India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி விதை ஆய்வு இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விவசாயிகள் நெல் பயிர்களுக்கான விதைகள் வாங்கும் போது விதைச்சான்று, வழங்கப்பட்ட, விதை விற்பனை உரிமம் பெற்ற நிலையங்களில் மட்டுமே வாங்க வேண்டும், மேலும் பலகையில் விதை நிலை, விற்பனை விலை ஆகியவை குறிப்பிட வேண்டும், வியாபாரிகள் காலாவதியான விதைகளை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
திருச்சி வீட்டு வசதி பிரிவிற்கு உட்பட்ட நவல்பட்டு, வாழவந்தான் கோட்டை, முசிறி, துறையூர், மணப்பாறை ஆகிய பகுதிகளில் வீடு, மனைகள் ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் உரிய விதிகளின்படி தொகை திருப்பி செலுத்த முன் வரவில்லை. அதனால் வீட்டு வசதி பிரிவு அலுவலகத்திற்கு நேரில் சென்று நிலவைத் தொகையை செலுத்தி கிரைய பத்திரம் பெற்றுக் கொள்ள மாவட்ட ஆட்சியர் நேற்று தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை தடை செய்யப்படுகிறது. மேலும் அன்றைய தினம் தடையை மீறி மதுபானங்கள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT
திருவெறும்பூர் அடுத்த சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர் என்பவர் நேற்று இரவு உறவினர் வீட்டு மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாக காணப்படுகின்றது. மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33,106 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வு 115 மையங்களில் 115 ஆய்வு அலுவலர்கள் பாதுகாப்பில் நடைபெற உள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நிதி ஆண்டின் கணக்கின்படி கையாளப்பட்ட பயணிகள் மற்றும் கூடுதல் வருவாய் ஈட்டியது மூலம் என்எஸ்ஜி 2 ஆக தரம் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் 79.23 லட்சம் பயணிகளை கையாண்டு ரூ.165.68 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில் முன்பதிவில் ரூ.129.56 கோடியும், டிக்கெட் மூலம் மூலம் ரூ.38.12 கோடி ஈட்டியது. இது ரயில்வே பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் கடந்த 9ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது, அனுமதியின்றி 2 பேர் டிரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோ எடுத்தனர். இதுதொடர்பாக கோட்டை போலீசார் மாகாளிகுடியை சேர்ந்த அஸ்வின் குமார், லால்குடியை சேர்ந்த ரகுராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிரோன் கேமராக்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி காந்தி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் இருக்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திருச்சி 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் வந்ததை தொடர்ந்து, அதனை விசாரித்த நீதிபதி பிரபு சங்கர் புகார் மனு மீது முகாந்திரம் இருப்பதால் செப்டம்பர் 19ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் டிரைவர் எனக்கூறி சிலம்பரசன் என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்தும், வீடியோ எடுத்தும், தொடர்ந்து துன்புறுத்தியதாக கல்லூரி மாணவி புகார் அளித்தார். மேலும் கைதாகி உள்ள டிரைவர் சிலம்பரசன் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக பொய்யான அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.