Tiruchirappalli

News June 14, 2024

தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி பங்கேற்றால் பணி உறுதி

image

மத்திய பொருட்கள் நிறுவனம் காதி கிராம தொழில் வாரியம் சார்பில் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சி தேவர் ஹாலில் 10 நாட்கள் நடைபெறும். இந்த பயிற்சியில் தங்கத்தின் விலை கணக்கிடும் முறை உரை கல்லில் தங்கத்தின் தரம் அறிதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 94437284 38 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தலைமை பயிற்சியாளர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

துறையூர் – கண்ணனூர் அரசு பள்ளிக்கு முதல்வர் சான்றிதழ்

image

துறையூர் வட்டம் கண்ணனூர் அரசு உயர்நிலைப்பள்ளி நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100% தேர்ச்சி பெற்றது. இதையடுத்து, இன்று சென்னையில் நடந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழை பள்ளி தலைமை ஆசிரியர் பெரியசாமியிடம் வழங்கினார். இதில், அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, எம்பி கலாநிதி மாறன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

News June 14, 2024

திருச்சி: மாற்றுத்திறனாளிகளுக்கு ஓர் அரிய வாய்ப்பு

image

திருச்சி மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகமும் இணைந்து ஜூலை 2024 முதல் மார்ச் 2025 வரை 9 மாதத்திற்கு மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயண அட்டை புதுப்பித்து வழங்கப்பட உள்ளது. ஜூன்.19,20,21 ஆகிய 3 தினங்களுக்கு ஆட்சியர் அலுவலக பின்புறம் இந்த சிறப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

News June 14, 2024

திருச்சியை சுற்றி 45 ஆயிரம் கிலோ தூசி நீக்கம்.!

image

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று 45,895 கிலோ தூசி மற்றும் வடிகால் வண்டல் நீக்கப்பட்டுள்ளது என்றும், அதனைத்தொடர்ந்து, 31 கிலோமீட்டருக்கு மழை நீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்றது. இறுதியாக ஸ்ரீரங்கம், அரியமங்கலம், கோ அபிஷேகபுரம் பகுதிகளில் மொத்தம் 15 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தனர்.

News June 14, 2024

திருச்சி-காலையிலேயே களத்தில் இறங்கிய பணியாளர்கள்.!

image

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த 26 கால்நடைகள் பிடித்து அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் தெரிவிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து, திருச்சியை சுற்றி திரியும் 45 நாய்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிரிக்கப்பட்டு, நாய்கள் கருத்தடை மையத்தில் மருத்துவகுழு மூலம் இன கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.

News June 14, 2024

திருச்சி அருகே விபத்து; மரணம் 

image

திருச்சி கருமண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனசுந்தரம். இவர் நேற்று திருச்சி நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள ஸ்டூடண்ட் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக மரத்தில் மோதினார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, செசென்ஸ் கோர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை.

News June 14, 2024

திருச்சி மாவட்டத்தில் சிறுபான்மையினருக்கு கடன் உதவி

image

சிறுபான்மையினருக்கு கடன் வழங்க டாம்கோ மூலம் நிகழாண்டு ரூ.2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிறுபான்மையினா் பயனடையும் வகையில் டாம்கோ திருச்சி மாவட்டத்துக்கு இந்தாண்டுக்கு ரூ. 2.95 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. டாம்கோ திட்டங்களுக்கு 18 வயது ஆனவராகவும் , 60 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

News June 13, 2024

47 நாய்கள்,15 மாடுகள் பிடிப்பு.. தகவல்.!

image

திருச்சி மாநகராட்சி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்சி மாநகரைச் சுற்றி திரிந்த 47 நாய்கள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் பிடிக்கப்பட்டு, நாய்கள் கருத்தடை மையத்திற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள கொண்டு செல்லப்பட்டது. அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக சுற்றித்திரிந்த கோ-அபிஷேகபுரம் பகுதியில் இன்று 15 மாடுகள் பிடிபட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

News June 13, 2024

நன்றி அறிக்கை வெளியிட்ட அமமுக செயலாளர்.!

image

திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகச் செயலாளர் செந்தில்நாதன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நடந்து முடிந்த திருச்சி நாடாளுமன்ற தேர்தலில் மண்ணின் மைந்தனான எனக்கு, களப்பணியாற்றிய ‘தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் உறுதுணையாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் மனமார்ந்த நன்றிகள் என கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News June 12, 2024

திருச்சி விவசாயிகளை உடனே அப்ளை பண்ணுங்க

image

திருச்சி மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகளுக்கும், கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும் எக்டர் ஒன்றிற்கு ரூ.18000 மானியத்தில் மா,கொய்யா, தென்னை, எலுமிச்சை கன்றுகள் வழங்கப்படவிருக்கிறது. மேலும் விவரங்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!