Tiruchirappalli

News October 21, 2024

திருச்சியில் விமான சேவை ரத்து

image

திருச்சியில் இருந்து உள்நாட்டு விமான சேவையை மட்டுமே இயக்கி வந்த இண்டிகோ நிறுவனம், ஆகஸ்ட் 11 2024 முதல் திருச்சி – அபுதாபி இடையேயான விமான சேவைகளையும் தொடங்கியது. திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு அன்று இயங்கி வந்த விமான சேவை சில நிா்வாகக் காரணங்களால், அக்டோபா் 25ஆம் தேதி முதல் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்

News October 20, 2024

திருச்சியில் வெளுத்து வாங்கப்போகும் மழை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருச்சி மாவட்டத்தில் அக்டோபர்-20 (இன்று) முதல் அக்டோபர்-22 (செவ்வாய்) ஆகிய தேதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்.20-ஆம் தேதி நிலவரப்படி தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட 65% கூடுதலாக பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

திருச்சி காவிரி ஆற்றில் குளிக்க சென்ற மாணவன் மாயம்

image

திருச்சி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் கார்த்திகேயன். இவர் திருச்சியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காவிரி ஆற்றில் கார்த்திகேயன் குளிக்க சென்ற போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மாயமானார். அவரை தேடும் பணியில் திருச்சி தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து இன்று கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 20, 2024

திருச்சியின் முதல் அமைச்சர் யார் என்று தெரியுமா?

image

சுதந்திர வரலாற்றில் முக்கியமான பெயர் என்றால் அது ‘டி.எஸ்.எஸ் ராஜன்’. காந்தி,நேரு போன்ற மகான்கள், திருச்சிக்கு வந்தபோதெல்லாம் இவரின் பங்களாவில் தான் தங்குவார்கள். 1927இல் ராஜனின் மருத்துவ நிலையத்தை காந்தியடிகள் தான் திறந்து வைத்தார். மேலும் 1937ஆம் ஆண்டு ராஜாஜி அமைத்த அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும், திருச்சியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரும் இவர் தான். SHAREIT

News October 20, 2024

உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் காலிப்பணியிடங்கள்

image

திருச்சிக்கு நேற்று வருகை புரிந்த தமிழக செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மணிமண்டபத்தில் உள்ள தியாகிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், செய்தி மக்கள் தொடர்புத்துறையில் உள்ள உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஷேர் செய்யவும்

News October 20, 2024

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இலவச திருமணம்

image

தமிழக சட்டமன்றத்தில் சமயபுரம், திருச்செந்தூர் போன்ற கோவில்களில் இலவச திருமணம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதனடிப்படையில் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை காலை 10 மணிக்கு இலவச திருமணம் நடைபெற உள்ளது. இது திருமண விதிகளுக்கு உட்பட்டு நடைபெறும். மேலும் இதில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மணமக்களின் உறவினர்கள் கலந்து கொள்கின்றனர். இத்தகவலை கோவில் இணை ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். SHAREIT

News October 19, 2024

அமைச்சர் கேஎன் நேரு வாகனம் விபத்து: வதந்தியான செய்தி

image

திருநல்வேலியில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வாகனம் விபத்துக்குள்ளானதாக வரும் செய்தி தவறானது. விபத்துக்குள்ளான வாகனம் அந்தநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர் அண்ணன் ச.துரைராஜ் அவர்களுடையது. யாருக்கும் காயம் ஏதுமில்லை என திருச்சி மத்திய மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தகவல் தெரிவித்துள்ளனர்.

News October 19, 2024

ஆளுநருக்கு வரவேற்பு அளித்த ஆட்சியர்

image

திருச்சிக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று சென்னையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வருகை தந்தார். அவருக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் விமான நிலையத்தில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

News October 19, 2024

பெல் நிறுவனத்தில் 655 காலி பணியிடங்கள்

image

திருச்சி BHEL நிறுவனம் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் அங்கு காலியாக உள்ள 655 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10, 12ஆம் வகுப்பு மற்றும் ITI முடித்த 18 வயது நிரம்பிய நபர்கள், https://trichy.bhel.com என்ற முகவரியில் அக்.23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு ரூ.9000 சம்பளம் வழங்கப்படும். ஷேர் செய்யவும்

News October 18, 2024

துப்பாக்கி சூடு பயிற்சி ஆட்சியர் எச்சரிக்கை

image

வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சூடும் இடத்தில் வரும் 21 ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை காலை 7.30 மணி முதல் மாலை 5/30 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் இரவு 10:00 மணி வரை ஆர்டிசிஆர்பிஎஃப் பெரிங்கோம் கண்ணனூர் குரூப் யூனிட் பயிற்சியாளர்களால் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. எனவே அந்த தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் இருக்கக் கூடாது என ஆட்சியர் இன்று அறிவித்துள்ளார்

error: Content is protected !!