Tiruchirappalli

News August 27, 2024

ஓடும் ரயிலில் இறங்க முயன்ற விபரீதம்

image

திருச்சியில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவரை பாதுகாப்பாக மீட்க சக பயணிகள் உதவினர். காயங்களுடன் மீட்கப்பட்ட ஓய்வுப்பெற்ற ரயில்வே அதிகாரி ஜெயச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்லவன் விரைவு ரயிலில் பயணித்த ஜெயச்சந்திரன் ரயில் நிற்பதற்கு முன் இறங்க முயன்றபோது தவறி விழுந்தார்.

News August 27, 2024

சமயபுரம் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, சமயபுரம் சுங்கச்சாவடி வரி அனைத்து வாகனங்களுக்கும் மாதாந்திர பாஸ் மட்டும் சுங்கச்சாவடியில் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் 25 வரை கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News August 27, 2024

சமயபுரம் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, சமயபுரம் சுங்கச்சாவடி வரி அனைத்து வாகனங்களுக்கும் மாதாந்திர பாஸ் மட்டும் சுங்கச்சாவடியில் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் 25 வரை கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News August 26, 2024

எந்த செல்வாக்கில் அருகருகே பணியாற்றுகிறீர்: சீமான் காட்டம்

image

திருச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எந்த செல்வாக்கில் நீங்களும் உங்கள் மனைவியும் அருகருகே பணியை பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும் ஐ.பி.எஸ். படித்த திருச்சி எஸ்.பி. அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும், திமுகவில் வேலை செய்ய வேண்டுமானால் ஐ.டி. வேலைக்கு போகட்டும் என்று கடுமையாக சாடினார்.

News August 26, 2024

திருச்சியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்காக அந்தந்த பேருந்து நிலையங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News August 26, 2024

திருச்சி எஸ்பி அவதூறு வழக்கில் மேலும் இருவர் கைது

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே குறித்தும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சண்முகம், அப்துல் ரகுமான் ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

News August 26, 2024

சீமானுக்கு திருச்சி எஸ்பி பதிலடி

image

திருவாரூரில் நேற்று சீமான் பேசிய பேச்சுக்கு, திருச்சி எஸ்பி வருண்குமார் இன்று பிச்சை எடுப்பது, பெண்களை ஆபாசமாக பேசுவது, நில அபகரிப்பு, ரவுடித்தனம் செய்வதை சிலர் நிறுத்தினால், நான் காக்கி சட்டையை விடுவது பற்றி யோசிக்கிறேன். நான் காக்கி சட்டையில் இருப்பது அவ்வளவு பயமுமோ? திரள் நிதியிலோ பிச்சை எடுத்ததிலோ வந்த பதவி அல்ல. சொந்த உழைப்பில் வாங்கிய வேலை என பதிலடி கொடுத்துள்ளார். SHAREIT

News August 26, 2024

நாளை 7 துணைமின் நிலையங்களில் மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் அதவத்தூர், வாழாவந்தன் கோட்டை, அம்மாபேட்டை, ஸ்ரீரங்கம், கொப்பம்பட்டி, ரெங்கநாதபுரம், முருங்கப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை (27.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 09:45 மணி முதல் மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் நேற்று தெரிவித்துள்ளார்.

News August 26, 2024

லாரியின் மீது மோதி ஒருவர் பலி

image

வையம்பட்டி அடுத்த அமயபுரத்திலிருந்து பெரியகுளத்துபட்டியை நோக்கி நேற்று இரவு டூவீலரில் சென்று கொண்டிருந்த முத்துவேல் என்பவர் பழுதாகி நின்ற லாரியின் பின்னால் மோதியதில் பலத்த காயத்துடன் அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News August 25, 2024

துறையூர்: கொலை குற்றவாளி கைது

image

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள கொப்பம் பட்டியை சேர்ந்த செந்தில் என்பவரை அவரது நண்பர் கொலை செய்த சம்பவத்தில் ரெட்டி மாங்குடி சேர்ந்த கனகராஜ் என்பவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய மற்றொரு குற்றவாளியான பூவரசன் என்பவனை நேற்று தனிப்படை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!