Tiruchirappalli

News August 25, 2024

ஐந்து ஆண்டுகள் கூட நிலைத்திருக்காது: முத்தரசன்

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய அரசு வயநாடு நிலச்சரிவு பகுதியில் சுற்றுப்பயணம் செய்து இதுவரை எந்த நிதி உதவியும் வழங்கவில்லை என தெரிவித்தார். மேலும் இதே போல் இருந்தால் ஒன்றிய அரசு 5 ஆண்டுகள் கூட நிலைத்திருக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

News August 25, 2024

திருச்சியில் கருக்கலைப்பு மாத்திரை உட்கொண்ட பெண் பலி

image

மருங்காபுரியை சேர்ந்த வீரம்மாள் என்பவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே அவர் யாரிடமும் ஆலோசிக்காமல் நேற்று முன்தினம் கருக்கலைப்பு மருந்துகளை அதிகமாக எடுத்துள்ளார். இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 25, 2024

சிறுகமணி வேளாண்மை நிலையம் அழைப்பு

image

சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் ‘வீட்டிலேயே வளர்க்கலாம் நாட்டுக்கோழி’ என்ற தலைப்பில் கோழி வளர்ப்பு குறித்து ஒரு நாள் பயிற்சி ஆகஸ்ட் 29ஆம் தேதி அன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாலைக்குள் வேளாண்மை அறிவியல் நிலையம், சிறுகமணி என்ற முகவரியில் நேரில் சென்று பதியலாம் அல்லது கீழ்கண்ட தொலைபேசி மற்றும் எண்களில் தொடர்பு கொள்ளலாம் 0431-296285.

News August 25, 2024

மேற்கு வங்காளத்திற்கு விமான மூலம் பறந்த உடல்

image

திருவெறும்பூர் காமராஜ் நகர் பகுதியில் நேற்று பாதாள சாக்கடை தோண்டும் பணியில் ஈடுபட்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளி ராஜ்குமார் சர்க்கார் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை ஒட்டி திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பிறகு சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்திற்கு விமான மூலம் இன்று அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கம்யூனிஸ்ட் லெனின் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

News August 24, 2024

X-தளத்திலிருந்து வெளியேறும் எஸ்பிக்கள்

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் இன்று ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், அவதூறு பேச்சுக்கு சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக, ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தூண்டுதலில், என் குழந்தைகள், குடும்பத்தினரின் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரிக்கின்றனர். அதனால் X தள உரையாடல்களில் இருந்து நானும், என் மனைவியும் தற்காலிகமாக வெளியேறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

ஸ்ரீரங்கம் பகுதியில் ஆட்சியர் ஆய்வு

image

ஸ்ரீரங்கம் அய்யாளம்மன் படிதுரை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணியினை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைவாக முடிக்கவும், உறுதியாகவும், தரமாகவும் கட்டி முடிக்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

News August 24, 2024

ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு – எஸ்பி

image

சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் மூன்று பொறுப்பாளர்கள் மீது, 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், தனது எக்ஸ் வலைத்தள பதிவிட்டுள்ளார். மேலும், இணையத்தில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது குறித்த புகார்களை இணையதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 24, 2024

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

image

வெளிமாநிலத்தில் இருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக இருக்கும் சார்ம் (Sharm) வலைத்தளத்தில் பதிவு செய்து குடும்ப அட்டை பெறாதவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டை வழங்கியதுடன் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களில் பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News August 24, 2024

ஊழல் தடுப்பு கண்காணிப்பாளருக்கு அண்ணா விருது

image

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 2023ஆண்டிற்கான சீரிய பணியினை தமிழக அரசு அங்கீகரித்து தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா பதக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வழங்கி கெளரவித்துள்ளார். இந்த விருது கிடைத்தமைக்கு பெருமிதம் கொள்வதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

News August 24, 2024

திருச்சி: தினத்தந்தி வாகனம் மோதி விபத்து

image

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியை அடுத்துள்ள புதுக்குடி அருகே நேற்று நள்ளிரவு தினத்தந்தி நாளிதழ் ஏற்றிச்சென்ற வாகனம் சாலையில் நடந்து சென்ற பாதயாத்திரைகள் மீது மோதியது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பாதயாத்திரர்கள் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

error: Content is protected !!