. இதற்காக நாளை (ஜன.28) மதியம் 3 மணியளவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைக்க திருச்சி வருகிறார்.

News January 27, 2025

சிறுகனூர் அருகே காயங்களுடன் பெண் சடலம் மீட்பு

image

சிறுகனூர் தீரன் நகரை சேர்ந்த பெண்ணுக்கும், உடையார் பாளையத்தைச் சேர்ந்த வாலிபருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதையடுத்து கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் அப்பெண் கடந்த 6 மாத காலமாக தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பெண் நேற்று அவரது வீட்டின் அருகே காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து சிறுகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 26, 2025

90 காவலர்களுக்கு பதக்கம் வழங்கிய ஆட்சியர்

image

திருச்சியில் இன்று நடைபெற்ற 76 ஆவது குடியரசு தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய 418 அரசு அலுவலர்கள் மற்றும் 8 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் என மொத்தம் 426 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், முதலமைச்சரின் காவல் பதங்கங்கள் 90 காவலர்களுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார். இந்நிகழ்வில் மாணவர் காவல் ஆணையர், காவல்துணை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News January 25, 2025

சிபிஐ விசாரணை வேண்டும்: சசிகலா

image

திருச்சி விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் சசிகலா இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது வேங்கைவயல் விவகாரத்தில் திமுக யாரையோ காப்பாற்ற நினைக்கிறார்கள் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், சிபிஐ விசாரணை செய்தால் தான் சரியான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியும் என தெரிவித்தார்.

News January 25, 2025

பெல் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

image

திருச்சி பெல் நிறுவனத்தில் 400 காலியிடங்கள் உள்ளதாக நிறுவனத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது 27-29 வயதுக்குள் இருக்க வேண்டும். கணினி வழி தேர்வு உள்ளதாகவும் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஷேர் செய்யவும்

News January 25, 2025

திருச்சி விமான நிலையத்தில் அமைச்சருக்கு நெஞ்சுவலி

image

தமிழக சட்டத்துறை அமைச்சராக இருப்பவர் ரகுபதி. இவர் இன்று காலை சென்னையிலிருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக விமானத்திலிருந்து திருச்சி மத்திய பேருந்து அருகே உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

News January 25, 2025

சிறப்பாக பணியாற்றிய திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு

image

தமிழ்நாடு ஆளுநர் ரவி நேற்று நடைபெற்ற முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் மாநில அளவில் அஞ்சல் வாக்கு மையம் அமைத்து சிறப்பாக பணியாற்றியதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்வு செய்யப்பட்ட திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமாருக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டு சான்று மட்டும் கேடயத்தை வழங்கினார்.

News January 25, 2025

புதிய தொழிற்பள்ளிகள் துவங்க ஆட்சியர் அழைப்பு

image

2025-26ம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற் பள்ளிகளில் புதியதொழில் பிரிவுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. இதனை பிப்.2 முதல் <>www.skilltraining.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.5000,ஆய்வு கட்டணம் ரூ.8000 செலுத்த வேண்டும் என ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!