Tiruchirappalli

News July 7, 2024

தேர்வுகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் யு பி எஸ் சி – நர்சிங் ஆஃபீசர், ESIC தேர்வுகள் இன்று நடைபெற்றன. இந்த நிலையில் திருச்சி பெரியார் ஈவேரா கல்லூரியில் உள்ள தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

News July 7, 2024

திருச்சி:முதலமைச்சரின் வருகை திடீர் ரத்து

image

இன்று புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதியின் இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் திருச்சிக்கு இன்று மாலை 5 மணி அளவில் வருகை தந்து, அங்கிருந்து சாலை மார்க்கமாக புதுக்கோட்டை சென்று மாலை நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தது. இந்த நிலையில் சில காரணங்களால் தற்போது திடீரென இந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

News July 6, 2024

திருச்சி: ட்ரோன்கள் பறக்க தடை

image

முதல்வர் ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக நாளை புதுக்கோட்டை வருகிறார். விமானத்தின் மூலம் திருச்சி வரும் அவர், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கார் மூலம் செல்ல உள்ளார். இதனால், அரசு பாதுகாப்பு காரணம் கருதி திருச்சி – புதுகை சாலைகளில் இன்று மாலை 6 மணி முதல் நாளை 7ம் தேதி முழுவதும் ட்ரான்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

News July 6, 2024

திருச்சியில் நாளை யுபிஎஸ்சி தேர்வு 

image

திருச்சி மத்திய அரசு பணியாளர் யுபிஎஸ்சி சார்பில் இபிஎஃப்ஓ தனி உதவியாளர் மற்றும் இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர்களுக்கான தேர்வு நாளை(7ம் தேதி) காலை 9.30 மணி முதல் 11:30 மணி வரை, பிற்பகல் 2 முதல் 4 மணி வரையிலும் நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் ஒன்பது மையங்களில் நடைபெறும் தேர்வை 3,370 தேர்வாளர்கள் எழுத உள்ளனர். இத்தகவலை கலெக்டர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

News July 5, 2024

நாட்டுப்புற கலை பயிற்சி; ஆட்சியர் அழைப்பு

image

திருச்சியில் நாட்டுப்புற கலை பயிற்சி மைய மாவட்ட அரசு இசைப்பள்ளியில் இலவசமாக நாட்டுப்புற கலை பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் நாடகம், கரகாட்டம்,சிலம்பாட்டம் முதலிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் சேர்ந்து கொள்ளலாம். இந்தப் பயிற்சி மையத்தில் ஆண்டு கட்டணமாக ரூ.500 செலுத்தினால் போதும். மேலும் தகவலுக்கு 0431-2962942 என்ற எண்ணை தொடர்பு கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News July 5, 2024

ரவுடியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார்

image

கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன் என்பவரை படுகொலை செய்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கலைப்புலி ராஜாவை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சிறுகனூர் அருகே அவர் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று பிடிக்க முயன்ற போது அவர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். ராஜா தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

News July 5, 2024

ரூ.1.16 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் 

image

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு சிங்கப்பூரிலிருந்து வந்த ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஆண் பயணி ஒருவர் மூட்டுக்கு போடும் நீ கேப்ஸில் 1 கிலோ 65 கிராம் எடையுள்ள தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவற்றின் இந்திய மதிப்பு ரூ.1 கோடியே 16 லட்சம் என அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

News July 5, 2024

ஆசிரியர் பணிக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில், காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும் ஆசிரியர் தகுதி தேர்வில் டெட் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பத்தினை நேரடியாகவோ அல்லது potribaltry@gmail.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார்.

News July 4, 2024

திருச்சி விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு

image

திருச்சி மாவட்டத்தில் காரீப் பருவத்தின் தோட்டக்கலை பயிர்களான, வாழை, வெங்காயம், மரவள்ளி மற்றும் மஞ்சள் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் அந்தநல்லூர்,மணிகண்டம், திருவெறும்பூர்,முசிறி, துறையூர்,வையம்பட்டி, மணச்சநல்லூர் வட்டாரங்களில் பயிர் காப்பீட்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பீர்காவில் 2024-2025ம் ஆண்டு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து கொள்ள ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

News July 4, 2024

திருச்சி:கோர்ட்டில் ஆஜர் ஆகும் அண்ணாமலை!

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். அதில், என்னைப் பற்றி தொடர்ந்து அவதூறாக கருத்துக்களை தெரிவித்து வரும் திமுக செய்தி தொடர்பாளர் ஆர் எஸ் பாரதிக்கு ரூ.1கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு இதுவரை பதில் இல்லை. எனவே, இதை அவதூறு வழக்காக மாற்றி வரும் செவ்வாய்க்கிழமை நானே நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வழக்கை நடத்தவிருக்கிறேன் என்றார்.

error: Content is protected !!