India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வையம்பட்டியில் சூர்யா நினைவு அறக்கட்டளை மற்றும் வையம்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து உலக சாதனை நிகழ்வை இன்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் பெரம்பலூர் தனியார் பள்ளியை சேர்ந்த 6ஆம் வகுப்பு மாணவன் விமல் என்பவர் 206 நாடுகளில் கொடியை கண்டு, நாடு மற்றும் அதன் தலைநகரை 6.58 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை புரிந்திருக்கிறார். இதற்கு பெற்றோர்கள், மாணவ மாணவிகள், ஊடகத்தினர் கலந்து கொண்டு மாணவனை வாழ்த்தினர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் விடிவெள்ளி சிறப்பு பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு இன்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி சீருடைகளை வழங்கினார். மேலும் அங்கு இருக்கும் குழந்தைகளுடன் உரையாடி, கல்வி கற்பிக்கும் முறைகள் குறித்தும், பாட புத்தகங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் திருச்சி கிழக்கு மாநகரச் செயலாளர் மதிவாணன் கலந்து கொண்டார்.
திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் வருகின்ற ஆக.31ஆம் தேதி அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஆண், பெண் என இருபாலரும் கலந்து கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து மேலும் தகவலுக்கு 0431-241272 என்ற எண்ணில் அழைக்கலாம்.
திருச்சி காந்திமார்க்கெட் சவுராஷ்ட்ரா தெருவில் நேற்று காலை மாநகராட்சி ஊழியர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கால்வாய்க்குள் கைத்துப்பாக்கி ஒன்று கிடந்தது. அதை எடுத்து, சாக்கடை கால்வாய்க்கு வெளியே போட்ட அவர்கள், இதுபற்றி காந்தி மார்க்கெட் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்பில் பொய்யாமொழி 25ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, இன்று திருச்சி மன்னார்புரம் பகுதியில் அமைந்துள்ள விழியிலந்தோர் மகளிர் மறுவாழ்வு மையத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காலை உணவும், அங்கு இருக்கும் பொது மக்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கினார். மேலும் மறுவாழ்வு மையத்தில் இருப்பவர்களுக்கு தனது கைகளிலே அமைச்சர் உணவு பரிமாறினார்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை நடந்த வெவ்வேறு சாலை விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சாலை விபத்துகளை தடுக்க திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மாதம் தோறும் சாலை பாதுகாப்பு வாரவிழா கடைபிடிக்கப்படுகிறது. இருப்பினும், மக்களின் கவனக்குறைவால் சாலை விபத்துகள் நிகழ்கிறது. திருச்சி மாவட்டத்தில் கடந்தாண்டு சாலை விபத்துகளால் 700 பேர் வரை பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி மாவட்டம் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). இவர் ஹோட்டல் மாஸ்டர் புலிவலம் முசிறி சாலையில் பைக்கில் சுக்காம்பட்டி புங்கவாரிக் கொட்டம் வந்த போது
எதிரில் வந்த கார் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். முசிறி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.
திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, 5 இளைஞர்கள் சந்தேகிக்கும் வகையில் நின்றனர். அதில், தவ்ஹீத், அப்துல் கபூர், முகமது மஸ்கின் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இருவர் தப்பி சென்றனர். 3 பேரிடம் 36 போதை மாத்திரைகள், 2 ஊசிகள் கைப்பற்றப்பட்டது. முத்துப்பாண்டி, விஜய் ஆகியோர் போதை மாத்திரை விற்க வலியுறுத்தினர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான பல கட்டுப்பாடுகள ஆட்சியர் பிரதீப்கமார் விதித்துள்ளார். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருளான செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை பூசக்கூடாது. அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைை கரைக்க வேண்டும் என எச்சரித்தார்.
திருச்சி முக்கொம்பு பாலத்தில் நேற்று சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 152 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் அளவை குறைத்து காட்டியதாக, ஜீயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன், எஸ்பி-யின் தனிப்படை காவலர் அருள் உள்ளிட்ட 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.