Tiruchirappalli

News January 30, 2025

திருச்சி காவிரி ஆற்றில் பெண் சடலம் மீட்பு

image

திருவெறும்பூர் அருகே சர்க்கார் பாளையம் சிவன் கோவில் அருகில் உள்ள காவிரி ஆற்றில் இன்று அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது சம்பந்தமாக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 30, 2025

லால்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 4 பேர் கைது

image

லால்குடி அருகே சிறுகளப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வேம்பு (40). விவசாயியான இவர் சம்பவத்தன்று தனது வயலுக்கு செல்ல சுரேஷ் என்பவரின் டூவீலர் ‘லிப்ட்’ கேட்டு ஏறி சென்று தனது வயலில் இறங்கியுள்ளார். அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 பவுன் தங்க சங்கிலியை கவனித்த சுரேஷ், அவரது நண்பர் புண்ணியமூர்த்தியுடன் இணைந்து பறித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் சுரேஷ், மூர்த்தி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

News January 29, 2025

மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்கள்

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 31 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களை தனியார் நிறுவனம் சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று தொழிற்பயிற்சி இன்று வழங்கியது. அப்போது முதல் முறை விமானத்தில் பயணிப்பதாக அம்மாணவர்கள் சைகை மொழியில் நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். இதில் தனியார் நிறுவனத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தார்கள்.

News January 29, 2025

விமான நிலையத்தில் கடத்தல் தங்க நகைகள் பறிமுதல்

image

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை இன்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் உடைமையில் 22 கேரட் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் செயின், மோதிரம், பிரேஸ்லெட் என மொத்த நகைகளின் மதிப்பு 22,41,790 ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2025

துணை முதல்வரிடம் திருச்சி எம்.பி கோரிக்கை

image

மணப்பாறையில் நேற்று நடைபெற்ற சாரணிய சாரணர் மாநாட்டில் துணை முதல்வர் உதயநிதியிடம் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கான மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று, அதனை விளைவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆதரவு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை நேற்று திருச்சி எம்பி துரை வைகோ வழங்கினார்.

News January 29, 2025

ஸ்ரீரங்கம்: பிரபல ரவுடி கொலை வழக்கில் 6 பேரை கைது

image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அன்பு என்கிற அன்பரசன் நேற்று சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த தினேஷ் பாபு, சென்னையை சேர்ந்த லோகேஷ், ஸ்ரீரங்கத்தை சேர்ந்த மகா பிரபு, ஐயனார், கோபாலகிருஷ்ணன், ரகுபதி ஆகிய 6 பேரை இந்த கொலை வழக்கில் ஸ்ரீரங்கம் போலீசார் இன்று கைது செய்தனர். மேலும் இரண்டு இருசக்கர வாகனம் மற்றும் மூன்று அறிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

News January 29, 2025

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வாய்ப்பில்லை

image

கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் திருச்சி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். பன்முகத் தன்மை கொண்ட நாடு இந்தியா. பொது சிவில் சட்டத்தை ஒட்டுமொத்த இந்தியாவிலும் அமல்படுத்த வாய்ப்பில்லை. சர்வதேச அளவிலான சாரணர் நிகழ்ச்சி நடத்திய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார். சிறுவயதில் நான் சாரணிய உறுப்பினராக இருந்தேன் என தெரிவித்தார்.

News January 28, 2025

திருச்சி – ராஜஸ்தான் ரயில்களில் கூடுதல் பெட்டிகள்

image

ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்காநகர் – திருச்சி இடையே இயக்கப்படும் ஹம்சாபர் விரைவு ரயிலில் இரு மார்க்கமாகவும் பிப்.3 முதல் பிப்.28 வரையும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்பு பெட்டியும், இதேபோல் திருச்சியில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படும் ஹம்சாபர் விரைவு ரயிலில் இரு மார்க்கமாகவும் பிப்.5 முதல் மார்ச் 1 வரை கூடுதலாக படுக்கை வசதி கொண்ட இரு பெட்டிகளும் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News January 28, 2025

இந்தியாவின் இளைஞர்களுக்கு முன்மாதிரி: அமைச்சர்

image

மணப்பாறை சிப்காட் வளாகத்தில் இன்று மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வரும் பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழாவில், அமைச்சர் அன்பில் மகேஷ் மேடையில் பேசினார். அப்போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கும் முன்மாதிரியாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

News January 28, 2025

உறவினர்கள் சாலை மறியல்: குவிந்த போலீசார்

image

திருச்சி ஸ்ரீரங்கம் மூலத் தோப்பு பகுதியைச் சேர்ந்த அன்புராஜ் இன்று காலை மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டப்பட்டார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். மேலும் அன்புவின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனை முன்பு குவிந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மருத்துவமனை முன்பு குவிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!