Tiruchirappalli

News September 15, 2024

கல்லணை கால்வாயில் தந்தை மகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர்

image

திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ். இவர் பெல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று மதியம் தனது இரண்டு மகள்களையும் அழைத்துக் கொண்டு பத்தாளபேட்டை பகுதியில் உள்ள கல்லணை கால்வாய் ஆற்றில் இறங்கி குளித்தபோது, அவரது மகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். அவரை காப்பாற்றுவதற்காக சுரேஷ் தண்ணீரில் இறங்கியதில் சுரேஷும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

News September 15, 2024

திருச்சி பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

image

திருவெறும்பூர் அருகே உள்ள பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது உதவி பொறியாளர் பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கல்வி தகுதி B.E, B.TECH தேர்ச்சி, வயது வரம்பு 36வயது ஆகும். இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News September 15, 2024

திருச்சியில் திருமாவளவன் பதிலடி

image

திருச்சி விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நாங்கள் எல்கேஜி படித்தாலும் சரி, சமூக பொறுப்புடன் நடந்து கொள்கிறோம் என்பதை மக்கள் புரிந்து கொண்டால் போதும் என அன்புமணி ராமதாஸ் விமர்சனத்திற்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

News September 15, 2024

திருச்சியில் மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

image

ஸ்ரீரங்கம், சேதுராப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 27ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த கல்லுரியில் சேர மாணவர்கள் நேரில் சென்று ரூ.150 செலுத்தி விண்ணப்பிக்கலாம். மேலும் தொடர்புக்கு 95974 76719, 82482-52577, 73739-05151, 90424-18693, 98423-16326 என்ற எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News September 15, 2024

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு சிறந்த அந்தஸ்து

image

பொன்மலை ரயில்வே பணிமனைக்கு 5ஆவது முறையாக சிறந்த ஆற்றல் திறன் விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்த விருதை மத்திய அரசின் பிஇஇ செயலாளர் மிலின்ட் தியோர் வழங்கினார். இதில் இந்தியா முழுவதும் 507 நிறுவனங்கள் கலந்து கொண்டன, பொன்மலை ரயில்வே மத்திய பணிமனை இந்த விருதை தட்டி சென்றது. இந்த விருதை பெற காரணமாக இருந்த அனைத்து பணியாளர்களுக்கும் பொன்மலை பணிமனை முதன்மை மேலாளர் நன்றி தெரிவித்தார்.

News September 15, 2024

திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு ரெயில்

image

வார விடுமுறை நாளான இன்று பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக திருச்சியில் இருந்து தாம்பரத்துக்கு சிறப்பு மெமு ரெயில் இயக்கப்படுகிறது. அதன்படி இந்த சிறப்பு ரயிலானது (எண்: 06008) இன்று இரவு 11 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு கும்பகோணம், சிதம்பரம், விழுப்புரம் வழியாக நாளை (திங்கட்கிழமை) காலை 6.05 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்று திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 15, 2024

திருச்சி மாவட்டம் ‘ஹாட்ரிக்’ சாதனை

image

திருச்சி மாவட்டம் கொடிநாள் நிதி வசூலிப்பதில் மாநில அளவில் தொடர்ந்து 3ஆம் முறையாக 3வது இடத்தை பிடித்திருக்கிறது. இதனை முன்னிட்டு தமிழக ஆளுநர் திருச்சி மாவட்ட ஆட்சியரின் கொடிநாள் நிதி வசூலுக்கு பாராட்டு தெரிவித்து சான்றிதழ் அளித்துள்ளார். மேலும் ஆட்சியர் பிரதீப் குமார் பொறுப்பேற்ற ஆண்டில் மட்டும் ரூ.2.65 கோடி வசூல் செய்ததற்கு ஆளுநர் புகழாரம் சூட்டியுள்ளார்.

News September 15, 2024

திருச்சியில் ஊர் நாட்டாமை வெட்டி படுகொலை

image

திருச்சி தேவதானம் பகுதியில் ஊர் நாட்டாமையும், திமுக பிரமுகருமான பிரித்திவிராஜ் என்பவரை நேற்று அடையாளம் தெரியாத சில நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு அண்ணன் ரமேஷ் தம்பி பிரித்திவிராஜுக்கும் ஏற்பட்ட சொத்து பிரச்சனை என காவல்துறை வட்டாரத்தில் இருந்து அறியப்படுகிறது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News September 14, 2024

திருச்சி: 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வை திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33 ஆயிரத்து 108 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இன்று தேர்வு எழுத 24,220 பேர் வருகை தந்தனர்.மேலும் 8888 பேர் தேர்வு எழுத வரவில்லை. அதாவது,100 சதவீதத்தில் 73.15 பேர் வருகை தந்துள்ளனர்.மீதமுள்ள 26.85 பேர் தேர்வு எழுத வரவில்லை.

News September 14, 2024

திருச்சியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி

image

திருச்சியில் சென்டர் ஸ்கொயர் சேஸ் அகாடமி நடத்தும் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி திருச்சி விமான நிலையம் மொரைஸ் சிட்டி பகுதியில் நாளை நடைபெற உள்ளது. இதில் 7,9,12,15, மற்றும் 25 வயது உள்ள ஆண் பெண் இருவரும் பங்கேற்க அனுமதி உண்டு. போட்டியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இன்று இரவு 9 மணிக்குள் 9994462728 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

error: Content is protected !!