Tiruchirappalli

News March 4, 2026

திருச்சி: லஞ்சம் பெற்ற மின் உதவி பொறியாளர் கைது

image

திருச்சி மாவட்டம் மருங்காபுரி உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் உதவி மின் பொறியாளராக பார்த்திபன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரிடமிருந்து ரூ.5000 இலவச மின் விநியோகம் பெறுவதற்கு கையூட்டு பெறும்போது, திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.

News March 4, 2026

ஹிந்தி எழுத்துக்களை அழித்த திமுகவினர்

image

திருச்சி தெற்கு ரயில்வே திருச்சிராப்பள்ளி கோட்ட மேலாளர் அலுவலகத்தின் நுழைவு வளைவு புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதில், அலுவலக வாயிலில் கர்தவ்ய த்வார் என எழுதி உள்ளனர். இதனை கண்டித்து ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவாயில் முன்பாக, திமுகவினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகளில் உள்ள இந்தி எழுத்துகளை கருப்பு மை கொண்டு அழித்தனர்.

News March 4, 2026

திருச்சி: E-சேவை மையம் தொடங்க அரிய வாய்ப்பு!

image

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <>tnesevai.tn.gov.in<<>> என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News March 4, 2026

திருச்சி: ரூ.1,20,000 சம்பளத்தில் அரசு வேலை

image

இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆனது காலியாக உள்ள Junior Executive, Junior Executive Assistant உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 730
3. சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
4. கல்வித் தகுதி: B.E. / B.Tech, Diploma
5. கடைசி தேதி: 25.03.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 4, 2026

திருச்சி: ஆதார் சிறப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி தலைமை தபால் நிலையம் மற்றும் தெப்பக்குளம் துணை தபால் நிலையத்தில், வரும் 28-ம் தேதி வரை ஆதார் சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் இம்முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு, ஆதார் பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், புதிய ஆதார் விண்ணப்பம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அஞ்சல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 4, 2026

திருச்சி: இலவச தையல் மிஷின் வேண்டுமா?.. APPLY

image

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

News March 4, 2026

திருச்சி: விவசாயிகளுக்கான புதிய செயலி அறிமுகம்

image

திருச்சி மாவட்டத்தில் உள்ள 1,83,115 விவசாயிகளில் 1,33,300 பேர் மட்டுமே பிரதமரின் தனித்துவ அடையாள எண் பெற்றுள்ளனர். இன்னும் 49,815 பேர் அடையாள எண் பெறாமல் உள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகள் பதிவை துரிதப்படுத்தும் வகையில் FARMER REGISTRY TN என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் விவசாயிகள் தங்களது சிட்டா விவரங்களை தாமாகவே பதிவு செய்து கொள்ளலாம் என வேளாண் இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News March 4, 2026

திருச்சி: பாலியல் வன்கொடுமை வழக்கு – நீதிமன்றம் அதிரடி

image

துறையூர், ஜம்புநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பெருமாள் (32) என்பவர் முட்புதருக்குள் கடத்திச்சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இவ்வழக்கில் பெருமாள் கைது செய்யப்பட்டு, வழக்கு விசாரணை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் குற்றவாளி பெருமாளுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.6000 அபராதம் விதித்து நீதிபதி சண்முகப்பிரியா தீர்ப்பளித்தார்.

News March 4, 2026

திருச்சி: இங்கெல்லாம் இன்று மின்தடை!

image

திருச்சி மாவட்டத்தில் இன்று (மார்ச்.4) மாதந்தர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக கம்பரசம்பேட்டை, சத்திரம் பேருந்து நிலையம், வானப்பட்டறை, முருங்கப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், சோழ ராஜபுரம், கே.சாத்தனூர், வடுகப்பட்டி, பாரி நகர், காஜா நகர், ஆர்.எஸ்.புரம், குளவாய்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை SHARE பண்ணுங்க!

News March 4, 2026

திருச்சி: பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

image

திருச்சியில் செயல்பட்டு வந்த எல்பின் நிதி நிறுவனம், பண மோசடி செய்ததாக 8,441 பேர் புகார் அளித்திருந்தனர். அவர்களில் இதுவரையில் 3942 பேர் மட்டுமே பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வழக்கு தொடர்புடைய ஆவணங்களை ஆஜர் செய்துள்ளனர். மீதமுள்ள நபர்கள் உரிய ஆவணங்களுடன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி, வாக்குமூலம் வழங்க வேண்டும் என துணை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!