India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துபாயிலிருந்து திருச்சிக்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான பயணிகளை நேற்று சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு ஆண் பயணியின் மலக்குடலில் வைத்த தங்கம் கடத்தி வந்தது தெரிய வந்தது. 462 கிராம் எடையுள்ள அந்த தங்கத்தின் விலை 33.23 லட்சம் ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்
திருச்சி கிழக்கு எம்எல்ஏ இனிகோ இன்று அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசின் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சுமார் 2½ லட்சம் பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் ரூ.35 லட்சம் தொழிலாளர்களுக்கு பரிசோதனை நடத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதனால் இந்த திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று மாலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து புதுக்கோட்டை சென்று, திருமயத்தில் உள்ள காலபைரவர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். விமான நிலையம் வந்த அமித் ஷாவை பாஜகவின் முக்கிய நிர்வாகிகள் வரவேற்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் ஜுன் 1,2,3-ம் தேதிகளில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஜூன் 1,2 ஆகிய தேதிகளிலும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஜூன் 3-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
வாரணாசியிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை மாலை 3. 20 மணிக்கு வரும் அமித்ஷா பின்னா், ஹெலிகாப்டா் மூலம் புதுக்கோட்டை சென்று, திருமயத்தில் உள்ள காலபைரவா் கோயிலில் தரிசனம் செய்து விட்டு மீண்டும் திருச்சிக்கு வந்து மாலை 5. 25 மணிக்கு தனி விமானத்தில் திருப்பதி செல்கிறாா்.
இதையொட்டி திருச்சி விமான நிலையத்துக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் கடந்த 13.5.2024ம் தேதி உறையூர் பகுதியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை வழிப்பறி செய்ததாக முருகன் என்கிற வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர் மீது லாட்டரி சீட்டுகள் விற்பனை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்ததால்,இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று உத்தரவிட்டார்.
திருச்சி, துறையூர் அடுத்துள்ள காஞ்சேரி மலை புதூர் பகுதி சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் செல்வக்குமார்
இவர் அரசு பேருந்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று தனது இருசக்கர வாகனத்தில் திருச்சியில் இருந்து துறையூர் வந்து கொண்டிருந்தபோது புலிவலம் அருகே எதிரே வந்த வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாடு சுதந்திரம் அடைந்த நாட்களில் வந்த கார் முதல் பழைய கார்கள் மற்றும் 1942 பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களின் கண்காட்சி திருச்சி டி.ஜே அழகேந்திரன் ஆட்டோ மொபைல்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பாக திருச்சி பறவைகள் சாலை பகுதியில் இன்று முதல் துவங்கியது. இந்த கண்காட்சியை தொடரான பார்வையாளர்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.அதில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்ததில் பயணி ஒருவரிடம் நீ கேப் போன்று அணிந்து தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் பயனியிடம் விசாரிக்கின்றனர். மேலும் அந்த பயணி கடத்தி வந்த தங்கத்தின் மதிப்பு 1 கோடியே 3 லட்சத்தி 13 ஆயிரத்து 257 ஆகும்.
அண்ணா அறிவியல் மையம் என்ற கோளரங்கம், திருச்சி-புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த அண்ணா அறிவியல் மையம், தமிழக அரசால் ஜூன் 10, 1999 அன்று திறக்கப்பட்டது. இந்த கோளரங்கத்தின் மையமாக, சுற்றுச்சூழல் அமைப்புகள், உயிர்-புவிசார் வேதியியல் சுழற்சிகள், உயிர்-வேறுபாடு மற்றும் பாதுகாப்பு உள்ளன. இதில் “ஷார்க் தீவு”, மேஜிக் ஷோ, ரோலர் கோஸ்டர் போன்ற பல முப்பரிமாணப் படங்கள் உள்ளது.
Sorry, no posts matched your criteria.