Tiruchirappalli

News August 24, 2024

சீமான் மீது மான நஷ்ட வழக்கு – திருச்சி எஸ்.பி., வருண்குமார்

image

எக்ஸ் தளத்தில் இருந்து நானும் எனது மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், “Online Abuse-ஐ பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை; உடனே புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

திருச்சி மாவட்ட எஸ்.பி. வருத்தம்

image

திருச்சி எஸ்.பி. வருண்குமார் எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக, என் குழந்தைகள், குடும்பத்தினர் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரித்து இணையத்தில் வெளியிட்டனர். பயத்தினாலோ அருவருப்பினாலோ இந்த முடிவை எடுக்கவில்லை. இதன் பின்னணியில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

ஒரே டிக்கெட்டில் இனி சிங்கப்பூர் செல்லலாம்

image

திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டு மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News August 24, 2024

ஒரே டிக்கெட்டில் இனி சிங்கப்பூர் செல்லலாம்

image

திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டு மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News August 23, 2024

திருச்சி ஆட்சியர் அழைப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் நன்னிலம் பெண்கள் உடைமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் வாங்கும் நிலத்திற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100% விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதற்கு விண்ணப்பிக்க சாதி சான்று மற்றும் நிலத்தின் சந்தை மதிப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

திருச்சியில் டிஎஸ்பிக்கள் மாற்றம்

image

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு டிஎஸ்பி தினேஷ் குமார் லால்குடிக்கும், கேகே நகர் ஏசிபி பழனியப்பன் மாவட்ட குற்றப்பிரிவு துறைக்கும், சேவை பயிற்சி துறை டிஎஸ்பி மயில்சாமி மயிலாடுதுறைக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News August 23, 2024

திருச்சி விவசாயிக்கு ‘பெஸ்ட் பனானா பஞ்ச்’ விருது

image

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் உழவர் தின விழாவில் சிறந்த வாழைத்தார் உற்பத்திக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற விவசாயிகளில் அம்மையராஜுக்கு, ‘பெஸ்ட் பனானா பஞ்ச்’ என்ற விருது புதுடெல்லி தாவர வகைகளின் பாதுகாப்பு மற்றும் விவசாயிகள் உரிமைகள் ஆணைய தலைவர் டி.மொஹபத்ரா, தஞ்சை தேசிய உணவு தொழில்நுட்ப நிறுவன இயக்குனர் பழனிமுத்து ஆகியோர் தலைமையில் வழங்கப்பட்டது.

News August 23, 2024

திருவெறும்பூரில் ஆட்சியர் ஆய்வு

image

திருவெறும்பூர் செல்வம் நகர் நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, நவல்பட்டு பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும், இ-சேவை மையத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

News August 23, 2024

திருச்சியில் தனியார் பேருந்து எரிந்து நாசம்

image

திருச்சியில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு தனியார் பேருந்து 27 பயணிகளோடு புறப்பட்டுள்ளது. திருச்சி மன்னார்புரம் மேம்பாலத்தைக் கடந்தபோது பேருந்தின் டயர் வெடித்து திடீரென தீப்பற்றியது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் பேருந்தை ஓரமாக நிறுத்தினார். இதனையடுத்து பயணிகளை அலர்ட் செய்த ஓட்டுனர் அவசரமாக இறங்குமாறு தெரிவித்ததால் 27 பேர் உயிர் தப்பினர். ஆனால் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.

News August 22, 2024

முன்னாள் முதல்வரிடம் வாழ்த்து பெற்ற செயலாளர்

image

மணப்பாறையை சேர்ந்த மருத்துவர் கிருத்திகா அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் மாநில மருத்துவ அணி செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதனையடுத்து முன்னாள் முதல் அமைச்சரும் அதன் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் உடன் தெற்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.ராஜ்மோகன் உள்ளார்.

error: Content is protected !!