Tiruchirappalli

News August 28, 2024

திருச்சி அருகே ஹோட்டல் மாஸ்டர் பலி

image

திருச்சி மாவட்டம் சிங்கம்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (30). இவர் ஹோட்டல் மாஸ்டர் புலிவலம் முசிறி சாலையில் பைக்கில் சுக்காம்பட்டி புங்கவாரிக் கொட்டம் வந்த போது
எதிரில் வந்த கார் நேருக்கு நேர் மோதியது.  இதில் படுகாயம் அடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். முசிறி போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர்.

News August 28, 2024

திருச்சியில் 3 பேர் கைது – திடுக்கிடும் தகவல்

image

திருச்சி காந்தி மார்க்கெட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் தலைமையிலான போலீசார் காந்தி மார்க்கெட் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, 5 இளைஞர்கள் சந்தேகிக்கும் வகையில் நின்றனர். அதில், தவ்ஹீத், அப்துல் கபூர், முகமது மஸ்கின் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இருவர் தப்பி சென்றனர். 3 பேரிடம் 36 போதை மாத்திரைகள், 2 ஊசிகள் கைப்பற்றப்பட்டது. முத்துப்பாண்டி, விஜய் ஆகியோர் போதை மாத்திரை விற்க வலியுறுத்தினர்.

News August 28, 2024

விநாயகர் சிலைகளை கரைக்க கட்டுப்பாடு

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான பல கட்டுப்பாடுகள ஆட்சியர் பிரதீப்கமார் விதித்துள்ளார்.  சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருளான செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.  சிலைகள் மீது எனாமல் மற்றும் செயற்கை சாயத்தை பூசக்கூடாது.  அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளைை கரைக்க வேண்டும் என எச்சரித்தார்.

News August 27, 2024

ஜீயபுரம் காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

திருச்சி முக்கொம்பு பாலத்தில் நேற்று சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 152 கிலோ குட்கா உள்ளிட்ட போதை பொருட்களின் அளவை குறைத்து காட்டியதாக, ஜீயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன், எஸ்பி-யின் தனிப்படை காவலர் அருள் உள்ளிட்ட 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News August 27, 2024

ஓடும் ரயிலில் இறங்க முயன்ற விபரீதம்

image

திருச்சியில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையில் சிக்கிக் கொண்டவரை பாதுகாப்பாக மீட்க சக பயணிகள் உதவினர். காயங்களுடன் மீட்கப்பட்ட ஓய்வுப்பெற்ற ரயில்வே அதிகாரி ஜெயச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பல்லவன் விரைவு ரயிலில் பயணித்த ஜெயச்சந்திரன் ரயில் நிற்பதற்கு முன் இறங்க முயன்றபோது தவறி விழுந்தார்.

News August 27, 2024

சமயபுரம் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, சமயபுரம் சுங்கச்சாவடி வரி அனைத்து வாகனங்களுக்கும் மாதாந்திர பாஸ் மட்டும் சுங்கச்சாவடியில் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் 25 வரை கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News August 27, 2024

சமயபுரம் சுங்கச்சாவடியில் கட்டண உயர்வு

image

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1ம் தேதி பயனர் கட்டணம் மாற்றியமைக்கப்படுகிறது. அதன்படி, சமயபுரம் சுங்கச்சாவடி வரி அனைத்து வாகனங்களுக்கும் மாதாந்திர பாஸ் மட்டும் சுங்கச்சாவடியில் வாகனத்தின் வகையைப் பொறுத்து ரூ.5 முதல் 25 வரை கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வுக்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

News August 26, 2024

எந்த செல்வாக்கில் அருகருகே பணியாற்றுகிறீர்: சீமான் காட்டம்

image

திருச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எந்த செல்வாக்கில் நீங்களும் உங்கள் மனைவியும் அருகருகே பணியை பெற்றுக் கொண்டு செயல்பட்டு வருகிறீர்கள்? என கேள்வி எழுப்பினார். மேலும் ஐ.பி.எஸ். படித்த திருச்சி எஸ்.பி. அவரது வேலையை மட்டும் பார்க்க வேண்டும், திமுகவில் வேலை செய்ய வேண்டுமானால் ஐ.டி. வேலைக்கு போகட்டும் என்று கடுமையாக சாடினார்.

News August 26, 2024

திருச்சியில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு பெருவிழா ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கு திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர் மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அறிவித்துள்ளார். இதற்காக அந்தந்த பேருந்து நிலையங்களில் சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

News August 26, 2024

திருச்சி எஸ்பி அவதூறு வழக்கில் மேலும் இருவர் கைது

image

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே குறித்தும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திருச்சி சைபர் கிரைம் போலீசாரால் 51 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று சண்முகம், அப்துல் ரகுமான் ஆகிய இருவரை தில்லைநகர் போலீசார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!