Tiruchirappalli

News August 24, 2024

ரூ.2 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு – எஸ்பி

image

சீமான், சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் மூன்று பொறுப்பாளர்கள் மீது, 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார், தனது எக்ஸ் வலைத்தள பதிவிட்டுள்ளார். மேலும், இணையத்தில் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்வது குறித்த புகார்களை இணையதளத்தில் பதிவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 24, 2024

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

image

வெளிமாநிலத்தில் இருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாட்டில் நிரந்தரமாக இருக்கும் சார்ம் (Sharm) வலைத்தளத்தில் பதிவு செய்து குடும்ப அட்டை பெறாதவர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டை வழங்கப்படும் என்றும் குடும்ப அட்டை வழங்கியதுடன் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் நியாய விலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களில் பெற்றுக் கொள்ளலாம் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News August 24, 2024

ஊழல் தடுப்பு கண்காணிப்பாளருக்கு அண்ணா விருது

image

திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை காவல் துணை கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு தமிழக அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான 2023ஆண்டிற்கான சீரிய பணியினை தமிழக அரசு அங்கீகரித்து தமிழக முதல்வரின் சிறப்பு பணிக்கான அண்ணா பதக்கத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வழங்கி கெளரவித்துள்ளார். இந்த விருது கிடைத்தமைக்கு பெருமிதம் கொள்வதாக டிஎஸ்பி தெரிவித்தார்.

News August 24, 2024

திருச்சி: தினத்தந்தி வாகனம் மோதி விபத்து

image

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடியை அடுத்துள்ள புதுக்குடி அருகே நேற்று நள்ளிரவு தினத்தந்தி நாளிதழ் ஏற்றிச்சென்ற வாகனம் சாலையில் நடந்து சென்ற பாதயாத்திரைகள் மீது மோதியது. இந்த விபத்தில் 15 க்கும் மேற்பட்ட பாதயாத்திரர்கள் காயமுற்றனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

News August 24, 2024

சீமான் மீது மான நஷ்ட வழக்கு – திருச்சி எஸ்.பி., வருண்குமார்

image

எக்ஸ் தளத்தில் இருந்து நானும் எனது மனைவியும் தற்காலிகமாக விலகுவதாக திருச்சி எஸ்.பி. வருண்குமார் அறிவித்துள்ளார். இந்நிலையில், “Online Abuse-ஐ பொறுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் யாருக்கும் இல்லை; உடனே புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், 2 பொறுப்பாளர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

திருச்சி மாவட்ட எஸ்.பி. வருத்தம்

image

திருச்சி எஸ்.பி. வருண்குமார் எக்ஸ் தளத்தில் இருந்து தற்காலிகமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார். சட்டப்படி நோட்டீஸ் அனுப்பியதற்காக, என் குழந்தைகள், குடும்பத்தினர் புகைப்படங்களை தரம் தாழ்ந்து சித்தரித்து இணையத்தில் வெளியிட்டனர். பயத்தினாலோ அருவருப்பினாலோ இந்த முடிவை எடுக்கவில்லை. இதன் பின்னணியில் ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் இருப்பதாக சந்தேகம் எழுகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

News August 24, 2024

ஒரே டிக்கெட்டில் இனி சிங்கப்பூர் செல்லலாம்

image

திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டு மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News August 24, 2024

ஒரே டிக்கெட்டில் இனி சிங்கப்பூர் செல்லலாம்

image

திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டு மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News August 23, 2024

திருச்சி ஆட்சியர் அழைப்பு

image

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு தாட்கோ மூலம் நன்னிலம் பெண்கள் உடைமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார். இத்திட்டத்தில் வாங்கும் நிலத்திற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100% விலக்கு அளிக்கப்படுவதாகவும், இதற்கு விண்ணப்பிக்க சாதி சான்று மற்றும் நிலத்தின் சந்தை மதிப்பு ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறுமாறு தெரிவித்துள்ளார்.

News August 23, 2024

திருச்சியில் டிஎஸ்பிக்கள் மாற்றம்

image

தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி திருச்சி மாவட்ட போதைப்பொருள் தடுப்பு டிஎஸ்பி தினேஷ் குமார் லால்குடிக்கும், கேகே நகர் ஏசிபி பழனியப்பன் மாவட்ட குற்றப்பிரிவு துறைக்கும், சேவை பயிற்சி துறை டிஎஸ்பி மயில்சாமி மயிலாடுதுறைக்கும் பணியிட மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!