Tiruchirappalli

News March 6, 2026

திருச்சி மக்களே… இன்று இதை மறக்காதீங்க!

image

திருச்சி மக்களே இன்று காலை 8.24 மணிக்கு கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி அடைந்துள்ளார். எனவே இன்று மாலை 5.30 மணிக்குள் அருகிலுள்ள கோயிலிக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட்டு சாப்பாடு, தண்ணீர், பழச்சாறு, செருப்பு, குடை ஆகியவற்றை தானமாக வழங்கினால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் என நம்பிக்கை! மறக்காமல் இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 6, 2026

திருச்சி: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

திருச்சி மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News March 6, 2026

திருச்சி: விமானம் ரத்து – அவசர எண்கள் அறிவிப்பு

image

திருச்சி விமான நிலையத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்று முக்கிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகள், ஈரான் – இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக தொடர்ந்து 5-வது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பயணிகள் தங்களது விமான பயணம் குறித்த நேரடி தகவல்களை பெறுவதற்கு 0431-2341755, 0431-2341766, 93116-20097 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 6, 2026

திருச்சி: காய்ச்சலால் 1 வயது குழந்தை உயிரிழப்பு

image

முசிறி அருகே மணலி அய்யம்பட்டியைச் சேர்ந்த அனன்யா என்ற 1 வயது குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

News March 6, 2026

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு; 276 மாணவர்கள் ஆப்சென்ட்

image

திருச்சி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 2ம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தேர்வில், மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 134 மையங்களில் 258 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் 2வது தேர்வாக ஆங்கில மொழிப்பாடத்தேர்வு நேற்று நடைபெற்றதில், 30,748 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர். மேலும் 276 தேர்வு எழுத வரவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.

News March 6, 2026

திருச்சி: போர் பதற்றம் – எம்பி கோரிக்கை

image

திருச்சி எம்பி துரை வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில், வளைகுடா பகுதியில் உள்ள தமிழர்கள் உள்பட எந்த ஒரு இந்தியருக்கும், சிரமங்களோ ஆபத்தோ ஏற்படாத வகையில் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து, இந்தியா அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

News March 6, 2026

திருச்சி: பைக் விபத்தில் சிறுவன் பலி

image

திருச்சி இரைட்டை வாய்க்கால் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்(17). இவர் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த ராகவன் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது ராயல் ரோட்டில், முன்னால் சென்ற காரை ராகவன் முந்தி முயன்றபோது, நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், கார் ஏறியதால் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமயில் சேர்த்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் ஸ்ரீராம் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

News March 5, 2026

திருச்சி: பால் உற்பத்தியாளர்களுக்கு அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், கோடை காலத்தினை முன்னிட்டு, திருச்சி மாவட்ட கிராமப்புற பால் உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் மூலம் கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்படும் பாலிற்கு, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாதங்களுக்கு மட்டும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.2 கூடுதல் ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்,

News March 5, 2026

விவசாயிகள் வேளாண் பயிர்களை காப்பீடு செய்ய அழைப்பு

image

திருச்சி மாவட்ட விவசாயிகள் 2025-26 ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல் நவரை, உளுந்து, சோளம், எள் பயிர்களை மார்ச் 17 மற்றும் கரும்பை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யலாம். இதற்கு கட்டணமாக 1 ஏக்கர், நெல்லுக்கு ரூ.578, சோளத்துக்கு ரூ.234, எள்ளுக்கு ரூ.230, கரும்புக்கு ரூ.3,300ஐ, இ.சேவை மையங்கள், கூட்டுறவு, தேசிய வங்கிகளில் செலுத்தி காப்பீடு செய்யலாம் என வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.

News March 5, 2026

திருச்சி: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.

1.திருச்சி மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 0431-2460125
2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3.Toll Free: 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!