Tiruchirappalli

News August 19, 2024

திருச்சி பாலியல் குற்றவாளிக்கு மாவுக்கட்டு

image

திருச்சியில் 9 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வந்தனர். அப்போது சிதம்பரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார். அப்போது கீழே விழுந்ததில் இளைஞரின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

News August 19, 2024

திருச்சி: ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு

image

திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. எனவே, இதற்கான விண்ணப்பங்களை https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.

News August 19, 2024

திருச்சி மாநகராட்சி யுடன் இணைக்க எதிர்ப்பு

image

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.

News August 19, 2024

திருச்சி அருகே விபத்து

image

திருச்சி மாவட்டம் அரியாவூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில், மணல் டிராக்டர் மற்றும் இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 19, 2024

திருச்சி மாநகரில் பவர் கட் – சாலை மறியல்

image

திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர், திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி, திருவானைக்காவலை அடுத்த அழகிரிபுரம் பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர்.

News August 18, 2024

திருச்சி கலெக்டர் பெயரில் போலி முகநூல்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பெயரில் போலி முகநூல் கணக்கை ஒருவர் துவங்கி அதன் மூலம் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் இன்று தனது whatsapp ஸ்டேட்டஸில் தனது முகநூல் பக்கம் இதுவல்ல. யாரும் ஏமாற வேண்டாம். இது போலி முகநூல் கணக்கு என தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், ஆட்சியரின் அக்கவுண்ட்டை ஓபன் ஹாக் செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

News August 18, 2024

திருச்சி மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் மாலை 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் கவனத்துடன் வெளியே செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. SHARE NOW!

News August 18, 2024

காதணி விழாவில் பங்கேற்ற ஈபிஎஸ்

image

மருங்கபுரியை அடுத்த பளுவஞ்சியை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், அதிமுக மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளராக உள்ள சந்திரசேகரின் மகன் காதனிவிழா மற்றும் மகளின் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள அதிமுக பொது செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்து விழாவில் குழந்தை செல்வங்களை வாழ்த்தினார். இதில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 18, 2024

திருச்சி விமான நிலைய முனையத்திலிருந்து மக்களுக்கு பஸ் வசதி

image

திருச்சி விமான நிலையத்தில் இருந்து நுழைவு வாயில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனால், பயணிகள் விமான நிலையத்துக்குள் செல்ல கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதன்படி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசின் சார்பில் நாளை (ஆக.19) முதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனை நாளை காலை 8 மணி அளவில் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைக்கிறார். இதையொட்டி சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது.

News August 18, 2024

தலித் மக்கள் முதலமைச்சராக வந்தால் வரவேற்போம்

image

திருச்சியில் இன்று நடந்த மமக கட்சி இளைஞர் அணி செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஒருபோதும் தலித் மக்கள் முதல்வராக முடியாது என திருமாவளவன் கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் அதிக அளவில் தலித் மக்கள் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் முதலமைச்சராக வந்தால் நாங்கள் வரவேற்போம்” என தெரிவித்தார்.

error: Content is protected !!