India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு,தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 23.08.2024ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் தொழில்துறை, சேவைதுறை,விற்பனைதுறை போன்ற பல்வேறு தனியார் துறைகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தகுதி உள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே திருச்சியைச் சேர்ந்த வேலை நாடுபவர்கள் இதில் கலந்துகொண்டு பயன் பெற மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆகஸ்ட்.20 காலை 11 மணியளவில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் சிறப்பு வாக்காளர் சுருக்க முறை திருத்தம் தொடர்பான கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை ஆட்சியர் ஆய்வு செய்ய உள்ளார் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் நாளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்கள், தீயணைப்பு துறை மற்றும் சிறைத்துறை காவலர் பதவிக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ளதாக திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி இன்று அறிவித்துள்ளார். இதில் 998 தேர்வாளர்களுக்கு அழைப்பு கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நான்கு நாட்கள் இந்த தகுதி தேர்வு நடைபெற உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
திருச்சி ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் திருச்சி கிளையின் சிறப்பு தொழிற் கடன் முகாமை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் புதிய தொழில் முனைவோர்களுக்கான கடன் உதவிகளையும் வழங்கினார். இந்நிகழ்வில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மண்டல மேலாளர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருச்சியில் 9 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். உறவினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைஞரை தேடி வந்தனர். அப்போது சிதம்பரத்தில் பதுங்கியிருந்த இளைஞரை கைது செய்ய முயன்றபோது அவர் தப்பியோடியுள்ளார். அப்போது கீழே விழுந்ததில் இளைஞரின் காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்புகளை மாவட்ட சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. எனவே, இதற்கான விண்ணப்பங்களை https://tiruchirappalli.nic.in/notice_category/recruitment/ என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மாடக்குடி கிராம மக்கள் தங்களது கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் அரியாவூரில் இருந்து திண்டுக்கல் நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையில், மணல் டிராக்டர் மற்றும் இரண்டு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி மாநகரத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர், திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், திருச்சி, திருவானைக்காவலை அடுத்த அழகிரிபுரம் பகுதியில் தொடர் மின்தடையை கண்டித்து நேற்று இரவு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஸ்ரீரங்கம் போலீசார் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை செய்து அனுப்பி வைத்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பெயரில் போலி முகநூல் கணக்கை ஒருவர் துவங்கி அதன் மூலம் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதனையறிந்த மாவட்ட ஆட்சியர் இன்று தனது whatsapp ஸ்டேட்டஸில் தனது முகநூல் பக்கம் இதுவல்ல. யாரும் ஏமாற வேண்டாம். இது போலி முகநூல் கணக்கு என தெளிவுப்படுத்தியுள்ளார். மேலும், ஆட்சியரின் அக்கவுண்ட்டை ஓபன் ஹாக் செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.