India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) 2025-26ல் காலியாக உள்ள Aadhaar Supervisor/ Operator உள்ளிட்ட காலிப்பணியிடங்களை நிரப்பப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 282
3. வயது:18 வயதுக்கு மேல்
4. சம்பளம்: ரூ.20,000
5. கல்வித் தகுதி: 10th,12th, Diploma
6. கடைசி தேதி: 31.01.2026
7.மேலும் தகவலுக்கு: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் Specialist Cadre Officer (SCO) பிரிவின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 1146
3. சம்பளம்: ரூ.51,000 முதல் ரூ.3,00,000
4. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. கடைசி தேதி: 10.01.2026
6. மேலும் தகவலுக்கு:<
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

திருச்சி காந்தி மார்க்கெட் காந்தி சிலை அருகே தோளில் சுமை ஏற்றி சென்று கொண்டிருந்த தொழிலாளி மீது, அவ்வழியாக வந்த பொக்லைன் லாரி இன்று (ஜன.6) மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடலை கைப்பற்றிய காந்தி மார்க்கெட் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து நடத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசின் உதவியோடு இலவசமாக மாட்டுக் கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதன்படி 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-ம், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க. <<18777134>>(பாகம்-2)<<>>

1. கொட்டகை அமைக்க சொந்த இடம் இருக்க வேண்டும்.
2. ஏற்கெனவே மாடு வளர்த்து வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
3. ஆவின் நிறுவனத்திற்கு அதிகளவில் பால் விநியோகம் செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
4. ஆடு கொட்டகை, கோழிக்கூண்டு மானியத் திட்டங்களில் பயன்பெற்றிருக்க கூடாது.
5. இந்த பயனுள்ள தகவலை ஷேர் பண்ணுங்க.

திருச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக டோக்கன் வழங்கும் பணி கடந்த 4 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொகுப்பு வழங்கும் பணி குறித்த புகார்கள் ஏதும் இருப்பின் அதனை சம்பந்தப்பட்ட உணவுப் பொருள் வழங்கள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்களிடம் தெரிவிக்கலாம். மேலும் 0431-2411474 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3000 அடங்கிய தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த பரிசு தொகுப்பானது, திருச்சி மாவட்டத்தில் உள்ள 8,36,824 குடும்பங்களுக்கு, 1302 நியாய விலை கடைகள் மூலம் வழங்கப்படும். அதற்காக வழங்கப்பட்டுள்ள டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியின் அடிப்படையில் பொதுமக்கள் பரிசு தொகுப்பினை பெற்றுகொள்ளலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

தொட்டியம் அடுத்த கைகாட்டி திருச்சி – நாமக்கல் சாலையில் நேற்று கார்த்திகைப்பட்டியை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் ரமணா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் ரமணாவின் டூவீலர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய தொட்டியம் போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொட்டியம் அடுத்த கைகாட்டி திருச்சி – நாமக்கல் சாலையில் நேற்று கார்த்திகைப்பட்டியை சேர்ந்த கோழிக்கடை உரிமையாளர் ரமணா டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் ரமணாவின் டூவீலர் மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலை கைப்பற்றிய தொட்டியம் போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.