Thiruvarur

News October 1, 2024

திருவாரூரில் 3 பேருக்கு 8 கிராம் தங்கம்

image

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் 3 பேருக்கு 8 கிராம் தங்க நாணயத்தை கலெக்டர் வழங்கினார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தோட்டக்கலை துறை சார்பில் 2 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் மதிப்பிலான காய்கறி விற்பனை வண்டியை கலெக்டர் வழங்கினார்.

News September 30, 2024

திருவாரூர் மாவட்டத்தில் கஞ்சா வழக்கில் 18 நபர்கள் கைது.

image

திருவாருர் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் படி, திருவாரூர் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று அதிரடி கஞ்சா சோதனையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி வேட்டையில் 15 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் 18 நபர்கள் கைது செய்தும், அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 5 கிலோ 900 கிராம் எடையுள்ள (மதிப்பு ரூ.59,000) பறிமுதல் செய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News September 29, 2024

திருவாரூர் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (29.09.2024) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் அதிகரிகளின் விபரம் மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நடைபெறும் இந்த ரோந்து பணிகளில், பொதுமக்கள் அவசர உதவிக்கு இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம்.

News September 29, 2024

திருவாரூர் மாவட்டத்தில் நான்கு பேர் குண்டர் சட்டத்தில் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் பூவனூர் பகுதியை சேர்ந்த தயாநிதிமாறன், ஷியாம், மருதவனம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன், திருவாரூர் அழகிரி காலனியைச் சேர்ந்த அலெக்ஸ் ஆகியோர் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் எஸ்.பி. ஜெயக்குமார் பரிந்துரையின் பேரில் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

News September 28, 2024

திருவாரூர் அருகே இலவச நகை தயாரிப்பு பயிற்சி

image

கொடிக்கால்பாளையத்தில், ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி (RSETI) மூலம் மகளிருக்கு இலவச அலங்கார நகை தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. 13 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த, 18-44 வயதுடைய பெண்கள் பங்கேற்கலாம். மேலும் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9944916793 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

News September 28, 2024

திருவாரூக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

கும்பகோணம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வார விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று நிர்வாக இயக்குனர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதன்படி சென்னையிலிருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, ஆகிய ஊர்களுக்கு 295 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News September 27, 2024

குருவை சாகுபடியில் திருவாரூர் மாவட்டம் சாதனை

image

திருவாரூரில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் நடைபெற்றது. அதில் 37,000 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்திட நிர்ணயிக்கப்பட்ட இலக்கு முழுமையாக எட்டப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் வேளாண்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.

News September 27, 2024

திருவாரூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்தில் 151 மி.மீட்டர் மழை

image

திருவாரூர் மாவட்டத்தில் செப்டம்பர் மாத இயல்பான மழை அளவு 151 மில்லி மீட்டர் பெய்துள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99 அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரத்து 912 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கூறினார்.

News September 27, 2024

திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தலைமையில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு வழங்கப்பட்ட காப்பீட்டில் முறைகேடு நடந்துள்ளதாகவும், விடுபட்ட கிராமங்களுக்கு காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News September 27, 2024

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் முன்னோடி விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ கேட்டுக் கொண்டிருக்கிறார். இக்கூட்டத்தில் வேளாண்மை சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

error: Content is protected !!