Tiruchirappalli

News March 11, 2026

திருச்சி: TNPSC குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 1 தேர்வு மையத்தில் முற்பகலில் 356 பேர், பிற்பகலில் 368 பேர் என மொத்தம் 724 எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வறைக்குள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

EPS வருகை; முன்னாள் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

image

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இந்நிலையில் அவரை வரவேற்க முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்காததால், அவர்களை விஐபி அறைக்குள் அனுமதிக்க முடியாது என விமான நிறைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 11, 2026

திருச்சியில் பிரதமர் தொடங்கி வைக்கும் முக்கிய திட்டங்கள்!

image

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

News March 11, 2026

பொது தேர்வு தொடக்கம் – அமைச்சர் வாழ்த்து

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல் பொதுதேர்வை எழுத உள்ளீர்கள். அந்த எக்சைட்மென்ட் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது. மற்ற தேர்வுகளை போல இதுவும் ஒரு தேர்வுதான். மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். ஆல் தி பெஸ்ட் என அவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

News March 11, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 11, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 11, 2026

திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

திருச்சி மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 11, 2026

நில மோசடி – திருச்சி காவல்துறை எச்சரிக்கை

image

திருச்சி காவல்துறை நில மோசடிகளில் சிக்காமல் இருக்க எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதில், போலியான ஆவணங்கள் மூலம் சொத்து விற்பனையாளர் அல்லது உண்மையான உரிமையாளர் போல போலியான பட்டா, வில்லங்கச் சான்றிதழ் அல்லது பத்திரம் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. நிலத்தின் அசல் ஆவணங்களை ஆய்வு செய்யாமல் வாங்கும் போது, இது போன்ற ஏமாற்று வேலைகள் நடக்கும். எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர்.

News March 11, 2026

மாணவர்களுக்கு பாலியல் சீண்டல் – ஆசிரியர் கைது

image

மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் செயல்படும் தொடக்கப்பபள்ளியில் பயிலும் மாணவர்களிடம் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் பாஸ்கர்(57) என்பவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று பொதுமக்கள் நடத்திய போராட்டத்தால் இன்று ஆசிரியர் பாஸ்கர் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி(55) ஆகியோரை கைது செய்தனர் .

News March 11, 2026

திருச்சிக்கு வரும் NDA கூட்டணி தலைவர்கள்!

image

பஞ்சப்பூரில் இன்று(மார்ச் 11) NDA கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்காக பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னதாக நேற்று பாஜக மாநில தலைவர் நாயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் வருகை தந்துள்ளனர். தொடர்ந்து இன்று காலை EPS, பிரதமர் மோடி, அன்புமணி ராமதாஸ், TTV உள்ளிட்ட கூண்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் மீண்டும் 3வது முறையாக ஒரே மேடையில் சங்கமிக்க உள்ளனர்.

error: Content is protected !!