India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மாற்று திறனாளிகளிடமிருந்து நேரடியாக மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பயனாளிகளுக்கு உறுதியளித்தார். மேலும் இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருச்சிக்கு வருகை தருகிறார். இதையடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும் என திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி, புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார், திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு செல்லும் அரசு பேருந்து நேற்று நள்ளிரவு முருங்கப்பேட்டை பகுதியில் எதிரில் வந்த ஆட்டோ மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்டோவில் பயணித்த அனைவரும் திருச்சி தில்லை நகர் வடவூர் பகுதி சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
திருச்சி மாநகராட்சியால் சாலை விரிவாக்க பணிகளுக்காக நாளை (22.07.2024) மரங்களை வெட்டும் பணிகள் மேற்கொள்ள உள்ளது. ஆகையால் 33 கே.வி. E.B. ரோடு துணை மின் நிலையத்திலிருந்து செல்லும் 11கி.வோ. வெல்லமண்டி உயரழுத்த மின்பாதையில் நாளை (22.07.2024) காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின்சார நிறுத்தம் செய்யப்பட உள்ளது.துவரங்குறிச்சி சுற்றுவட்டார பகுதியிலும் மின்தடை அறிவிக்கபப்ட்டுள்ளது
திருச்சி மாவட்டம் பிஷப் ஹீபர் பள்ளியில் 326 தேர்வர்களும், ஹோலி கிராஸ் பள்ளியில் 318 தேர்வர்களும், ஆர்.சி பள்ளியில் 333 தேர்வர்களும், செயின்ட் ஜேம்ஸ் பள்ளியில் 143 தேர்வர்கள் என இன்று 4 தேர்வு மையத்தில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வினை மொத்தம் 1120 பேர் எழுதினர். இதற்கு 1167 பேர் விண்ணப்பித்த நிலையில் 47 பேர் தேர்வு எழுத வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி செயின்ட் ஜேம்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தேர்வு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வசதிகள் குறித்தும், மாணவர்களின் வருகை குறித்தும், வினாத்தாள்கள் குறித்தும் கேட்டார்.
திருச்சி மாவட்டத்தில் அக்னி பாத் திட்டத்தின் கீழ் அக்னி வீர் வாயு ஆள்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இதற்கு திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் வருகிற 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திய விமானப்படை அறிவித்திருந்தது. மேலும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வை கண்டித்தும், நியாய விலை கடைகளில் பருப்பு பாமாயில் விலை உயர்வை கண்டித்தும் அதிமுக சார்பில் வரும் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் இன்று அறிவித்துள்ளார். திருச்சி பொன்மலை திருவிக திடலில் நடைபெற உள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.
திருச்சி கண்டோன்மெண்ட் போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று பெற்றோர்களின் கவனத்திற்கு ஒரு அறிவிப்பை போஸ்டராக திருச்சி முழுவதும் ஒட்டி உள்ளனர். 18 வயது கீழ் உள்ளவர்கள் இரு சக்கர வாகனம், 4 சக்கர வாகனம் ஓட்டக்கூடாது. மீறி ஓட்டினால் பெற்றோருக்கும், வாகன உரிமையாளருக்கும் ரூ.25,000 மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும் ஓட்டிய வாகனத்தின் RC BOOK ஓராண்டு வரை தடை செய்யப்படும்.
திருச்சியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ,செயல்வீரர்கள் கூட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சிக்கு உண்மையாக உழைத்தால் காங்கிரசில் இடமுண்டு.மேலும், தற்போது காங்கிரஸ் கட்சிக்கு 18 எம்எல்ஏக்கள் உள்ளனர்.2026-ல் காங்கிரசிற்கு 100 எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்றார்.
Sorry, no posts matched your criteria.