India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஏழு உலக சாதனை படைத்த திருச்சி உய்யகொண்டான் திருமலையை சேர்ந்த ஜன்ஹவிதனவ் என்ற 4 வயது சிறுமியை நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று சென்னைக்கு நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த சிவகார்த்திகேயன் ரசிகர் மன்றத்திற்கு அக்குடும்பத்தினர் தங்களது நன்றியை தெரிவித்தனர்.
சென்னை இந்தியன் ரயில்வேயில் 20 வகைகளில், 14,800க்கும் மேற்பட்ட ரயில் இன்ஜின்கள் உள்ளன. இது குறித்து, ரயில் ஓட்டுனர்கள் முழுமையாக தெரிந்துகொள்ளும் வகையில் அமர்ந்த இடத்தில் இருந்தே கணினி உதவியுடன் பயிற்சி பெறும் வகையில் ‘சிமுலேட்டர்’ அமைக்கப்படவுள்ளது. ரயில் இன்ஜின் குறித்து ஓட்டுனர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, தமிழகத்தில் ஆவடி, திருச்சி உட்பட நாடு முழுதும், 50 மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
சோமரசம்பேட்டை அருகே ரெட்டை வாய்க்கால் பகுதியில் வசித்து வரும் லோகேஷ் குமார் என்ற சிறுவன் மண்ணச்சநல்லூர் பைபாஸ் சாலையில் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றார். அத்தாணி என்ற இடத்தில் தனது வாகனத்தில் வீலிங் செய்து சாகசம் படைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த பேருந்தில் மோதி பலத்த காயமடைந்தார். வீலிங் செய்து விபத்து ஏற்படுத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி மாநகர பகுதிகளில் பல்வேறு இடங்களில் போதை மாத்திரை மற்றும் ஊசிகள் இளைஞர்களிடம் வெகுவாக பயன்படுத்தப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் தனிப்படையினர் உறையூர், பாண்டமங்கலம், காந்தி மார்க்கெட், எடத்தெரு உள்ளிட்ட பகுதிகளை அதிரடி வேட்டை நடத்தி இரண்டு பெண்கள் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து எண்ணற்ற போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலுார் காட்பாடியை சேர்ந்த சரவணனிடம் ரூ.35 லட்சம் வாங்கி ஓராண்டில் இரட்டிப்பாக தருவதாக மோசடி செய்த திருச்சியை சேர்ந்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் மீது வேலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அவரை நேற்று இரவு கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூர் செல்லும் பயணிகள் தவித்து வருகின்றனர். இன்று மாலை 4:20 மணிக்கு திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், 3 மணிக்கே சென்றதால்
விமானத்தை தவறவிட்ட 20க்கும் மேற்பட்டோர் தவித்தனர்.
விமானத்தை தவறவிட்ட பயணிகள் நாளை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செல்லுமாறு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதிகளில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும்,பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து இன்று மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன் முன்னிலையில், ஒப்பந்ததாரர்கள் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
ராகுல் காந்தியின் நாக்கை அறுத்தால்
அவர்களுக்கு ரூ.11 லட்சம் சன்மானமாக வழங்கப்படும்
எனக் கூறிய முன்னாள் எம்எல்ஏ சஞ்சய் கெய்க் குவாட்,
ராகுல் காந்தி தீவிரவாதி என குறிப்பிட்ட பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உள்ளிட்ட ஐந்து பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி கோட்டத் தலைவர் வெங்கடேஷ் கொடுத்த புகாரின்
பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள், விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நீர்ப்பாசனம், வேளாண்மை இடுபொருட்கள் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த மனுக்களை அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் இன்று அறிவித்துள்ளார்.
பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக கைதான திரைப்பட இயக்குநர் மோகன் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். மோகனை சொந்த பிணையில் விடுவிக்க திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.