India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு திருச்சி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், கைவிடப்பட்ட குழந்தைகள், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு குற்றம் பற்றியும் புகார் தெரிவிக்க குழந்தைகளுக்கான உதவி எண் 1098 அழைக்க கூறியுள்ளது. மேலும் குழந்தை திருமணத்திற்கு எதிராக குரல் கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் வரும் 9ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பேருந்து நிலையத்தை 15 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி நிர்வாகம் டெண்டர் வெளியிட்டுள்ளது. டெண்டர் கோர விரும்புவர்கள் https://tntenders.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் கடந்த 22-ம் தேதி காலமானார். தொடர்ந்து வாடிகனில் நடைபெற்ற இவரது இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோர் தமிழக அரசின் சார்பில் இன்று கலந்து கொண்டு, மறைந்த போப் பிரான்சிஸ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு பொறுப்பெற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டுமென விசிக வைத்த கோரிக்கை அரசியலுக்காக அல்ல, அது எங்கள் ஆதங்கத்தின் வெளிப்பாடு. வக்ஃபு சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வரும் மே 31 ஆம் தேதி வி.சி.க சார்பில் திருச்சியில் மிகப்பெரிய பேரணி நடத்த உள்ளதாகவும் கூறினார்.
பாங்காக்கில் இருந்து இலங்கை வழியாக நேற்று இரவு திருச்சி விமான நிலையம் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமைகளை சோதனை செய்த போது, அதில் 9.9 கிலோ ஹைட்ரோபோலிக் கஞ்சாவை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 9 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி நடைபெறும் மோசடி குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளிநாட்டு வேலை தொடர்பான மோசடிகளில் இருந்து மக்கள் கவனமாக இருக்க வேண்டுமென்றும், மோசடிகள் குறித்து புகார் தெரிவிக்க, மாவட்ட காவல் அலுவலக உதவி எண் 8939146100 அல்லது அவசர உதவி எண் 100-ஐ பயன்படுத்துமாறு திருச்சி மாவட்ட காலவல்துறை தெரிவித்துள்ளது. இதை மறக்காமல் SHARE செய்யவும்!
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)
விழுப்புரம் – ராமேஸ்வரம் அதிவிரைவு சிறப்பு ரயில் திருச்சி வழியாக இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் – ராமேஸ்வரம் சிறப்பு ரயில் வரும் மே.2ஆம் தேதி முதல் ஜூன்.30 வரை திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக ராமேஸ்வரம் செல்கிறது. இன்று (ஏப்.25) முதல் இதற்கான முன்பதிவு தொடங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 1,299 காலி எஸ்.ஐ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுத படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3 க்குள் https://www.tnusrb.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க
திருச்சி மண்டல தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பில் உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கான ஏப்ரல் மாத பி.எஃப் குறைதீர் கூட்டம் வரும் 28ஆம் தேதி, தென்னூர் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டு பி.எஃப் தொடர்பான குறைகளுக்கு தீர்வு பெறலாம் என பி.எஃப் கமிஷனர் ஆசிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.