India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

திருச்சி மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று திருச்சி வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பூங்கொத்து வழங்கி வரவேற்பளித்தார். இந்நிகழ்வில் அரசு துறை அலுவலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், திருச்சி மாவட்ட மக்கள் 0431-2420166 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

பொதுமக்களின் நலன் கருதி திருச்சி காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘தெரியாத வங்கி கணக்கிலிருந்து தவறுதலாக உங்களுக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளதாக அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.! இது உங்கள் வங்கி கணக்குகளை முடக்குவதற்கு அல்லது ஹேக் செய்வதற்கு பொறியாக இருக்கலாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மக்களே, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அனைத்து இடங்களிலும் விதிமுறைகளுக்கு உட்பட்டு போட்டிகள் நடத்தப்பட வேண்டும். போட்டியில் பங்கேற்பவர்களும், காளையின் உரிமையாளர்களும் விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9843072080) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-II, IIA, குரூப்-IV தேர்வுகளை போட்டி தேர்வர்கள் சிறப்பாக எதிர்கொள்ளும் வகையில், சிறப்பு கட்டணமில்லா பயிற்சி வகுப்பு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 20-ம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் துவங்கப்பட உள்ளது. இதில் தேர்வர்கள் கலந்து கொண்டு பயனடையலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

திருச்சி, துவாக்குடியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், பொய்கைக்குடிக்கு அருகே மலையடிப்பட்டியில் கமலவல்லி நாச்சியார் சமேத கண்நிறைந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கண் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், பெருமாளுக்கு அமாவாசை அல்லது சனிக்கிழமை ஆகிய நாட்களில் கண்மலர் சாற்றி அர்ச்சனை செய்தால் கண் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.

தமிழக அரசு சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் டெலிவரி தொழிலாளர்களுக்கு மின்சார இரு சக்கர வாகனம் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tnuwwb.tn.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆவணங்களை பதிவேற்றி வேண்டும். மேலும் இ-சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். SHARE IT.
Sorry, no posts matched your criteria.