Thiruvarur

News October 9, 2024

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை அன்று பொதுமக்கள் குறைதீர் நாள் முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை கூறி 37 மனுக்களை அளித்தனர். அதனை நேரடியாக பெற்று அவர்களது குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி உத்தரவிட்டார்.

News October 9, 2024

திருவாரூரில் விடிய விடிய பெய்த கனமழை

image

திருவாரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக நேற்று நள்ளிரவில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாருர் நகரம், வடகண்டம், திருக்கண்ணமங்கை, பவித்ரமாணிக்கம், வண்டாம்பாளை, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் காலை வரை விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், குளங்கள் ஏரிகள் நிரம்பி வழிகிறது.

News October 9, 2024

திருவாரூர் மத்திய பல்கலை -கழகத்தில் வேலை வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கிளர்க், உதவியாளர் உள்ளிட்ட 14 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி பணி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 31.10.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cutn.ac.in/ என்ற இணையதளத்தை பயன்படுத்தி கொள்ளலாம்.

News October 8, 2024

இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100-ஐ அழைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் மக்கள் நேர்காணல் முகாம் 10.10.2024 அன்று பின்னத்தூர் ஊராட்சியில் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி மழையின் காரணமாக சங்கேந்தி அன்பு திருமண மண்டபத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்காணல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2024

திருவாரூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம்

image

மன்னார்குடி கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 10 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11 மணிக்கு கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை எழுத்து பூர்வமாக அளிக்கலாம். எனவே இந்த வாய்ப்பை மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 8, 2024

திருவாரூர் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை மறுதினம் முதல் (அக்.10) மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனுபவம் மிக்க பயிற்றுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் நேரில் வந்து பயிற்சி பெற்றுக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 7, 2024

திருவாரூரில் இரவு ரோந்துப் பணி காவல் துறையினர் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (07.10.24 ) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகாரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.

News October 7, 2024

உண்ணாவிரதம் போராட்டம் தேதி மாற்றம்

image

கொருக்கை கால்நடை பண்ணையை சிப்காட் ஆக மாற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையை கண்டித்தும், கைவிட வலியுறுத்தியும் அக்டோபர் 8-இல் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் உண்ணாவிரதம் போராட்டம் அறிவித்திருந்தார். இந்நிலையில் இன்று போராட்டத்தின் தேதி மாற்றப்பட்டு வரும் 22 .10.2024 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 7, 2024

திருவாரூர் கொலை குற்றவாளி மீது குண்டாஸ்

image

திருவாருர் அடுத்த இலவங்கார்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்து அணிந்திருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள கீழத்தெரு சந்தோஷ்(20) என்பவர் மீது எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

error: Content is protected !!