Thiruvarur

News December 6, 2024

நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

image

மன்னார்குடி பகுதியை சேர்ந்த சதீஷ் பிரபு, தனியார் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான மருத்துவ செலவின தொகையை, வழங்க மறுத்த இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மீது மன்னார்குடி நுகர்வோர் சங்க இணைச் செயலாளர் வேல்முருகன் மூலம் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட சதீஷ் பிரபுவுக்கு மருத்துவ செலவு தொகையாக ரூ.4,48,200 வழங்க நேற்று நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டது. ஷேர் செய்யவும்

News December 6, 2024

திருவாரூர் மாவட்டத்தில் நாளை வேலை நாள்

image

திருவாரூர் ஆட்சியர் சாரு ஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முத்துப்பேட்டை கந்தூரி விழாவிற்காக கடந்த மாதம் உள்ளூர் விடுமுறை அளிக்க பட்டதை ஈடு செய்யும் பொருட்டு நாளை (7/12/24) சனிக்கிழமை முழு வேலை நாளாக செயல்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். எனவே அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

News December 5, 2024

ரயில்வே நிலையத்தில் போலீசார் சோதனை

image

பாபர் மசூதி தினத்தையொட்டி ஆண்டுதோறும் டிசம்பர் 6ஆம் தேதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில்வே போலீசார் ரயில்களில் சோதனை நடத்துவது வழக்கம். அந்த வகையில் நாளை பாபர் மசூதி இடிப்பு தினம் நினைவு கூறுவதை முன்னிட்டு இன்று எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் வந்த விரைவு ரயிலில் போலீசார் சோதனை நடத்தினர். 

News December 5, 2024

தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான 5,688 சதுரடி நிலம் மீட்பு

image

திருவாரூர் கடைவீதியில் தியாகராஜசுவாமி கோயிலுக்கு சொந்தமான 5,688 சதுரஅடி நிலம் திருவாரூரைச் சோ்ந்த மன்சூா்அலி என்ற வாடகைதாரரின் பராமரிப்பில் இருந்தது. இந்த இடத்தை மற்றொருவர் ஆக்கிரமிப்பு செய்ததாகவும் இந்த நிலத்தை மீட்டுத் தருமாறு 2020இல் மன்சூா்அலி தொடர்ந்த வழக்கில்அக்டோபரில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் நிலம் இந்துசமய அறநிலையதுறை அதிகாரிகள் போலீசார் மூலம் மீட்டு மன்சூர் அலியிடம் ஒப்படைக்கப்பட்டது.

News December 5, 2024

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு தேசிய தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் வரும் 9ஆம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் சாரூஸ்ரீ தெரிவித்துள்ளார். மேலும், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் தேசிய தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News December 4, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 24.8 மில்லி மீட்டர் மழை

image

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்தது குறிப்பாக நேற்று திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தட்டாங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் முழுவதும் 24.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

News December 3, 2024

ஓடம்போக்கி ஆற்றில் அழுகிய ஆண் சடலம் 

image

திருவாரூர் நகர் பகுதிக்குட்பட்ட வண்டிக்கார தெரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இன்று ஓடம்போக்கி ஆற்றில் துர்நாற்றம் வீசியதை அடுத்து அங்கு சென்று பார்த்தபொழுது 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது தெரிய வந்தது. உடனடியாக நகர காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 3, 2024

இலவச வீட்டு மனை பட்டா விண்ணப்பிக்க அழைப்பு

image

திருவாரூர் மாவட்டம் வைப்பூர் கிராமத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை  சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட புல எண்123, 124, 127, 128, 129, 130 ஆகியவை நில எடுப்பு செய்யப்பட்டுள்ளன. சுமார் 450 மனைப்பிரிவுகள், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட தற்போது விண்ணப்பங்கள்வர வேற்கப்படுகிறது என  ஆட்சியர் சாருஸ்ரீ அறிவித்துள்ளார். 

News December 3, 2024

நீடாமங்கலம் பகுதி மக்களுக்கு போலீசார் எச்சரிக்கை

image

நீடாமங்கலம் நகர மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சாய்பாபா சிலையை வைத்துக்கொண்டு சிலர் பகல் நேரங்களில் ஆட்களில்லாத வீடுகளை பார்த்துக்கொண்டு இரவு நேரங்களில் அந்த வீடுகளில் திருட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் அவர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கவும் நீடாமங்கலம் காவல்துறை ஆய்வாளர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் சிறிது கவனத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

News December 3, 2024

திருவாரூர்: விண்ணப்பிக்க டிச.16 ஆம் தேதி கடைசி நாள்

image

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையம் நடத்துவதற்கு டிச.16 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என அந்நிறுவனத்தின் பொது மேலாளா் பால. சந்திரசேனா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவர் வெளியிட்ட: திருவாரூா், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா் சேவை மையங்களை இயக்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது தொடா்பான விவரங்களை இணையதள முகவரியில் காணலாம்.

error: Content is protected !!