India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மேலப்புதூர் பள்ளியின் தலைமை ஆசிரியர் சகாயராணி அவரது மகன் சாம்சன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் போது செய்தியாளர்களிடமிருந்து காப்பாற்றி துண்டு போட்டு போலீசார் அழைத்துச் சென்ற சம்பவம் பேசு பொருளாகியுள்ளது. போக்சோ குற்றவாளி மீது போலீசார் ஏன் அக்கறை காட்டுகிறார்கள் என்பது திருச்சி மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திருவெறும்பூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது போலீசாரை பார்த்த ரௌடிகள் ஜீவா மற்றும் அருண்குமார் ஆகியோர் தப்பியோடியுள்ளனர். அவர்களை போலீசார் விரட்டிப் பிடிக்க முயன்றதில், ஜீவா அருகிலிருந்த வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் ஜீவாவின் கால் முறிந்தது. இதையடுத்து போலீசார், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, ஜீவாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
முசிறி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை தமிழ் இலக்கியம் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி லாவண்யா சங்க கால நூல்களில் ஒன்றான நாலடியார் முழுவதையும் பிராமி தமிழில் எழுதியுள்ளார். உலகிலேயே நாலடியாரை பிராமி தமிழில் எழுதிய முதல் நபர் என்ற பெருமையை பெறுகிறார். சாதனையை ஜூனியர் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு திங்களன்று அங்கீகரித்துள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பட்டதாரி மற்றும் டெக்னீஷியன் அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு பி.எஸ்.சி., பி.சி.ஏ., டிப்ளோமா முடித்திருக்க வேண்டும். சம்பளம் மாதம் ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ள நபர்கள் நேரிலோ அல்லது 0431-2618125 எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என வாழை ஆராய்ச்சி மையத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஷேர் செய்யவும்
திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள அப்பிரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 550 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு டிகிரி முடித்த 20 முதல் 28 வயது உள்ளவர்கள், https://www.iob.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இதற்கு விண்ணப்பிக்க கடைசி 10.09.2024. கடைசி நாளாகும்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மற்றும் மணச்சநல்லூரில் கோயில்களின் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை நகலெடுக்கும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. திருவாசியில் உள்ள மேட்டுறை வரதேஸ்வரர் கோயில் மற்றும் ஸ்ரீரங்கம் தாலுகாவில் பெரிய கருப்பூர் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோயில் சுவர்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் நகல் எடுக்கப்பட்டு வருவதாக கல்வெட்டு நிபுணர் சாருமதி தெரிவித்தார்.
திருச்சி மாநகரத்தில் வரும் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 9ஆம் தேதி சிலை கரைப்பு ஊர்வலம் நடைபெற உள்ளதை ஒட்டி பொதுமக்கள் பாதுகாப்புடன், எந்த பிரச்சனையும் ஏற்படாத வண்ணம் கொண்டாடும் வகையில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் இன்று கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. உறையூர் நாச்சியார் கோவில் சந்திப்பில் தொடங்கி இந்த அணி வகுப்பு உறையூர் காவல் நிலையத்தில் முடிவுற்றது.
திருச்சிராப்பள்ளி அகில இந்திய வானொலி நிலையம் சார்பில், மகாத்மா காந்தியடிகளின் பிறந்த தினத்தையொட்டி, கல்லூரி மாணவர்களிடையே விநாடி-வினா போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என அகில இந்திய வானொலி நிலையம் தெரிவித்துள்ளது.
சிறுகனூர் அடுத்த ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரும், தனது இரு சக்கர வாகனத்தில் கன்னியாகுடி பகுதிக்கு சென்று விட்டு வரும் போது ஸ்ரீபெரம்பத்தூர் கோழிப் பண்ணையிலிருந்து வெளியே வந்த ஜேசிபி வாகனம் மீது மோதிய விபத்தில் கருப்பையா சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அவர் கூட வந்த நபர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருச்சி மாவட்ட நிர்வாகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மண்டல அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் கலையரங்கத்தில் வரும் 06.09.24 வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை கொண்டு வர வேண்டும் என தெரிவித்தனர்.
Sorry, no posts matched your criteria.