India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி மாவட்டத்தில் கல்வி பயிலும் உடலியக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர்,காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவ,மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை,கல்வி சான்றிதழ்களின் நகல்களை எடுத்துக்கொண்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் அம்பிகாபுரம், புத்தாநத்தம், சமயபுரம் உள்ளிட்ட துணை மின்நிலையங்களில் நாளை (05.10.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால், அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, வள்ளுவர் நகர் உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மணி மாலை
4 வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 14 மருத்துவக் கல்லூரிகளுக்கு டீன்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, என்பவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி முதல்வராக கலைவாணி நியமிக்கப்பட்டுள்ளார். கலைவாணி சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியுள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுஜய் சிதி என்ற மாணவி திருச்சி என்ஐடி கல்லூரியில் முதலாம் ஆண்டு கட்டிடக்கலை பயின்று வருகிறார். இந்நிலையில் அவர் கல்லூரி விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லாததாலும் ஆர்க்கிடெக்சர் படிப்பின் மீது விருப்பம் இல்லாததால் விடுதியில் அளவுக்கு அதிகமான பாரசிட்டாமல் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். சக மாணவிகள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
திருச்சியில் இன்று 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. திருச்சி கேம்பியன் பள்ளி, காட்டூர் மான்ட்போர்டு பள்ளி, காஜாநகர் சமது பள்ளி, திண்டுக்கல் சாலையில் ராஜம் கிருஷ்ணமூர்த்தி பப்ளிக் ஸ்கூல் என 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து போலீசார் அனைத்து பள்ளிகளுக்கும் மோப்பநாய்களுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே காட்டூரில் செயல்படும் மான் போர்டு மேல்நிலைப் பள்ளிக்கு இன்று காலை இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழப்பு செய்யும் பிரிவு போலீசார் பள்ளியில் முழுமையாக சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரிய வந்தது. மேலும் இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி, குற்ற புலனாய்வுத் துறை போலீஸ் தலைமையில் அரியமங்கலம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2,050 கிலோ ரேஷன் அரிசியை கைப்பற்றினர். கடத்தலில் ஈடுபட்ட காஜா மொய்தீன் என்பவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இவர் தொடர் கடத்தலில் ஈடுபட்டு வருவதால், குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்தனர். இதனையடுத்து திருச்சி காவல் ஆணையர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆணை பிறப்பித்தார்.
திருச்சி மத்திய சிறையில் கைதி உயிரிழந்தது தொடர்பாக எஸ்.பி. விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, கைதி திராவிடமணி என்பவரை சிறையில் அடைப்பதற்கு முன் பரிசோதனைகள் மேற்கொண்ட பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து சட்ட நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டது என எஸ்.பி. வருண் குமார் தெரிவித்துள்ளார்.
துவாக்குடி அருகே உள்ள என்ஐடி கல்லூரியில் எம்சிஏ படிக்கும் மத்திய பிரதேசம் மாணவி ஓஜஸ்விகுப்தா கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்றவர் இன்று வரை திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் திருவெறும்பூர் டிஎஸ்பியிடம் புகார் கொடுத்த நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், மத்திய பிரதேச முதல்வரை சந்தித்து தங்களது மகளை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு மனு அளித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்றால் அந்தந்த காவல் சரகத்தில் பணியாற்றும் சார் ஆய்வாளர், ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள். மொத்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்படுவார்கள் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.