India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்க ரூ.23.45 கோடியில் தேவதானம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமையவுள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அணுகு சாலையை அமைக்க நில அளவிடும் பணி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ரயில் நிலையம் முன் உள்ள கடைகளை அகற்ற நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தொட்டியம் வட்டம் மைக்கேல் நாயக்கன்பட்டி அருகே கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தையை அப்பகுதி மக்கள் இன்று மீட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் தங்கராசு கொடுத்த புகாரின் பேரில் காட்டுப்புத்தூர் காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் குழந்தையை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற் கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
வாஸ்கோடகாமா வேளாங்கண்ணி இடையே திருச்சி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. வரும் 27ஆம் தேதி,செப். 2 மற்றும் 6ஆம் தேதி வாஸ்கோடகாமாவில் இருந்து இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு 3ஆம் நாள் மதியம்1.30 மணிக்கு வேளாங்கண்ணியை சென்றடையும். இதேபோல் ஆக. 29ம் தேதி 4 மற்றும் 8 ஆகிய தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து இரவு 11.55 மணிக்குப் புறப்பட்டு 3-ம் நாள் நள்ளிரவு 12.15 மணிக்கு வாஸ்கோடகாமா சென்றடையும்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாகவும் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்று மிக கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, லால்குடி, தொட்டியம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கனமுதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரித்துள்ளது.
திருச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்படும். ஊராட்சி கணக்குகள் ஆய்வு மேற்கொள்ளப்படும். இதில், ஊராட்சி பொதுமக்கள் மற்றும் வாக்காளா்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென கலெக்டர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு உள்ளே 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த கடைகளை அகற்ற வேண்டி, கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், நீதிமன்றம் கடைகளை அகற்ற உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இன்று கோவில் பணியாளர்கள் கடைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 1 வயது குழந்தை குழந்தை ப்ரித்திகா. தனது அசாத்திய திறமையால் 11.56 நிமிடத்தில் 190 படங்களை பெயரைச் சொன்னவுடன் உடனடியாக அடையாளம் காட்டக் கூடிய திறன் கொண்ட குழந்தையாக WORLD WIDE BOOK OF RECORDS உலக சாதனை புத்தகத்தில் சாதனை குழந்தையாக பதிவு செய்யப்பட்டு அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழும் பதக்கமும் வழங்கப்பட்டது. SHARE IT
தமிழக அரசுக்கு சித்த மருத்துவர்களின் சார்பில் நன்றி அறிவிக்கும் 24வது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை K.N. நேரு தொடங்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். அருகில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திருச்சியை சேர்ந்த மூத்த அமைச்சர் நேருவின் செயல்பாடுகளால், லால்குடி தொகுதி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் அதிர்ச்சியில் உள்ளார். எம்எல்ஏவின் நேற்றைய முகநூல் பதிவில், லால்குடி சட்டமன்ற தொகுதி இ.வெல்லனூரில் காலை “மக்களுடன் முதல்வர் திட்டத்தை” நான் துவக்கி வைத்தேன். மதியம் 1 மணிக்கு அமைச்சர் நேரு பட்டா வழங்குகிறார். ஒரே நிகழ்ச்சி இரண்டு முறை நடந்துள்ளது. இதுதான் திருச்சியில் நடைமுறை என்று பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.