India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
என்ஐடி கல்லூரி மாணவி பாலியல் தொல்லை தொடர்பாக போராட்டம் நடந்து வரும் நிலையில் மாணவிகள் பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில், 1, விடுதி காப்பாளர்களை மாற்ற வேண்டும். 2, அவதூறாக பேசிய 3 காப்பாளர்களும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தல். 3, வெளி ஊழியர்கள் பணிக்கு வரும்பாது, விடுதி காப்பாளர் உடன் இருக்க வேண்டும். மாணவி தனியாக இருக்கும் போது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
திருச்சி என்ஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்த ஊழியரை கண்டித்து மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விடுதி அறைக்கு WIFI பிரச்னையை சரிசெய்ய வந்த ஒப்பந்த ஊழியர் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இப்படி ஆடை அணிந்தால், அப்படித்தான் நடக்கும் என்ற ரீதியில் வார்டன் பேசியதால் மாணவிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் கல்லூரி மாணவிக்கு ஒப்பந்த ஊழியர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், விடுதி காப்பாளர் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை மரியாதையாகவும், பாதிக்கப்பட்ட மாணவியை தரக்குறைவாகவும் நடத்தியதாக மாணவிகள் ஆதங்கம் தெரிவித்தனர். மேலும், காவல் நிலையத்தில் மாணவியின் ஆடை குறித்தும் வார்டன் விமர்சித்துள்ளதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
திருச்சி அருகே உள்ள துவாக்குடியில் என்ஐடி கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் தங்கி படிக்கும் மாணவி ஒருவருக்கு வியாழக்கிழமை அன்று அங்கு பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவ மாணவிகள் நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இங்கு வந்த காவல்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்
திருச்சி மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து CRML நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழி – 1 சமயபுரம் முதல் வயலூர் மத்தியிலான 19 கி.மீ வழித்தடத்தில் சுமார் 19 நிறுத்தங்கள் உடனும், வழி – 2 துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ வழித்தடத்தில் 26 நிறுத்தங்கள் என மொத்தம் 45 நிறுத்தங்கள் உடன் சுமார் 11000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
திருச்சி மெட்ரோ ரயில் திட்டங்கள் குறித்து CRML நேற்று விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் வழி – 1 சமயபுரம் முதல் வயலூர் மத்தியிலான 19 கி.மீ வழித்தடத்தில் சுமார் 19 நிறுத்தங்கள் உடனும், வழி – 2 துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரையிலான 26 கி.மீ வழித்தடத்தில் 26 நிறுத்தங்கள் என மொத்தம் 45 நிறுத்தங்கள் உடன் சுமார் 11000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
கருமலை அடுத்த அழகாஸ்திரிபட்டியில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உணவு தேடி சுற்றி திரிந்த ஆண் காட்டெருமை கன்றுக்குட்டி தனி நபருக்கு சொந்தமான கிணற்றுக்குள் தடுமாறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்நிலையில் தகவலின் பேரில் இன்று சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் பல மணி நேரம் போராடி கயிற்றின் உதவியுடன் காட்டெருமை கன்றின் உடலை மீட்டனர்.
தமிழக மகளிர் மேம்பாட்டு அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான நவராத்திரி கண்காட்சி செப்டம்பர் 21ஆம் தேதி முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், தங்களது விபரங்களை http://exhibition.mathibazzar.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 2547 வாக்கு சாவடிகளின் பட்டியலை இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் உதவியாட்சியர் (பயிற்சி) அமித் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வாரிசு சான்றிதழ் தர ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி கோ.அபிஷேகபுரம் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் செந்தில் குமார் வாரிசு சான்றிதழ் தர ஒருவரிடம் மூன்றாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இந்நிலையில் அவர் இன்று பணத்தை கொடுத்த பொழுது, லஞ்ச ஒழிப்புத்துறையினால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.