India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோலாலம்பூரிலிருந்து AK 29 விமானம் மற்றும் ஷார்ஜாவிலிருந்து IX614 விமானம் மூலம் இன்று திருச்சிக்கு வருகை தந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இரண்டு பயணிகளை தடுத்து நிறுத்தி, 200 அட்டைப்பெட்டிகளில் அவர்கள் கொண்டு வந்திருந்த சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 9,43,000 ரூபாய் ஆகும். தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் பிரசாத வழக்கில் பிரசாதங்களை அறநிலைய துறையே தயாரித்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், கோயில்களை வணிக நோக்கத்துக்கான இடமாக கருதக்கூடாது” என்றும் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு நேற்று பிறப்பித்துள்ளார். மேலும் வணிக நடவடிக்கைகளுக்கான இடம் கோயில் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி பாரதிதாசன் பல்கலை., வளாகத்தில் நாளை (செப்.4) “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் கல்வி நிறுவனத் தலைவர்களுடன் மாநில அளவிலான கருத்தரங்கம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சிறப்பாக செயல்புரிந்த கல்லூரிகளுக்கும், மாணவர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த கல்லூரிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் வரும் 6ம் தேதி நடக்கிறது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தொலை பேசி எண் 04312413510 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டத்தில் புத்தாநத்தம், சமயபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (செப்.4) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளது. இதனையொட்டி தேனூர், வெங்கக்குட, மருதூர், மணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், திருப்பத்தூர், பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
திருச்சி ஏர்போர்ட்டில் இன்று நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது, திருச்சியை பொறுத்தவரை வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவோம். எங்கள் கட்சியினருக்குள் இருக்கின்ற அதிருப்தி என்பது அண்ணன், தம்பிக்குள் இருக்கும் பிரச்னை போன்றது தான். குடும்பத்திற்குள் நடக்கின்ற பிரச்னை போல தான். அவற்றையெல்லாம் நாங்கள் சரி செய்து விடுவோம்” என தெரிவித்தார்.
அமேசான் தளத்தில் விற்கப்படும் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸை சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழப்பு காரணமாக, சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று விமான நிலையத்தில் தெரிவித்தார்.
திருச்சி உதவிபெறும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மருத்துவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விடுதியில் தங்கி படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குழந்தைகள் உதவி மையம் மூலம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மருத்துவர் சாம்சன் மீது போலீசார் போக்சோ வழக்கின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அப்பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகன்தான் மருத்துவர் என தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி என்ஐடியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவத்தை தொடர்ந்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. மாணவர்களின் பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என கண்டறிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும், மாணவர்களின் நலன் சார்ந்த விஷயங்கள், பாதுகாப்பு குறித்து இக்குழு ஆய்வு செய்கிறது எனவும் என்ஐடி கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி அரியமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கீழ அம்பிகாபுரம் காந்திஜி தெருவில் வசித்த ஜான் ஸ்டெபி ஜாக்லின் அமேசான் மூலம் நூடுல்ஸ் ஆர்டர் செய்து உணவருந்திய பின் நேற்று முன்தினம் மரணமடைந்தார். இந்த தகவலை அடுத்து திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ரமேஷ் பாபு தலைமையில் நூடுல்ஸ் சப்ளை செய்த மொத்த வணிக நிறுவனத்தை ஆய்வு செய்து அந்த நிறுவனத்திற்கு நேற்று சீல் வைத்தார்.
Sorry, no posts matched your criteria.