Tiruchirappalli

News March 13, 2026

திருச்சி கிரிக்கெட் வீரருக்கு பிசிசிஐ விருது அறிவிப்பு

image

தேசிய அளவிலான கிரிக்கெட் போட்டியில், 19 வயது பிரிவில் தமிழக அணிக்காக விளையாடிய திருச்சியை சேர்ந்த ஹேம் சுதேசனுக்கு பிசிசிஐ விருது அறிவித்துள்ளது. இவர் 2024-25 ஆம் ஆண்டிற்கான கூச் பிஹார் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்ற சாதனை படைத்தார். இந்த சாதனையை பாராட்டும் விதமாக இவருக்கு எம்.ஏ.சிதம்பரம் விருது வரும் 15ஆம் தேதி டெல்லியில் நடக்கும் விழாவில் வழங்கப்பட உள்ளது.

News March 13, 2026

திருச்சி: 1000 ஆண்டுகள் பழமையான சிலை கண்டெடுப்பு

image

திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் பெரம்பலூரைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செல்வபாண்டியன் கள ஆய்வினை மேற்கொண்டார். அப்போது நெய்க்குப்பை கிராமத்தில் உள்ள வேம்படியான் கோவில் பகுதி மற்றும் அருகில் உள்ள புதூர் உத்தமனூரில் அய்யனார் கோவில் பகுதியில் பிற்சோழர் காலத்தை சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலைகளை கண்டறிந்துள்ளார். இந்த சிலைகள் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

News March 12, 2026

திருச்சி: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

திருச்சி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <>Mparivahan <<>>என்ற இணையத்தில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். SHARE IT.

News March 12, 2026

திருச்சி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

திருச்சி மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு<> இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

News March 12, 2026

திருச்சி: ரூ.65,000 சம்பளத்தில் பேங்க் வேலை!

image

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager மற்றும் Junior Assistant Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 1300
3. வயது: 21 – 30
4. சம்பளம்: ரூ.36,000 – ரூ.65,000
5. கல்வித் தகுதி: Bachelor Degree
6. கடைசி தேதி: 19.03.2026
7. விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திருச்சி: உங்களை தேடி வரும் பெட்ரோல்!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ‘<>Fuel@Call<<>>’ என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிபொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

திருச்சி: தமிழ் தேர்வில் 474 பேர் ஆப்சென்ட்

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. திருச்சி மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் மொழி தேர்வு எழுத தனித் தேர்வர்கள் உட்பட 34,501 மாணவ, மாணவிகள் பதிவு செய்திருந்தனர். இதில் 34,027 மாணவ, மாணவிகள் மட்டுமே கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 474 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News March 12, 2026

திருச்சி: அதிரடி தீர்ப்பு – 20 ஆண்டுகள் கடுங்காவல்

image

திருச்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 12, 2026

திருச்சி: அதிரடி தீர்ப்பு – 20 ஆண்டுகள் கடுங்காவல்

image

திருச்சியை சேர்ந்தவர் முருகேசன். இவர் ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் 8ஆம் வகுப்பு படித்துக் கொண்டிந்த சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி, குழந்தை திருமணம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். இவ்வழக்கின் விசாரணை நேற்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் முருகேசனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

News March 12, 2026

திருச்சி: விவசாயி அடித்துக்கொலை?

image

திருச்சி மாவட்டம் ஆலம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ்(50). இவர் நேற்றுக் காலை வீட்டுக்கு வராததால், அவரது மனைவி இசபெல்லாராணி, மகன் ஜேசன் ஆகியோர் தங்களது வயலுக்கு சென்று பார்தபோது, அவர் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, உடலை கைப்பற்றி யாரேனும் கொலை செய்தனரா என விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!