Tiruchirappalli

News September 14, 2024

திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை

image

செப்டம்பர் 17ஆம் தேதி மிலாடி நபியை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகளும் அதனுடன் இணைந்து இயங்கும் மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல் பார்களிலும் மதுபானம் விற்பனை தடை செய்யப்படுகிறது. மேலும் அன்றைய தினம் தடையை மீறி மதுபானங்கள் விற்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News September 13, 2024

தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

image

ராம்ஜிநகர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் கார்த்திக். இவர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட போது, திறந்திருந்த பேக்கரியை உரிமையாளரிடம் மூடச் சொல்லி இருக்கிறார். ஆனால் கடையின் உரிமையாளர் வியாபாரம் செய்து கொண்டிருந்ததால், ஆத்திரமடைந்த கார்த்திக் கடை ஊழியரை சரமாரியாக தாக்கியுள்ளார். இதனால், கார்த்திக்கை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து திருச்சி எஸ்பி உத்தரவிட்டுள்ளார். SHAREIT

News September 13, 2024

திருவெறும்பூரில் வாலிபர் படுகொலை

image

திருவெறும்பூர் அடுத்த சர்க்கார் பாளையம் பனையக்குறிச்சி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த சீனிவாசன் மகன் சுந்தர் என்பவர் நேற்று இரவு உறவினர் வீட்டு மொட்டை மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனால் அப்பகுதி மிகப் பரபரப்பாக காணப்படுகின்றது. மேலும் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

News September 13, 2024

திருச்சியில் நாளை 115 மையங்களில் தேர்வு

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்-2 எழுத்து தேர்வு நாளை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 33,106 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்த தேர்வு 115 மையங்களில் 115 ஆய்வு அலுவலர்கள் பாதுகாப்பில் நடைபெற உள்ளது. மேலும் தேர்வு மையங்களுக்கு சென்று வர சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார்.

News September 13, 2024

திருச்சி ரயில் நிலையத்தின் தரம் உயர்வு

image

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் ஒவ்வொரு நிதி ஆண்டின் கணக்கின்படி கையாளப்பட்ட பயணிகள் மற்றும் கூடுதல் வருவாய் ஈட்டியது மூலம் என்எஸ்ஜி 2 ஆக தரம் உயர்ந்துள்ளது. மேலும் கடந்த ஆண்டில் 79.23 லட்சம் பயணிகளை கையாண்டு ரூ.165.68 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இதில் முன்பதிவில் ரூ.129.56 கோடியும், டிக்கெட் மூலம் மூலம் ரூ.38.12 கோடி ஈட்டியது. இது ரயில்வே பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

News September 13, 2024

திருச்சியில் சட்ட விரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது

image

திருச்சியில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலைகள் கடந்த 9ஆம் தேதி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. அப்போது, அனுமதியின்றி 2 பேர் டிரோன் கேமராவை பறக்கவிட்டு வீடியோ எடுத்தனர். இதுதொடர்பாக கோட்டை போலீசார் மாகாளிகுடியை சேர்ந்த அஸ்வின் குமார், லால்குடியை சேர்ந்த ரகுராஜன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து டிரோன் கேமராக்களை பறிமுதல் செய்தனர்.

News September 13, 2024

திருச்சியில் இறைச்சி கடைகளுக்கு இடைக்கால தடை

image

திருச்சி காந்தி சந்தையில் புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் இருக்கும் மீன் மற்றும் இறைச்சி கடைகளுக்கு விடப்பட்ட ஏலத்தில் முறைகேடு நடந்திருப்பதாக திருச்சி 2வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் புகார் வந்ததை தொடர்ந்து, அதனை விசாரித்த நீதிபதி பிரபு சங்கர் புகார் மனு மீது முகாந்திரம் இருப்பதால் செப்டம்பர் 19ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். ஷேர் செய்யவும்

News September 12, 2024

மாணவி பலாத்காரம்: திருச்சி எஸ்பி விளக்கம்

image

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் டிரைவர் எனக்கூறி சிலம்பரசன் என்பவர் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கூட்டு பலாத்காரம் செய்தும், வீடியோ எடுத்தும், தொடர்ந்து துன்புறுத்தியதாக கல்லூரி மாணவி புகார் அளித்தார். மேலும் கைதாகி உள்ள டிரைவர் சிலம்பரசன் அந்த பெண்ணை காதல் வலையில் வீழ்த்துவதற்காக பொய்யான அலங்கார வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

News September 12, 2024

திருச்சியில் பாஸ்போர்ட் அலுவலகங்கள் இயங்காது

image

நாடு முழுவதும் வரும் 17ஆம் தேதி மிலாது நபி கொண்டாடப்பட இருக்கின்றது. அன்றைய தினம் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டு இருப்பதால், திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், பாஸ்போர்ட் சேவை மையங்கள், தபால் அலுவலக பாஸ்போர்ட் சேவை மையங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என திருச்சி பாஸ்போர்ட் மண்டல அலுவலர் ஷரணப் பாதல்வ்வார் தெரிவித்துள்ளார். முன்னதாக 16ஆம் தேதி மிலாதுநபி என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

News September 12, 2024

வையம்பட்டியில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்

image

வையம்பட்டி ஊராட்சி ஒன்றியம், இடையபட்டியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டின் கட்டப்பட்டு வரும் வீட்டின் கட்டுமான பணிகளை இன்று மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். பிறகு குளத்துராம்பட்டியில் ரூபாய் 30.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பால் கூட்டுறவு சங்க கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் பார்வையிட்டார்.

error: Content is protected !!