India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33,106 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வு 115 மையங்களில் 115 ஆய்வு அலுவலர்கள் பாதுகாப்பில் நடைபெற உள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நிதி ஆண்டின் கணக்கின்படி கையாளப்பட்ட பயணிகள் மற்றும் கூடுதல் வருவாய் ஈட்டியது மூலம் என்எஸ்ஜி 2 ஆக தரம் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் 79.23 லட்சம் பயணிகளை கையாண்டு ரூ.165.68 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில் முன்பதிவில் ரூ.129.56 கோடியும், டிக்கெட் மூலம் மூலம் ரூ.38.12 கோடி ஈட்டியது. இது ரயில்வே பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் கடந்த 9ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது, அனுமதியின்றி 2 பேர் டிரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோ எடுத்தனர். இதுதொடர்பாக கோட்டை போலீசார் மாகாளிகுடியை சேர்ந்த அஸ்வின் குமார், லால்குடியை சேர்ந்த ரகுராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிரோன் கேமராக்களை பறிமுதல் செய்தனர்.
திருச்சி காந்தி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் இருக்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திருச்சி 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் வந்ததை தொடர்ந்து, அதனை விசாரித்த நீதிபதி பிரபு சங்கர் புகார் மனு மீது முகாந்திரம் இருப்பதால் செப்டம்பர் 19ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் டிரைவர் எனக்கூறி சிலம்பரசன் என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்தும், வீடியோ எடுத்தும், தொடர்ந்து துன்புறுத்தியதாக கல்லூரி மாணவி புகார் அளித்தார். மேலும் கைதாகி உள்ள டிரைவர் சிலம்பரசன் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக பொய்யான அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட இருக்கின்றது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையங்கள், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என திருச்சி பாஸ்போர்ட் மண்டல அலுவலர் ஷரணப் பாதல்வ்வார் தெரிவித்துள்ளார். முன்னதாக 16ஆம் தேதி மிலாதுநபி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடையபட்டியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பிறகு குளத்துராம்பட்டியில் ரூபாய் 30.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பால் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.
திருச்சி ஏர்போர்ட் பகுதியில் அடுக்கும் மாடி குடியிருப்பு ஒன்றில், இளம் பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த கும்பலுடன் தொடர்பில் இருந்ததோடு மட்டுமல்லாமல் மாத சம்பளம் போல் மாமூல் வாங்கிய விபச்சாரத் தடுப்பு பிரிவு எஸ்ஐ கீதா, சிறப்பு எஸ்ஐ சகாதேவன், தனிப்படை காவலர்கள் பிரதீப், இளுஸ்டின் உள்ளிட்ட நான்கு காவலர்களை ஆயுதப் படைக்கு மாற்றி காவல் ஆணையர் ந.காமினி இன்று உத்தரவு பிறப்பித்தார்.
தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 10க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் ஜாபில் என்ற நிறுவனம் ரூ.2000 கோடி முதலீட்டில் திருச்சியில் தொழில் தொடங்க உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதற்கு திருச்சி எம்பி என்ற முறையில் முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்வதாக அவர் கூறியுள்ளார்.
மணப்பாறை அடுத்த மேலபூதக்குடியை சேர்ந்த இந்திரன், நேற்று இரவு தனது டூவீலரில் மணப்பாறை நோக்கி சென்று கொண்டிருந்த போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் இந்திரனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவர் உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.