India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாரிஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட திருச்சியை சேர்ந்த தடகள விளையாட்டு வீராங்கனை சுபா இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரை அவரது உறவினர்கள், விளையாட்டு வீரர்கள், மற்றும் விளையாட்டு சங்கத்தின் தலைவர் சார்பாகவும், திருச்சி விமான நிலையத்தில் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருச்சியில் கடந்த 42 மாதங்களில் 15,303 பெண்கள் கருக்கலைப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஜனவரி 2021ஆம் ஆண்டு முதல் 30 ஜூன் 2024ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்யப்பட்ட விவரங்களை, தனியார் தொலைக்காட்சி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெற்றப்பட்ட தகவலை வெளியிட்டுள்ளது. இதில், திருச்சி 5ஆம் இடத்தில் உள்ளது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை (ஆக.17) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், டி.எஸ்.பி.கேம்ப், கிராப்பட்டி காலனி, அன்பு நகர், அருணாச்சல நகர், காந்தி நகர், பாரதி மின் நகர், சிம்கோ காலனி, அரசு காலனி, கொல்லாங்குளம், எடமலைப்பட்டிபுதூர், சொக்கலிங்கபுரம், பஞ்சப்பூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்படட்டி துறுக்கன்குளம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண் ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது, பிச்சைமணியாரத்தை சேர்ந்த ஜார்ஜ் ஞான ஸ்டீபன் என்பவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து பெண்ணின் தாயார் மணப்பாறை மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பின்னர், போலீசார் ஜார்ஜ் ஞானஸ்டீபனை கைது செய்தனர்.
இருகூர்-கோவை வடக்கு ரயில்வே நிலையத்திற்கு இடையே, தண்டவாளத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால், கரூர் வழியாக திருச்சி-பாலக்காடு ரயில் (எண்-16843) நாளை முதல் 10 நாட்களுக்கு மட்டும் இருகூர் – போத்தனுார் வழியாக இயக்கப்படும். இதனால், மேற்கண்ட தேதிகளில் சிங்காநல்லுார், பீளமேடு, கோவை வடக்கு, கோவை ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி, ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள், பனையக்குறிச்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு, வடக்கு, மாநகரம் மாவட்ட கழக செயலாளர்கள் ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் எதிர் கட்சி தலைவர் எடப்பாடியார் வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள மணப்பாறை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.சந்திரசேகர் இல்ல நிகழ்ச்சிக்கு வருகை தர இருக்கிறார். அவருக்கு சிறப்பாக வரவேற்பு அளிக்க கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் ஊராட்சி, ஒன்றியம் பனையக்குறிச்சி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். மேலும் நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள், பனையக்குறிச்சி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடைபெற்ற பொது விருந்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கலந்து கொண்டு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தி, திருக்கோவிலுக்கு காணிக்கையாக வரப்பெற்ற சேலைகள் மற்றும் வேட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் இணை ஆணையர்கள் மாரியப்பன், கல்யாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிங்கப்பூரிலிருந்து நேற்று திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு பயணிகளின் உடைமையில் தடை செய்யப்பட்ட சுறா மீன்களின் துடுப்புகள் கடத்தி வந்தது தெரிய வந்தது. 46.580 கிலோ எடையுள்ள அவற்றின் விலை மதிப்பு 6.80 லட்ச ரூபாய் ஆகும். அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.