Thiruvarur

News September 27, 2024

கருணை கொலை செய்ய கோரி விவசாயி மனு

image

முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர்குளம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் என்ற விவசாயி. கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த விபத்தில், இடுப்புக்கு கீழே செயல் இழந்து உதவி தொகைக்கு விண்ணப்பம் செய்து இருந்தார். இந்நிலையில் உணவுக்கே சிரமம் அடையும் அவர், என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என கூறி நேற்று திருவாரூர் கலெக்டருக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பியுள்ளார்.

News September 27, 2024

திருவாரூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இரவு நேரத்தில் ரோந்து காவல் பணிக்காக விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (26.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும்.

News September 26, 2024

திருவாரூர் மாவட்ட ஊராட்சிகளுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கல்

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளுக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ கொடியசைத்து துவக்கி வைத்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்படி இந்த உபகரணங்கள் ஒவ்வொரு ஊராட்சிக்கும் வழங்கப்படுகிறது.

News September 26, 2024

திருவாரூர்; ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போராட்டம்

image

2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 11 ஆண்டுகளாக வேலையில்லாமல் தவித்து வரும் நபர்களுக்கு உடனடியாக வேலை வழங்க வேண்டும், அரசாணை எண் 149 உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதி 177 உடனடியாக நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் நகராட்சி அலுவலகம் முன்பாக 300 க்கும் மேற்பட்டோர் கைக்குழந்தையுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 26, 2024

திருவாரூர் மாணவர்களுக்கு இலவச விளையாட்டு உபகரணங்கள்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் இன்று காலை 10 மணி அளவில் விளையாட்டு வீரர்களுக்கான தமிழக அரசின் சார்பில் விலையில்லா அனைத்து வகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது இதில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்கிறார்.

News September 26, 2024

திருவாரூரில் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், +2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் இன்று (செப்.,26) வேலுடையார் பள்ளியில் நடைபெறுகிறது. இதில், பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு பெற ஆட்சியர் அழைத்துள்ளார்.

News September 25, 2024

உயர்வுக்கு படி சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், +2 தேர்ச்சி பெற்று உயர்கல்வி படிக்க முடியாத சூழல் உள்ளவர்களுக்கான உயர்வுக்கு படி என்ற விழிப்புணர்வு முகாம் நாளை (செப்.,26) வேலுடையார் பள்ளியில் நடைபெறுகிறது. இதில், பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து கல்வி கடன் மற்றும் உயர்கல்வி வாய்ப்பு பெற ஆட்சியர் அழைத்துள்ளார்.

News September 25, 2024

கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்: திருவாரூர் ஆட்சியர்

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பில் மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தகுதிவாய்ந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினை சார்ந்தவர்கள் மானியத்துடன் கடனுதவி பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஶ்ரீ தெரிவித்துள்ளார்.

News September 25, 2024

திருவாரூரில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

image

திருவாரூா் நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் போலீஸாா் நேற்று சோதனைப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மருதப்பட்டினம் தியாகி சின்னச்சாமி தெருவில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த அலெக்ஸ் (25), வசம்போடைத் தெருவைச் சோ்ந்த ஞானசேகரன் (53) ஆகியோரை போலீசார் சோதனை செய்தனர். சோதனையில் ரூ.5,800 மதிப்பிலான கஞ்சாவை பற்றிய போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

News September 24, 2024

திருவாரூர் அரசு பேருந்து மோதி மாணவி பலி

image

திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் அருகில் குருக்கத்தி பைபாஸ் சாலை அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிளஸ்1 மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் இருந்த மாணவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது தம்பியுடன் ஸ்கூட்டியில் பள்ளிக்கு சென்றபோது மாணவி விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!