Tiruchirappalli

News October 15, 2024

டிராகன் பழம் சாகுபடி செய்ய மானியம்: ஆட்சியர்

image

திருச்சியில் தோட்டக்கலை பயிர்கள் துறை மூலம் 2024-2025ஆம் நிதியாண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் திட்டத்தின் கீழ், டிராகன் பழம், இலந்தை பழம் சாகுபடி செய்வதற்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதில் ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 15, 2024

பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும்

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News October 15, 2024

பயிர்களை பாதுகாக்க ஆட்சியர் தகவல்

image

திருச்சி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்புள்ள நிலையில், விவசாயிகள் அறுவடைக்கு தயாராக உள்ள தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களை பாதுகாக்க வேண்டும். அதிக அளவில் பயிரிடப்படும் வாழைப்பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

News October 14, 2024

திருச்சி ஆட்சியருக்கு 383 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 383 மனுக்கள் வருகை தந்தது. இதில், இலவச வீட்டு மனை பட்டா, பட்டா மாறுதல், ஜாதி சான்றிதழ், இதர சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, நலத்திட்ட உதவிகள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பெறப்பட்டது.

News October 14, 2024

திருச்சி மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் அக்.15 மற்றும் 16-ஆம் தேதி (செவ்வாய், புதன்கிழமை) கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

திருச்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

திருச்சி மாவட்டத்தில் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் பெண்களை பல்வேறு தனியார் துறைகளில் பணியமரத்த செய்யும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பெண்களை கலந்து கொண்டு பயன்பெற ஆட்சியர் இன்று அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

திருச்சியில் மயிலாடுதுறை எம்பிக்கு பாராட்டு

image

தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என்.சிங்கை மயிலாடுதுறை எம்பி ஆா்.சுதா கடந்த 1ஆம் தேதி நேரில் சந்தித்து மனு அளித்தாா். அதில் திருச்சி-மயிலாடுதுறை வழித்தடத்தில் பகல் நேரத்தில் கூடுதலாக ரயில் சேவை வேண்டி கோரிக்கை இருந்தது. இதனையடுத்து கடந்த திருச்சி – மயிலாடுதுறை வழித்தடத்தில் இண்டர் சிட்டி சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆா்.சுதாவுக்கு ரயில் பயணிகள் சங்கத்தினா் நன்றி தெரிவித்துள்ளனா்.

News October 14, 2024

கழிப்பறை விவகாரம்: பெண் எஸ்ஐ அதிரடி மாற்றம்

image

துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த எஸ்ஐ லதா காவல் நிலையத்தில் உள்ள பெண்களுக்கான கழிப்பறையை பூட்டி அதன் சாவியை தானே வைத்துக் கொண்டு அவர் மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி வருண்குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த மனிதத் தன்மையற்ற செயலால் பெண் எஸ்ஐ, பெண்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார். COMMENTIT

News October 14, 2024

திருச்சி மாவட்ட மக்களுக்கு இலவச பயிற்சி

image

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு வழிகாட்டல் நிகழ்வு நடைபெறுகிறது. இதில் தேர்வு எழுதுவோருக்கான பாடத்திட்டம், புத்தகங்கள், தயார் செய்யும் உத்திகள் குறித்து விளக்கப்படவுள்ளது. மேலும் தேர்வுகளுக்கு தயார் செய்பவர்கள் தங்களது சந்தேகங்கள் குறித்து நேரடியாக விளக்கம் பெற்றுக்கொள்ளலாம். இவை அனைத்தும் இலவசம் என மாவட்ட மைய நூலகர் தனலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News October 14, 2024

திருச்சியில் போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரபரப்பு

image

ஆப்ரேஷன் அகழியில் சிக்கிய திருச்சி, அரியமங்கலத்தை சேர்ந்த மோகன் பட்டேல் என்ற நிலவணிகர் வீட்டில் எஸ்பியின் தனிப்படையினர் எஸ்.ஐ.ரெஜி தலைமையில் 20க்கும் மேற்பட்ட பெண் போலீசாருடன் சோதனை இட முயற்சி செய்த நிலையில், பட்டேல் எஸ்கேப் ஆனதாலும், மோகன் பட்டேல் குடும்பத்தினர் வீட்டை பூட்டிக்கொண்டு சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும் திருச்சி அரியமங்கலத்தில் பரபரபரப்பு நிலவுகிறது.

error: Content is protected !!