Tiruchirappalli

News August 9, 2024

உதவித்தொகை பெற ஆட்சியர் அழைப்பு

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், பயன்பெற 9 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாதவர்கள் தகுதியுடையவர் ஆவார். மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரை எழுத படிக்க தெரிந்தவராக இருத்தல் வேண்டும். எனவே தகுதி உடைய திருச்சியை சேர்ந்த பதிவுதாரர்கள் விண்ணப்ப படிவத்தை, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் பெற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.

News August 9, 2024

திருச்சி ஆட்சியரின் உடனடி நடவடிக்கை

image

ஸ்ரீரங்கம் அடுத்த போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொன்னுமணி என்பவர் மூளை முடக்கு வாதம், அறிவு சார்ந்த குறைபாடு உடைய மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுதாரர் வீட்டிற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, ரூ.8,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.

News August 9, 2024

திருச்சியில் 12,655 மாணவர்கள் தேர்வு

image

திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தலைமையில், தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு தமிழ் புதல்வன் திட்டத்தினை தொடங்கி வைத்து மாணவர்களுக்கு வங்கி அட்டையை வழங்கினார். இந்த திட்டத்தில் திருச்சி மாவட்டம் முழுவதும் முதற்கட்டமாக 123 கல்லூரிகளைச் சேர்ந்த 12,655 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

News August 9, 2024

திருச்சி ஆட்சியரின் உடனடி நடவடிக்கை

image

ஸ்ரீரங்கம் அடுத்த போசம்பட்டி கிராமத்தில் வசித்து வரும் பொன்னுமணி என்பவர் மூளை முடக்கு வாதம், அறிவு சார்ந்த குறைபாடு உடைய மகளுக்கு சக்கர நாற்காலி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் அறிவுரையின்படி, இன்று மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மனுதாரர் வீட்டிற்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து, ரூ.8,000 மதிப்பிலான சக்கர நாற்காலியினை வழங்கினார்.

News August 9, 2024

திருச்சியில் போலி பாஸ்போர்ட் இருவர் கைது

image

திருச்சி விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை நேற்று இமிகிரேஷன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜ்மல்கான் என்பவர் போலியான முகவரியில் பாஸ்போர்ட் பெற்று வெளிநாடு சென்று திரும்பியது தெரியவந்தது. இதுபோல், மதுரையைச் சேர்ந்த அஜ்மல்அம்சா என்பவர் தாய், தந்தை பெயரை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்றதும் தெரியவந்தது.

News August 9, 2024

திருச்சியில் தேசியக்கொடி விற்பனை தொடக்கம்

image

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருச்சி அஞ்சல் கோட்டத்தின் தலைமை மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்களிலும், தேசியக்கொடி விற்பனை தொடங்கியுள்ளது. ஒரு தேசியக் கொடி ரூ.25 விற்பனை செய்யப்படுகிறது. இதை https://www.cpostolics.gov.in இணையதளம் மூலம் வீட்டிலே பெற்றுக் கொள்ளலாம். மேலும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களும் பெற்றுக் கொள்ளலாம் என அஞ்சல் துறை நிர்வாகி தெரிவித்துள்ளார்.

News August 9, 2024

திருச்சியில் பெரியார் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

image

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பெரியார் பிறந்த நாளை கொண்டாடுவதும், அந்த நாளில் விருது வழங்குவதும் வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெரியார் பிறந்தநாளில் பெரியார் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் அறிவித்துள்ளார். இதை ஷேர் செய்யவும்.

News August 9, 2024

திருச்சியில் அமைச்சர்கள் மரியாதை

image

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் திருவுருவச் சிலையை முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நேற்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

News August 9, 2024

திருவானைக்கோவிலில் வேலைவாய்ப்பு

image

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளம் வாயிலாக வரும் செப்டம்பர் 7ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை ஷேர் செய்யவும்

News August 8, 2024

திருவானைக்கோவிலில் வேலைவாய்ப்பு

image

திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோவிலில் காலியாக உள்ள எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் https://hrce.tn.gov.in/hrcehome/index.php என்ற இணைய தளம் வாயிலாக வரும் செப்டம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!