India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மண்ணச்சநல்லூர் அடுத்த அய்யம்பாளையம் தரகுகாரன்கொட்டம் பகுதியைச் சேர்ந்தவர் நமீதா. இவர் திருச்சியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று மாலை தனது தாயாருடன் மோட்டர் சைக்கிளில் சென்ற போது, நாடார்பள்ளம் பகுதியில் டிராக்டர் மோதியது. அதில் நமீதா படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் அவரது தாயாரை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

கரூர், சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் அமிர்தம் (44). அங்கன்வாடி சமையலரான இவர் சம்பவத்தன்று டூவீலரில் சென்று கொண்டிருந்த போது கருங்குளம் என்ற இடத்தில் நாய் குறுக்கே வந்ததால் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், செயல்படுத்தப்படும் இலவச மாட்டுக் கொட்டகை அமைக்கும் திட்டத்தில் மாட்டு கொட்டகை அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. அதில் 4 மாடுகள் வரை வைத்திருந்தால் ரூ.79,000-மும், 5 முதல் 10 மாடுகள் வரை இருந்தால் ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற விரும்புவோர் உங்கள் பகுதி வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

திருச்சி மக்களே உங்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். இதனை SHARE செய்து மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்க.

திருச்சி மக்களே கேஸ் சிலிண்டர் புக் பண்ண இனி ஒரு மிஸ்டு கால் கொடுத்தா போதும். அதற்கு Bharatgas: 77150 12345, HP: 94936 02222, Indane: 84549 55555 ஆகிய எண்களுக்கு மிஸ்டு கால் கொடுத்தா… கேஸ் புக் பண்ண SMS உங்க போனுக்கு வரும்.சிலிண்டர் இணைப்புடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்துதான் மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.!

தமிழகத்தில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர், கிளை மேலாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2019
3. வயது – 18 – 40
4. சம்பளம்: ரூ.29,380
5. தகுதி: 10 ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 16.02.2026
7. விண்ணப்பிக்க: <
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

திருச்சி, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முசிறிக்கு முன்னதாக துடையூர் அருகே திருச்சியில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற லாரி சாலையின் அருகே இருந்த கால்வாயில் நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக எந்த வித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

ராமேஸ்வரத்திலிருந்து திருச்சி வழியாக திருப்பதி செல்லும் விரைவு ரயிலில், வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை கூடுதலாக ஒரு ஏசி மூன்றடுக்கு வரிசைப் பெட்டி மற்றும் ஒரு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்பட உள்ளது. பக்தர்களின் வசதிக்காக கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதனை பயணிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என திருச்சி கோட்ட ரயில்வே பிஆர்ஓ வினோத் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று ஆண் குழந்தை திருடப்பட்டது. இன்று அதிகாலை தாயுடன் இருந்த ஆண் குழந்தையை மருத்துவமனை ஊழியர் உடையிலிருந்த பெண்மணி குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வது போல ஆட்டோவில் கடத்திச் சென்றுள்ளார். இந்நிலையில் குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை அரசு மருத்துவமனை போலீசார் துறையூர் அருகே கைது செய்து, குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைப்பதற்காக அரசு மருத்துவமனை விரைந்தனர்.
Sorry, no posts matched your criteria.