India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண, சாரணிய இயக்கம் வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாரண, சாரணிய இயக்க விழாவில் கலந்து கொண்ட மாணவர்களின் ஒற்றுமையும், உற்சாகமும் 5 உலக சாதனை படைத்துள்ளது என்றார்.
மணப்பாறை சிப்காட் பகுதியில் நடைபெற்று வரும் சாரண, சாரணிய வைர விழா மற்றும் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சாரண, சாரணிய இயக்கத்தை மேலும் வலுப்படுத்தும் அளவில், தமிழ்நாட்டில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் தலைமை அலுவலகம் அமைக்கப்படும். மேலும் பயிற்சி அலுவலகமும் அத்துடன் இணைந்து அமைக்கப்படும் என்றார்.
மணப்பாறை சிப்காட் வளாகத்தில் நடைபெறும் பாரத சாரண, சாரணியர் விழாவின் ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். அவரை குழந்தையிலிருந்து நான் பார்த்து வருகிறேன். தற்போது பள்ளி கல்வித்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரின் வளர்ச்சியை பார்க்க என்னுடைய நண்பரும், அவரின் அப்பாவுமான பொய்யாமொழி உயிரோடு இல்லை என முதல்வர் இன்று பேசினார்.
திருச்சி என்ஐடியில் அப்ரண்டிஸ் பணிக்கான காலியிடங்கள் வெளியாகியுள்ளன. இதற்கு டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங், நர்சிங், B.L.I.S முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க பிப்.17 ஆம் தேதி இறுதி நாள் ஆகும். மேலும் தகவலுக்கு nitt.edu என்ற இணைய முகவரியை தொடர்பு கொள்ளவும். SHARE NOW !
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ், எம்எல்ஏக்கள் பழனியாண்டி, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தங்கை சமயபுரம் மாரியம்மனுக்கு வருடாவருடம் தைப்பூசம் அன்று சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி கொள்ளிடம் வடக்கு வாசலுக்கு வரும் மாரியம்மன் தீா்த்தவாரி கண்டருளி எழுந்தருளுவாா். அப்போது அண்ணன் அரங்கநாதா் பட்டுப்புடவை, வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்ட மங்களப் பொருள்களை மேளதாளத்துடன் எடுத்துச் சென்று சீர்வரிசையாக வழங்குவார். திருச்சி மக்களே இதனை மிஸ் பண்ணாதீங்க!
திருச்சி மின்பகிர்மான கோட்ட அலுவலகங்களில், பிப்.4 முதல் அந்தந்தப் பகுதிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. துறையூரில் பிப்.4, முசிறியில் பிப்.7, ஸ்ரீரங்கத்தில் பிப்.14, திருச்சி நகரியத்தில் பிப்.18, திருச்சி கிழக்கில் பிப்.21, மணப்பாறையில் பிப்.25 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு இக்கூட்டங்கள் நடைபெறும் என திருச்சி மின்பகிா்மான கழக மேற்பாா்வை பொறியாளா் தெரிவித்துள்ளார்.
காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு கன்னியாகுமரியிலிருந்து திருச்சி வழியாக பனாரஸுக்கு பிப்.13,17 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்கள் கன்னியாகுமரியிலிருந்து நாகா்கோவில், திருநெல்வேலி, திருச்சி, தஞ்சாவூா், சிதம்பரம், கடலூா், செங்கல்பட்டு, விஜயவாடா, வாராங்கல், நாக்பூா், பிரயாக்ராஜ், மிர்சாப்பூர் வழியாக பனாரஸ் சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இந்தியாவின் 2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே நிர்மலா சீதாராமன் தனது உரையைத் தொடங்கினார். இந்நிலையில் நாடாளுமன்றத்தில் எம்.பிக்கள் அருண் நேரு, கனிமொழி கருணாநிதி, கதிர் ஆனந்த் ஆகியோர் செல்ஃபி மற்றும் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில், போலி சரக்கு விநியோகம் செய்யப்பட்ட விவகாரத்தில் போலீசார் மாமூல் வாங்கியதாக எழுந்த புகாரின் பேரில், திருச்சி எஸ்.பி செல்வ நாகரத்தினம் விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனை அடுத்து கொள்ளிடம் காவல் நிலைய எழுத்தர் மாலதி, காவலர்கள் ராஜேந்திரன், மகாதேவன் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர்.
Sorry, no posts matched your criteria.