Tiruchirappalli

News July 14, 2024

திருச்சி ஸ்டெம் பூங்காவில் VR தொழில்நுட்பம்!

image

ஸ்ரீரங்கம் ஸ்டெம் பூங்காவில் திருச்சி மாநகராட்சி சார்பில் 24 பேர் அமர்ந்து பார்க்கும் வகையில் VR தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வீடியோக்களை தரவிறக்கம் செய்து பார்க்க முடியும். ஒருவருக்கு தலா 30 நிமிடங்கள் வரை அனுமதி அளிக்கப்படுகிறது. நுழைவு கட்டணமாக மாணவர்களுக்கு ரூ.30 முதல் 50 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் இன்று தெரிவித்துள்ளது.

News July 14, 2024

திருச்சி கமிஷனர் கடும் எச்சரிக்கை

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள வீட்டு குடிநீர் இணைப்புகளில், மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் உறிஞ்சுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். இதில் தண்ணீரை உறிஞ்ச பயன்படுத்திய 4 மின் மோட்டார்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி கமிஷனர் சரவணன் எச்சரித்துள்ளார்.

News July 14, 2024

திருச்சி – காரைக்குடி ரயில் மாற்றம்

image

மதுரை ரயில்வே கோட்ட வழித்தடங்களில் தற்போது பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதையடுத்து திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தினமும் காலை 10.15 மணிக்கு புறப்படும் காரைக்குடி டெமு ரயில் இம்மாதம் முழுவதும் 4 மணி நேரம் 15 நிமிடம் தாமதமாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே காரைக்குடி செல்லும் பயணிகள் அனைவரும் மதிய நேரத்தில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 13, 2024

திருச்சி – மலேசியா இடையே கூடுதல் விமானம்

image

திருச்சி – கோலாலம்பூர் இடையே பதிக் ஏர் விமான நிறுவனம் தன்னுடைய விமான சேவைகளை தினசரி 2ஆக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பாலும், பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன்பேரிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News July 13, 2024

திருச்சி: காவிரி ஆற்றில் 106 கோடி மதிப்பில் புதிய பாலம்

image

திருச்சி சிந்தாமணி பகுதியில் இருந்து ஸ்ரீரங்கத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இரும்பு பாலம் பழுதடைந்ததால் அதே இடத்தில் மேலும் ஒரு பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்நிலையில், பாலத்தின் விவரம் வெளியாகியுள்ளது. நீளம் 545 மீட்டரும், அகலம் 17.75 மீட்டரும், அதற்கான மொத்த செலவு 106 கோடி ஆகும் என கணக்கிடப்பட்டுள்ளது.

News July 13, 2024

திருச்சியில் 3,185 பேர் தேர்வு எழுதவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் குரூப்-1 தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை எழுத திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9904 நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இன்று தேர்வினை எழுத 6719 நபர்கள் மட்டும் வருகை தந்தனர். மீதம் 3,185 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்தத் தேர்வானது திருச்சியில் மொத்தம் 31 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது.

News July 13, 2024

திருச்சியில் துப்பாக்கி சுடும் போட்டி

image

தேசிய மாணவர் படையின் 17  இயக்குநகரங்களுக்கு இடையிலான, தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடும் போட்டிகள் திருச்சியில் தனியாா் விளையாட்டுப் பயிற்சி மையத்தில் ஜூலை 12ஆம் தேதி தொடங்கியது. இதில், நாடு முழுவதும் மொத்தம் 17 அணிகளைச் சேர்ந்த 300 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா். துப்பாக்கியை கையிலேந்தி நின்ற நிலையிலும், மண்டியிட்டும், 2 மணி நேரத்துக்குள் 50 மீட்டா் தொலைவு இலக்கை குறிபாா்த்தனர்.

News July 13, 2024

ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்த அமைச்சர் 

image

திருச்சி மாவட்டம் கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மரக்கடை பகுதியில் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதில் சட்ட மன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், திமுக மாநகர, நகர, மற்றும் பேரூராட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கொண்டனர்.

News July 12, 2024

திருச்சியில் இடி மின்னலுடன் மழை

image

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 12, 2024

திருச்சி: நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் நிகழ்வில் ரூ. 248.61 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற 324 திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், ரூ.106 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.99.26 கோடி மதிப்பீட்டில் 6,176 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்கள்.

error: Content is protected !!