India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையத்தில் மண்ணச்சநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அந்த வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அப்போது அதில் 200 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தஞ்சை அருகே திருக்கோடிகாவல் மேலத்தெருவை சேர்ந்த ராஜா, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேரை கைது செய்து புகையிலை பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
திருச்சி திண்டுக்கல் சாலையில் தாயனூர் அருகே திருச்சி கேர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கான விடுதிகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மலமிக்கல்பட்டி இருளர் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் திவ்யா என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதை அடுத்து, இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் மாதம் ரூ.23 000 முதல் 78 000 வரையிலான சம்பளத்தில் காலியாக உள்ள 246 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 18 முதல் 26-க்குள் இருக்கும் தகுதியானவர்கள் <
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தலை தடுக்க காவல்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், சட்டம்- 2013 PoSH சட்டம், பணியிடங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குகிறது. பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் இந்த சட்டத்தின்படி நேரடியாக புகார் தெரிவிக்கலாம். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 181 & 1091 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.
திருச்சி காமராஜ் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று (பிப்.28) மக்கும் குப்பை, மக்காத குப்பை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இப்பள்ளியில், மாணவர்கள் பயன்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய பேனாவிற்கு பதிலாக, மறுபடியும் பயன்படுத்தக்கூடிய மை பேனா வழங்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
திருச்சியில் சுற்றித்திரியும் பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் தெரிவிக்க செல்போன் எண்களை திருச்சி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் பிச்சை எடுக்கும் முதியவர்கள், உடல்நலம் குன்றியவர்கள், குழந்தைகளை வைத்துக்கொண்டு பிச்சை பெறுபவர்கள் குறித்த தகவல்களை மாவட்ட குழந்தை பாதுகாப்பு 63691 83413 என்ற செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ஓபிஎஸ் அணி மாநில பொருளாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் மனைவி சரோஜாதேவி நேற்று (பிப்.27) இறந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இன்று தமிழக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் வருகை தந்தார். தற்போது சரோஜாதேவி உடலுக்கு மாலை அணிவித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விசிக தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் திருமாவளவன் இன்று (பிப்.28) காலை அரியலூர் மாவட்டம், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பங்கு பெற்று திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ”இந்தியாவில் ஒரே தேசம் ஒரே மொழி என தமிழக ஆளுநர் மாற்ற நினைக்கிறார். அவர் நினைப்பது ஒரு நாளும் நடக்காது” என தெரிவித்தார்
திருச்சி, பொன்மலைபட்டி காவல் நிலைய போலீசார் நேற்று (பிப்.27) வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த புவனேஷ், பிரபாகரனை சோதனை செய்தபோது, ரூ. 27,700 மதிப்புள்ள 8.682 கிலோ எடையுள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தியது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து, புகையிலை பொருட்கள், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
நேற்று (பிப்.27) திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு கொரியர் ஆபீசில் போதை மாத்திரைகள் பார்சல் இருப்பதாக பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சோதனை செய்தபோது, ரூபாய் 3,000 மதிப்புள்ள போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் போலீசார் சச்சின், உதயசங்கர், மாதேஷ், அபிஷேக் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.