India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், உதவித் தொகை, போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 645 மனுக்கள் பெறப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <
திருச்சி மாவட்டம், துறையூரில் யுகேஷ் என்பவரின் நினைவாக வரும் மார்ச் 11,12,13 ஆகிய மூன்று நாள்கள் கபடி நடைபெற உள்ளது. இதில் முதல் பரிசாக ரூ.30,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மூன்றாம் பரிசாக ரூ.15,000, நான்காம் பரிசாக ரூ.10,000 வழங்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுடைய அணிகள் 74181-13432, 82200-87077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW!
கூத்தூரை சேர்ந்த ஸ்ரீனிவாசன் (44) என்பவருக்கு கடன் நெருக்கடி இருந்ததால் இவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று (மார்ச்.07) நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,167 வழக்குகளில் சமரச முறையில் தீர்வு காணப்பட்டு, சமரசத் தொகையாக ரூ.26.92 கோடி வழங்கப்பட்டது. இதை திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவருமான எம்.கிறிஸ்டோபா் தொடங்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளையும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலர் சி.சிவக்குமாா் செய்திருந்தார்.
திருச்சி கலைஞர் அரங்கில் உலக மகளிர் தின நிகழ்ச்சியில் அமைச்சர் கே.என்.நேரு இன்று கலந்து கொண்ட பிறகு செய்திகளை சந்தித்தார். அப்போது ஊடகத்துறையில் விளம்பரம் தேடுவதற்காக தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய் பேசி வருகிறார். இந்த ஆட்சியை எப்படியாவது குறை கூற வேண்டும் என்பதற்காகவே பேசுகிறார். தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி, பெண்கள் பாதுகாப்புக்கான ஆட்சி ஆகும் என்றார்.
சேலம் கோட்டத்தில் ஊஞ்சலூர்-பாசூர் இடையே பொறியியல் பணிகள் நடைபெறுவதால், திருச்சி-ஈரோடு பயணிகள் ரயிலானது (56809) மார்ச் 8, 11, 13, 15 ஆம் தேதிகளில் ஈரோடு-கரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது திருச்சி-கரூர் இடையே மட்டும் இயங்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <
காட்டூரை சேர்ந்த பிரபல ரவுடி இளையராஜா (36). தற்பொழுது குடிபோதைக்கு அடிமையாகி உள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் இரண்டு பெண் குழந்தை மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்ததால் கனகா குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையறிந்த திருவெறும்பூர் போலிசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் ஆலம்பாக்கம் கிராமத்தில் அழுகிய நிலையில் பெண் உடல் இன்று அதிகாலை காணப்பட்டது. இந்த தகவல் அறிந்த கல்லக்குடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.