India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை பிரித்தெடுக்கும் பணி, ஓய்வு பெற்ற நீதியரசர்கள் தலைமையில், கடந்த மாதம் 7 ஆம் தேதி துவங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் தங்கத்தை உருக்கி தனியே பிரிக்கின்ற பணியில் மொத்தம் 526 கிலோ 436 கிராம் 24 காரட் சுத்த தங்கம் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்த வழக்கில் ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை நேற்று விசாரித்த திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் குற்றவாளி சுரேஷுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 11,500 ரூபாய் அபராதமும் விதித்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.50,000 நிவாரணத் தொகை வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டத்தில் வருடத்திற்கு ஒருமுறை புத்தக திருவிழா நடைபெறும். இந்த வருடம் செப்.27 முதல் அக்.6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. புத்தக திருவிழா வெஸ்ட்ரீ பள்ளி மைதானதில் நடை பெற உள்ளது. புத்தக திருவிழாவை பொறுத்தவரை 100 ஸ்டால்கள், குழந்தைகளுக்கான பிரத்யேக வாசிப்பு அரங்கம் மாலை நேரங்களில் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தற்போது மைதானத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பார்வையிட்டார்.
திருச்சி பஞ்சப்பூரில் உள்ள தனியார் பார்சல் அலுவலகத்திற்கு இன்று 3 பார்சல் வந்தது. இந்த பார்சல் சந்தேகப்படும் படியாக இருந்ததால், எடமலைப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்து போலீசார் பார்சலை சோதனை செய்ததில் 82 கிலோ எடை கொண்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பார்சலை கைப்பற்றி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ரயில் நிலையம் அருகே நேற்று நள்ளிரவு ராமேஸ்வரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த சேது எக்ஸ்பிரஸின் கடைசி மூன்று பெட்டிகள் கழண்டு சென்றதால் பயணிகள் அச்சமடைந்தனர். இந்த சம்பவத்தால் திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில்வே அதிகாரிகள் கழண்ட பெட்டிகளை மீண்டும் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் பொருத்தினர். இதுகுறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டுள்ளது.
துவாக்குடி அடுத்த கருப்பு கோயில் அருகே திருச்சி – தஞ்சை சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரி மீது பயணிகள் சென்ற வேன் மோதி 16 பேர் படுகாயம். இவர்கள் 16 பேரும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து துவாக்குடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகின்றது.
வாத்தலை அருகே முட்செடிகள் உள்ள பகுதியில் கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுவதை நேற்று தனியார் தொலைக்காட்சி நிருபர்கள் 2பேர் வீடியோ எடுத்தனர். இதையடுத்து அவர்களை வழிமறித்த 5க்கும் மேற்பட்டோர் அவர்கள் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தற்போது இரு செய்தியாளர்களும் மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கருத்துகளை பதிவிடவும்
தமிழ்நாடு சுற்றுலா துறையின் சார்பில் நேற்று தரவுகள் வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூலை வரை உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் சுமார் 2 கோடி பேர், திருச்சியில் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோவில்களுக்கு வருகை தந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்துக்களை பதிவிடவும் மற்றும் ஷேர் செய்யவும்
திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடு கல்லூரியில் (18.09.2024) நாளை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் திறன் பயிற்சிக்காக இலவச முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற உள்ளது. எனவே, 8, 10, 12ஆம் வகுப்பு தேர்ச்சி & தோல்வியுற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்.
திருச்சியில் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 15ஆம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்களுக்கு 4வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்த தடுப்பூசி 4 மாதம் முதல் 8 மாதங்கள் வரை உள்ள கிடேரி கன்றுகளுக்கு போடப்பட உள்ளது. எனவே கிடேரி கன்றுகள் வைத்திருக்கும் விவசாயிகள் அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுகி தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.