India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வார விடுமுறை நாளான இன்று பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி இந்த சிறப்பு ரயிலானது (எண்: 06008) இன்று இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருச்சி மாவட்டம் கொடிநாள் நிதி வசூலிப்பதில் மாநில அளவில் தொடர்ந்து 3ஆம் முறையாக 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கொடிநாள் நிதி வசூலுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் ஆட்சியர் பிரதீப் குமார் பொறுப்பேற்ற ஆண்டில் மட்டும் ரூ.2.65 கோடி வசூல் செய்ததற்கு ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.
திருச்சி தேவதானம் பகுதியில் ஊர் நாட்டாமையும், திமுக பிரமுகருமான பிரித்திவிராஜ் என்பவரை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு அண்ணன் ரமேஷ் தம்பி பிரித்திவிராஜுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சனை என காவல்துறை வட்டாரத்தில் இருந்து அறியப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு எழுத 24,220 பேர் வருகை தந்தனர்.மேலும் 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது,100 சதவீதத்தில் 73.15 பேர் வருகை தந்துள்ளனர்.மீதமுள்ள 26.85 பேர் தேர்வு எழுத வரவில்லை.
திருச்சியில் சென்டர் ஸ்கொயர் சேஸ் அகாடமி நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி திருச்சி விமான நிலையம் மொரைஸ் சிட்டி பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில் 7,9,12,15, மற்றும் 25 வயது உள்ள ஆண் பெண் இருவரும் பங்கேற்க அனுமதி உண்டு. போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்று இரவு 9 மணிக்குள் 9994462728 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 தேர்வானது தற்போது, திருச்சி மாவட்டத்தில் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் நடைபெற்று வருகிறது. இதனை திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களிடம் பதட்டமில்லாமலும், பொறுமையாகவும் தேர்வை கையாள அறிவுரை வழங்கினார்.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு ஏர்லைன்ஸ் விமானத்தில் புறப்பட இருந்த திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரும், அதேபோல் மஸ்கட்டில் இருந்து திருச்சி வந்த தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மோகன்தாஸ் என்பவரும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இமிகிரேஷன் அதிகாரிகள் இருவரையும் கைது செய்து ஏர்போர்ட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி தில்லை நகர் பத்தாவது குறுக்குத் தெருவில், மாநகராட்சி ஆணையர் சரவணன் வீட்டு அருகே இருக்கும் எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சி செய்து பலன் அளிக்காததால் அப்படியே விட்டுச் சென்ற சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் 2 இளம் சிறார்கள் ஈடுபட்டது ஏடிஎம் மைய சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
திருவெறும்பூரை சேர்ந்த பிரபல ரவுடி காக்கா சுந்தர்ராஜ் கள்ளக்காதல் விவகாரத்தில் நேற்று தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக எஸ்.பி வருண்குமாரின் தீவிர விசாரணையில், கள்ளக்காதலி பரிமளாவின் உறவினர்களான கணேசமூர்த்தி, மதி, வடிவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பரிமளாவின் மகன் மாரிமுத்து என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டத்தில் குரூப்-2 தேர்வினை இன்று பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனர். இந்நிலையில் பொன்மலைப்பட்டி பகுதியில் உள்ள ஒரு மையத்தில் தந்தை இளங்கோவனம் மற்றும் மகள் மதுபாலா ஆகியோர் ஒன்றாக தேர்வு எழுதுகின்றனர். மேலும் இளங்கோவன் 118 முறை குரூப்-2 தேர்வில் பங்கேற்றுள்ளதும், இளங்கோவன் தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.