Thiruvarur

News October 4, 2024

திருவாரூர் மாவட்டத்தில் இரவு 8 மணி வரை மழை

image

தமிழகத்தின் விருதுநகர், தென்காசி, கோவை, நீலகிரி, தஞ்சை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 30 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இன்று (அக்.4) இரவு 8 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News October 4, 2024

முத்துப்பேட்டையில் போலீசார் குவிப்பு

image

முத்துப்பேட்டை அருகே தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் தனியார் இடத்தில் சிலிக்கான் மண் குவாரி அமைக்ககூடாது என வலியுறுத்தி சிலிக்கான் மண் குவாரி உள்ள இடத்தில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

News October 4, 2024

மன்னார்குடியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்

image

மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சாமி அரசினர் கலை கல்லூரியில் நாளை (அக்.5) காலை 10 மணி முதல் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு, பட்டய படிப்பு, முடித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம் மேலும் அதிக தகவல்கள் பெற tnprivatejobs.gov.in என்ற தளத்தில் தகவலை தெரிந்துகொள்ளலாம்.

News October 4, 2024

பேருந்தில் தாலி செயினை திருடிய பெண்

image

கீழநத்தத்தை சேர்ந்தவர் தவமணி. இவர் நீடாமங்கலத்தில் இருந்து இன்று மன்னார்குடிக்கு பேருந்தில் சென்ற போது அவர் அணிந்திருந்த 6 சவரன் தாலிசெயின் காணாமல் போனது. இதுகுறித்து தவமணி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் அதே பேருந்தில் பயணம் செய்த காயத்ரி என்பவர் தாலி செயினை திருடியது தெரியவந்தது. காயத்ரியிடம் இருந்து செயினை மீட்டு காயத்ரி சிறையில் அடைத்தனர்.

News October 3, 2024

திமுக பிரமுகரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

image

புள்ளமங்கலம் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் சிவா என்பவரை தாக்கிய திமுக கிழக்கு ஒன்றிய செயலாளார் ஐ.வி.குமரேசனை கைது செய்ய வலியுறுத்தி வடபாதிமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பதவியில் இருந்து ஐ.வி.குமரேசனை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.

News October 3, 2024

கூத்தாநல்லூரில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

image

கூத்தாநல்லூரில் புறா வளா்ப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு. லெட்சுமாங்குடியை சோ்ந்த முகம்மது அப்துல்லா (42) என்பவருக்கும் சுப்பிரமணியன் (47) என்பவருக்கும் புறா வளா்ப்பதில் ஏற்பட்ட தகராறில் நேற்று சுப்பிரமணியன் அரிவாளால் அப்துல்லாவை தலையில் வெட்டியுள்ளாா். பின்னர் அப்துல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டர். போலீஸாா் சுப்பிரமணியனை கைது செய்தனா்.

News October 3, 2024

தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் இன்று திருவாரூர் வருகை

image

திருவாரூர்: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் இன்று 03.10.24 (வியாழக்கிழமை ) மாலை 3.00 காட்டூரில் உள்ள கலைஞர் கோடட்ட்கத்திற்கு வருகை தர உள்ளார். திருவாரூர் வருகை தரும் அமைச்சரை வரவேற்க திருவாரூர் மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கழகதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்க மாவட்ட செயலாளர் பூண்டி கே.கலைவாணன் எம்எல்ஏ கேட்டுக்கொண்டுள்ளார்.

News October 2, 2024

குழந்தை திருமணம் எதிர்ப்பு விளம்பர பலகை

image

திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் உள்ள ஆலத்தம்பாடி ஊராட்சியில் காந்தி ஜெயந்தி ஒட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்ற இந்த கிராம சபை கூட்டத்தில் நாகை எம்பி செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் எதிர்ப்பு குறித்த விளம்பர பலகைகளை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

News October 2, 2024

தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த கலெக்டர்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தமிழ்நாடு காதி மற்றும் கதர் கிராம தொழிலாளர் நல வாரியத்தின் சார்பில் நடைபெற்ற தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை ஆட்சியர் சாருஸ்ரீ குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

News October 2, 2024

மன்னார்குடியில் இலவச திருமணம் செய்ய அழைப்பு

image

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைய துறை அறிவிப்பின் படி மன்னார்குடி இராஜகோபால சுவாமி கோயிலில் வரும் 21ஆம் தேதி இலவச திருமண நிகழ்வு நடைபெற உள்ளது. தகுதியுள்ள இணையருக்கு 4 கிராம் தங்கத்தாலி ரூ.60,000 பெறுமான சீர்வரிசை வழங்கப்படும். எனவே தகுதியுடைய பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையர்கள் நாளை முதல் திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ள கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!