India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 17 கிலோமீட்டர் மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அதனை தொடர்ந்து, பல்வேறு பகுதிகளில் 50,280 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டது. இறுதியாக திருச்சியில் இன்று 17 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது என திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சியில், பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் கடைகள் அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அந்த வகையில் உறையூர் டாக்கர் ரோட்டில் அனுமதி இன்றி போக்குவரத்து மற்றும் நடைபாதைக்கு இடையூறாக இருந்த கடைகளை அகற்றும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.திருச்சி மாநகராட்சி உதவி ஆணையர் முன்னிலையில் சுகாதார மேற்பார்வையாளர்கள்,மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபட்டனர்.
திருச்சியில் தள்ளுவண்டி வியாபாரியிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வழக்கில் ரவுடி ராஜா என்பவரையும், வீட்டினுள் அத்துமீறி நுழைந்து பணம்,விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை திருடியதாக வெற்றிவேல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் விசாரணையில் 2 பேர் மீதும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்ததால், இவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி கமிஷனர் இன்று உத்தரவிட்டார்.
திருச்சியில் நாளை (19.06.2024) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தென்னூர் துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு பகுதிகளுக்கு செல்லக்கூடிய அனைத்து பகுதிகளிலும் மின்விநியோகம் காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி வரை இருக்காது என செயற்பொறியாளர் தெரிவித்தார்.
திருச்சி அருகே திருவெறும்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், திருவெறும்பூர் வளர்ச்சி அலுவலர் ராஜா, மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துகருப்பன் ஆகிய இருவரும் ஜமாபந்தியில் கலந்து கொள்ளவில்லை. அப்போது பங்கேற்காது ஏன்? என மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கேட்டார். மேலும், இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ஆட்சியர் தாசில்தாருக்கு உத்தரவிட்டார்.
திருச்சி காந்தி மார்க்கெட் போலீசார் ஜெயில் பேட்டை பகுதியில் ரோந்து சென்ற போது சந்தேகத்திற்கு இடமாக பெண் உள்பட 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் கான்ஸ், விமல், புகையிலை உள்ளிட்ட தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் வைத்திருந்தது தெரிய வந்தது. சுமார் 15 கிலோ எடையுள்ள போதைபொருள் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ளது. மேலும், அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாளை எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையம் வருகை தருகிறார். அதனால் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாநகரில் உள்ள மசாஜ் சென்டரில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார் பாலக்கரை பகுதிகளில் இன்று தீவிர ரோந்து சென்றனர். அப்போது மேலப்புதூர் பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் உள்ள மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனையின் போது அங்கு விபச்சாரம் நடந்தது தெரியவந்தது, வாலிபரை கைது செய்தனர்.
தெற்கு ரயில்வேக்கு திருச்சி மக்கள் மீண்டும் ஒரு கோரிக்கையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் தனியாக இயக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்க திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் அது திருச்சி, சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
துவாக்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞருக்கும் தகராறு இருந்துள்ளது. கடந்த 12ஆம் தேதி மணிகண்டனை சஞ்சய் சுமன் உள்ளிட்ட 3 பேர் அரிவாளால் வெட்டி உள்ளனர். இதுகுறித்து மணிகண்டன் உறவினர்கள் துவாக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Sorry, no posts matched your criteria.