India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை 9 மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஜூன்.19,20,21 ஆகிய 3 தினங்களுக்கு ஆட்சியர் அலுவலக பின்புறம் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 45,895 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டுள்ளது என்றும், அதனைத்தொடர்ந்து, 31 கிலோமீட்டருக்கு மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இறுதியாக ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ அபிஷேகபுரம் பகுதிகளில் மொத்தம் 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த 26 கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, திருச்சியை சுற்றி திரியும் 45 நாய்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிரிக்கப்பட்டு, நாய்கள் கருத்தடை மையத்தில் மருத்துவகுழு மூலம் இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் நேற்று திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஸ்டூடண்ட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மரத்தில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, செசென்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை.
சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினா் பயனடையும் வகையில் டாம்கோ திருச்சி மாவட்டத்துக்கு இந்தாண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ திட்டங்களுக்கு 18 வயது ஆனவராகவும் , 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரைச் சுற்றி திரிந்த 47 நாய்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு, நாய்கள் கருத்தடை மையத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த கோ-அபிஷேகபுரம் பகுதியில் இன்று 15 மாடுகள் பிடிபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் செந்தில்நாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் மண்ணின் மைந்தனான எனக்கு, களப்பணியாற்றிய ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் மனமார்ந்த நன்றிகள் என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18000 மானியத்தில் மா,கொய்யா, தென்னை, எலுமிச்சை கன்றுகள் வழங்கப்படவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
திருச்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை துறை மூலம் உழவர் சந்தைகளில் காய்கறி வரத்தை அதிகரிக்க இதற்கான இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் விவரங்களை http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் வருகின்ற 15.6.2024ம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை அனைத்து நியாய விலை அங்காடிகளில் பொது விநியோகத் திட்ட குறைத்தீர்க்கும் நாள் கூட்டம் தனி வட்டாட்சியர் அவர்களால் நடத்தப்பட உள்ளது.எனவே பொதுமக்கள் இதில் கலந்துகொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.