Tiruchirappalli

News August 22, 2024

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் அறிவிப்பு

image

திருச்சியில் தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு, குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் நாளை 1 வயது முதல் 19 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கும் குடற்புழு தொற்றை நீக்கும் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இதற்கான மாத்திரைகள் அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், மற்றும் துணை சுகாதார மையங்களில் கிடைக்கும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News August 22, 2024

பஞ்சப்பூரில் ஆய்வு செய்த அமைச்சர்

image

திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளை இன்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக மேற்கொள்ள அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News August 22, 2024

திருச்சி: நள்ளிரவில் பெண் போலீஸ் சஸ்பெண்ட்

image

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக காமினி பொறுப்பேற்ற பின் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது, போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிய உத்தரவிடுவது எனவும், இந்த நிலையில் நேற்று இரவு கே.கே.நகர் குற்றப்பிரிவு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்சவேணியை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து கமிஷனர் காமினி உத்தரவிட்டார்.

News August 22, 2024

திருச்சி கோவிலில் சூப்பர் ஸ்டார் மகள் தரிசனம்

image

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் அவருடைய கணவர் விசாகன் நேற்று தரிசனம் செய்ய வருகை தந்தனர். அவர்கள் இருவருக்கும் திருச்சி மாவட்ட தலைமை ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் கோவிலில் தரிசனம் செய்த அவர்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டன.

News August 22, 2024

போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்ற 3 பேர் கைது

image

மலேசியாவில் இருந்து திருச்சி விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கணேஷ் (வயது 49), முருகேசன் (53), தர்மலிங்கம் (49) ஆகியோர் போலி முகவரியில் பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவர்களை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

News August 21, 2024

திருவெறும்பூரில் 872 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா

image

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் 40 ஆண்டு காலமாக பட்டா இல்லாமல் வசித்து வந்த ஏழை எளிய மக்களுக்கு திருச்சி மாவட்ட வருவாய் துறை மூலம், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சரின் முயற்சியில் அவரது தலைமையில் சுமார் 872 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா இன்று மாலை வழங்கப்பட்டது. இதில் அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

News August 21, 2024

கல்வியை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அமைச்சர் அன்பில் மகேஷ்

image

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், கள்ளர், சீர் மரபினர் பள்ளிகள் இணைப்பதை கண்டித்து அதிமுக 24ஆம் தேதி போராட்டம் அறிவித்துள்ளது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை. ஒரு முடிவை எடுத்த பின் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தலாம். கல்வியை வைத்து கருத்துகளை சொல்லுங்கள். ஆனால் கல்வியை வைத்து தயவு செய்து அரசியல் செய்ய வேண்டாம் என்றார்.

News August 21, 2024

திருச்சி மாவட்டத்திற்கு புதிய அலுவலர்

image

தமிழகம் முழுவதும் 57 மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலர்களை இடமாற்றம் செய்து மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலராக வீ.பேபி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், முன்னதாக மாவட்ட திருச்சியில் அரசு தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றியுள்ளார். மேலும், தனியார் பள்ளி கல்வி அலுவலராக இருந்த சாரதி தஞ்சை மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

News August 21, 2024

திருச்சியில் 15 மின் மோட்டார்கள் பறிமுதல்

image

ராம்ஜி நகர் பகுதியில் உதவி ஆணையர், உதவி செயற்பொறியாளர், இளநிலைப்பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் இன்று காலை குடிநீர் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது இப்பகுதிகளில் 15 வீடுகளில் குடிநீர் விநியோக குழாயில், சட்டவிரோதமாக மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சியது கண்டறியப்பட்டது . மேலும் 15 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

News August 21, 2024

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிக்கு அழைப்பு

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சென்னை மூலமாக,”தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை”விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.இப்போட்டியில் பள்ளி,கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.எனவே மேற்கண்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் அனைவரும்www.sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வரும் 25.08.24ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்

error: Content is protected !!