India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலங்கைத் தலைநகா் கொழும்புவிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் மூலம் நேற்று வந்த பெரம்பலூரை சேர்ந்த ஜெயக்குமாா் என்பவா் தனது கடவுச்சீட்டில் உள்ள விவரங்களை முறைகேடாக மாற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை அதிகாரிகள் போலீசாரிடம் ஒப்படைத்தனா். இதுதொடா்பாக விமான நிலைய போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
திருச்சி இலந்தைப்பட்டியில் ஒலிம்பிக் அகாடமி, 24 விளையாட்டுகளுக்கு பயிற்சி பெறும் வகையில் அமைய உள்ளது. இதேபோல் கிரிக்கெட் விளையாடுவதற்கு மைதானமும் அமைக்கப்பட உள்ளது. மேலும் பஞ்சபூர் பகுதியில் டைட்டில் பார்க் தொடர்பாக டெண்டர் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில், அந்த பணிகள் அனைத்தும் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசுசார்பில் ரூ.600 கோடி நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி மாநகர போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம்ஜி நகர், மில்காலனி பகுதியில் கண்டோன்மென்ட் உதவி ஆணையர் நடத்திய அதிரடி சோதனையில், பூபதி என்ற நபரிடமிருந்து ரூ.12,000 மதிப்புள்ள 1.250 கிலோ எடை கொண்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதில் பூபதியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருச்சி தனியார் கல்லூரியில் இன்று நடைபெற்ற நான் முதல்வன் ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சேர்க்கை ஆணைகளை வழங்கி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியா, வருவாய் கோட்டாட்சியர் அருள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
லால்குடியைச் சேர்ந்த இளம்பெண் விடுதியில் தங்கி படித்து வருகிறார். அதேபோல் சிறுமருதூரை சேர்ந்த சிலம்பரசன். தனக்கு திருமணமானதை மறைத்து மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் வார விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த போது மாணவியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று நண்பரின் வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வுசெய்துள்ளார். இதையடுத்து லால்குடி போலீசார் சிலம்பரசனை போக்சோவில் கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு 917 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அந்த விநாயகர் சிலைகளில் இதுவரை 756 சிலைகள் இதுவரை கரைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று 110 சிலைகள் கரைக்கப்பட உள்ளன. மேலும் 51 சிலைகள் இன்னும் கரைக்கப்பட வேண்டி உள்ளது என காவல்துறை இன்று அறிவித்துள்ளது.
விடுதலைப் போராட்ட வீரர் இமானுவேல் சேகரனார் நினைவு தினத்தை ஒட்டி திருச்சியில் இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். திமுக திருச்சி தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்தி உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்த ஆண்டு செப்டம்பர் வரை கால்நடைகளை பிடித்து 14 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி நகர் நல அலுவலர் மணிவண்ணன் நேற்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் 12ஆம் தேதி முதல் தொடங்குவதாக திருச்சி ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி 10 ஆம் தேதி பயணம் செய்ய விரும்புவோர், செப். 12 ஆம் தேதியும், ஜனவரி 11ஆம் தேதி பயணம் செய்ய செப். 13ஆம் தேதியிலும், ஜனவரி 12ஆம் தேதி பயணம் செய்ய செப். 14ஆம் தேதியும் ஜனவரி 13ஆம் தேதி பயணம் செய்ய செப்.15ஆம் தேதி தேதியும் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளலாம்.
மருங்காபுரி அடுத்த அழகாபுரியைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் நேற்று அவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை கொண்டு சட்ட விரோதமாக முத்து குளத்தில் செம்மண் கடத்தியுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற ஸ்ரீரங்கம் ஆர்டிஓ தட்சிணாமூர்த்தி லாரியை பறிமுதல் செய்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், அழகாபுரி விஏஓ கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.