India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி எம்பி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில் 10வது சுற்றில் மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். நட்சத்திர வேட்பாளராக களமிறங்கிய இவர் முதன்முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். ஒருவேளை இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்க நேர்ந்தால் மத்திய இணை அமைச்சர் பதவி இவருக்கு கிடைக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதியில், 2.30 மணி நேர நிலவரப்படி எண்ணப்பட்ட மொத்த வாக்குகள் விவரம்:
10 ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி,
மதிமுக – துரை வைகோ – 2,62,511
அதிமுக – கருப்பையா – 1,09,762
அமமுக – செந்தில்நாதன் – 55,547
நா.த.க – ராஜேஷ் – 49759
1,52,749 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் இன்று மதியம் 2 மணி நேர நிலவரப்படி 9-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துரை வைகோ – 2,23,921, அதிமுக – கருப்பையா – 97,796, அமமுக – செந்தில்நாதன் – 48,339, நா.த.க – ராஜேஷ் – 43,983, 1,26,125 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகுத்து வருகிறார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 1.25pm மணி நேர நிலவரப்படி 8-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.மதிமுக சார்பில் துரை வைகோ – 2,00,638 வாக்குகளும்,அதிமுக வேட்பாளர் கருப்பையா – 89,416வாக்குகளும்,அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் – 43,318 வாக்குகளும்,
நா.த.க – ராஜேஷ் – 40,066 வாக்குகளும் பெற்றுள்ளனர்.1,11,216 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை.
திருச்சி மக்களவை தொகுதியில் 7வது சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,77, 603 வாக்குகள் பெற்று 97,914 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 79, 689 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார். அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 39,176 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 35,449 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதியில் மொத்த வாக்குகள் 12.30 pm மணி நேர நிலவரம்:
6-வது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
மதிமுக – துரை வைகோ – 145883, அதிமுக – கருப்பையா – 66,738, அமமுக – செந்தில்நாதன் – 30,985, நாதக – ராஜேஷ் – 30,335 வாக்குகள் பெற்றுள்ளனர். 79,145 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
பெரம்பலூர் மக்களவை தேர்தல் முடிவு விவரம் அறிவிக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.என்.அருண் நேரு இரண்டாம் சுற்று முடிவில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதை தொட்டியம் திமுக மகளிர் அணியினர் கொண்டாடி வருகின்றனர். தொட்டியம் யூனியன் சேர்மன் கிருஷ்ணவேணி தலைமையில் மகளிர் அணியினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டாடினர்.
திருச்சி மக்களவை தொகுதியில் 11.55 மணி நிலவரப்படி மதிமுக வேட்பாளர் துரை வைகோ 1,24,648 வாக்குகள் பெற்று 66,733 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் கருப்பையா 57,915 வாக்குகள் பெற்று 2ஆம் இடத்தில் உள்ளார்.
அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 23,588 வாக்குகள் பெற்று 3ஆம் இடத்தில் உள்ளார். நாதக ராஜேஷ் 26,285 வாக்குகள் பெற்றுள்ளார்.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் 100வது நிகழ்ச்சியாக திருச்சி, திருவெறும்பூா் அருகே காட்டூா் ஆயில் மில் பகுதியில் கருணாநிதியின் உருவச் சிலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை வகித்தார். நகராட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார்.
திருச்சி பாராளுமன்ற தொகுதி, மொத்த வாக்குகள் இன்று காலை 11.30 மணி நேர நிலவரபடி, திமுக கூட்டணி சார்பில் மதிமுக – துறை வைகோ – 98,62, அதிமுக – கருப்பையா – 45815, அமமுக – செந்தில்நாதன் – 17,459, நாதக – ராஜேஷ் – 21,280, 58,807 வாக்குகள் வித்தியாசத்தில் துரை வைகோ தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
Sorry, no posts matched your criteria.