Tiruchirappalli

News September 1, 2024

சமயபுரம் சுங்க சாவடியில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது

image

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சமயபுரம் சுங்கச்சாவடியில் மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு இன்று முதல் அமலுக்கு வந்தது. வாகனத்தின் வகையைப் பொறுத்து ஒரு மாதந்திர பயணத்திற்கான கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சலுகை ஒப்பந்தத்தின்படி கட்டண உயர்வு ஆண்டுதோறும் அமலுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

News September 1, 2024

திருச்சி கமிஷனர் தலைமையில் சிறப்பு முகாம்

image

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி தலைமையில் இன்று (செப்.1) காணாமல் போனவர்களை கண்டறிய சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மனுதாரர்கள் தொலைந்தவர்களின் அடையாள அட்டை, புகைப்படம் மற்றும் இதர விவரங்களுடன் கலந்து கொள்ளலாம். திருச்சியில் உள்ள ஹோட்டல் அஜந்தா, கே.கே நகர் ஆயுதப்படை சமுதாய கூடம், ஸ்ரீரங்கம் சிதம்பரம் மஹால், தில்லை நகர் அருணா தியேட்டர் உள்ளிட்ட 6 இடங்களில் முகாம் நடைபெற உள்ளது.

News September 1, 2024

சொந்த நூலகங்களுக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு

image

திருச்சியில் சிறப்பாக சொந்த நூலகம் அமைத்து செயல்படுத்தி வரும் வாசகர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் trichyliboffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட நூலக அலுவலர் முகவரிக்கோ விண்ணப்பங்களை கடிதம் மூலம் சமர்ப்பிக்கலாம். மேலும் விண்ணப்பிப்பவர்களின் பெயர், முகவரி, நூல்களின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.

News August 31, 2024

புத்தகத் திருவிழாவிற்கு இடம் தேர்வு செய்த ஆட்சியர்

image

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ள புத்தக திருவிழாவிற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அதியமான் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News August 31, 2024

திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

image

அதிமுகவின் திருச்சி புறநகர் வடக்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்டங்களின் சார்பில் வரும் செப்.7ஆம் தேதி அன்று கொள்ளிடம் பாலம் அருகே, கொள்ளிடம் தடுப்பணை தொடர்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையிலும், முன்னாள் எம்பி ப.குமார் முன்னிலையில் நடக்கும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

News August 31, 2024

என்ஐடி விடுதி காப்பாளர் ராஜினாமா

image

திருச்சி என்ஐடி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் விவகாரம் தொடர்பாக விடுதி காப்பாளர் பேபி தனது பதவியை ராஜினாமா செய்தார். மாணவியிடம் ஆடை குறித்து தரக்குறைவாக பேசியதால், என்ஐடி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. பேபியை தொடர்ந்து மற்ற 2 விடுதி காப்பாளர்கள் சபிதா பேகம், மகேஸ்வரி ஆகியோர் ராஜினாமா செய்யவுள்ளனர்.

News August 31, 2024

மண்ணச்சநல்லூர் அருகே ஒருவர் பலி

image

மண்ணச்சநல்லூர் அருகே பூனாம்பாளையம்   பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் கடைவீதி பகுதிக்கு சென்றார். அப்போது, ஓமாந்தூர் பகுதியைச் சேர்ந்த குருபரன் (20) தனது இரு சக்கர வாகனத்தை முன்னாள் சென்ற பாஸ்கர் மீது மோதினார். இதில், பலத்த காயமடைந்த பாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

News August 31, 2024

விநாயகர் சிலைகள் வைக்க கட்டுப்பாடு

image

திருச்சியில் வருகிற 7ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் காவல் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சிலை வைக்கப்படும் இடம் தனியார் அல்லது மாநகராட்சி அல்லது அரசாங்க இடமாக இருந்தால் உரிய அனுமதி கடிதம் பெற்று வைக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

News August 31, 2024

6 துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News August 31, 2024

ஆறு துணை மின் நிலையங்களில் இன்று மின்தடை

image

திருச்சி மாவட்டத்தில் கொளக்குடி, குணசீலம், பூவலூர், வேங்கைமங்கலம், அபிஷேகபுரம், காட்டுப் புத்தூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இன்று (31.8.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09:45 மணி முதல் மணி மாலை 04:00 வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!