India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சியில் மதியம் 1 மணிக்கு கரூர்- ஈரோடு கோவை வழியாக பாலக்காடு டவுன் முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட திருப்பூர் அருகே உள்ள வஞ்சிபாளையம் ரயில்வே யார்டு மாற்றி அமைக்கும் பணியால், மதியம் 1 மணிக்கு பாலக்காடு டவுன் செல்லும் ரயிலானது (16843) திருப்பூர் வரை மட்டுமே இயக்கப்படும் .பாலக்காடு வரை செல்லாது என்று திருச்சி ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 10) வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் 95.23 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 93.10 % பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 97.37% தேர்ச்சி அடைந்துள்ளனர். www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் சட்டத்தின் பரிணாம வடிவங்கள் என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கம் நேற்று நடந்தது.பள்ளியின் செயலாளர் மீனா தலைமை தாங்கினார். உச்ச நீதிமன்றம் முன்னாள் நீதிபதி சஞ்சை கிஷன் கவுல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பள்ளி தலைமை செயல் அதிகாரி சந்திரசேகரன் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் .
திருச்சி மேலப்புதூர் சேர்ந்த சிந்தியா(30). இவர் வலைதளத்தில் பெயர் முகவரியை பதிவு செய்து பணம் செலுத்தினால் ஒரே நாளில் வட்டியுடன் பணம் வரும் என வந்த விளம்பரத்தை நம்பி ரூ.20000 முதலீடு செய்தார். மறுநாள் ரூ.25000 அக்கவுண்ட்டில் வந்தது.மகிழ்ச்சியடைந்த சிந்தியா மீண்டும் பல்வேறு தவணைகளில் ரூ.6,56000 வரை செலுத்தினர். பணம் திரும்பி வராததால் சிந்தியா நேற்று மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் வசந்த உற்சவம் எனும் பஞ்சாபியர் திருவிழா நான்காம் நாள் அம்பாள் வெள்ளி கேடயத்தில் உள் பிரகாரம் புறப்பாடு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில், திருச்சி, சேலம், கரூர், பட்டுக்கோட்டை, நாமக்கல், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி விமானநிலையத்தில் சிங்கப்பூர், துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், கோபம் அடைந்த பயணிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். கடந்த 2 நாட்களாக விமானம் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்க்குவாதம் செய்தனர். இன்றும் சிங்கப்பூர், துபாய் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான கோடை நூலக முகாம் நேற்று தொடங்கியது. மே.30ஆம் தேதி வரை நடைபெரும் இம்முகாமில், பேச்சு பயிற்சி, அறிவியல் விளையாட்டு, ஓவியப்பயிற்சி, வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள நிகழ்ச்சிகள், பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் பள்ளி மாணவ,மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் நிருபர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களையும் அழைத்து முறையாக குடிநீர் வழங்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளும் எந்தெந்த பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளதோ அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று கூறினார்.
கல்லக்குடி புதூர் பாளையம் கிராமத்தில் சியாமளா தேவி அம்மன் கோவில் சித்திரை திருவிழா 5 தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.அதைத்தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சியாமளாதேவி அம்மன் எழுந்தருளினார். இதைய டுத்து புதூர் பாளையம் வானதிரையான் பாளையம் ஆலம்பாக்கம் வடுகர் பேட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி, பஞ்சப்பூரில் பேருந்து முனையத்தின் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.இந்த பேருந்து முனையமானது ரூ.350 கோடி செலவில் அதிவேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது.இது மட்டுமல்லாமல் பேருந்து முனையத்தில் ஏசி வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு மையம், ஒலிம்பிக் அகாடமி,மொத்தம் 404 அரசு பேருந்துகள் நிறுத்துவதற்கு தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.