Tiruchirappalli

News January 29, 2026

திருச்சி: காவல் ஆய்வாளருக்கு 3 ஆண்டு சிறை

image

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் சாமுவேல் ஞானம் என்பவர் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வீரங்கிநல்லூரை சேர்ந்த புகார்தாரர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்யாமல் இருக்க ரூ.50,000 லஞ்சம்பெற்ற அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதம் விதித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News January 29, 2026

திருச்சி: அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி

image

திருச்சி மாவட்டம் வளநாட்டைச் சேர்ந்தவர் வளையல் வியாபாரியான ராமு. இவர் நேற்று பொன்னக்கோன்பட்டி கிராமத்தில் நடைபெற்ற வளைகாப்புக்கு சென்று வளையல் கொடுத்துவிட்டு வீட்டிற்கு திரும்பி சென்றார். அப்போது கல்லாமேடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது அரசுப் பேருந்து மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வளநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News January 29, 2026

திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

image

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

image

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 29, 2026

திருச்சி: டாஸ்மாக் விடுமுறை அறிவிப்பு

image

வடலூர் ராமலிங்கர் நினைவு நாளை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் வரும் பிப். 1ஆம் தேதி மூடப்பட்டிருக்கும். மேலும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் FL1/FL2/FL3/FL3A/FLFL3AA & FL11 ஆகிய ஹோட்டல் பற்களும் மதுபானம் விற்பனை இன்றி மூடப்பட்டிருக்கும். அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News January 28, 2026

திருச்சி: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

திருச்சி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

திருச்சி: இனி WhatsApp-இல் பட்டா, சிட்டா…

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது. அதற்கு
1. 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2. WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க.
3. மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்ந்தெடுங்க.
4. நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
5. இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.!

News January 28, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும் .அல்லது <>இங்கே கிளிக் <<>>செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 28, 2026

திருச்சி: பட்டாவில் பெயர் மாற்ற வேண்டுமா?

image

திருச்சி மக்களே பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம்.. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 28, 2026

திருச்சி: மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை

image

மணப்பாறை அடுத்த செவலூரைச் சேர்ந்த நவப்பிரியா என்பவருக்கும், அவரது மாமியார் செல்வராணிக்கும் நேற்று பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நவப்பிரியா தனது கணவரின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கம் ஆர்டிஓ மற்றும் மணப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!