Thiruvarur

News October 16, 2024

திருவாரூருக்கு ரெட் அலர்ட்

image

வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் கடலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்து. இதனால், இன்று திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூர் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

News October 15, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அவசர எண் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்து தகவல்கள் 24 மணி நேரமும் செயல்படும் திருவாரூர் மாவட்ட கட்டுப்பாடு அறை எண் 1077 என்ற எண்ணிலும் அல்லது 04366 226623 என்ற எண்ணிலும் தகவல்கள் தெரிவிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தெரிவித்துள்ளார்.

News October 15, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 103 பேர் கைது

image

திருவாருர் மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க எஸ்.பி. தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 14 பேர், புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக 28 பேரும் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மது விற்பனையில் ஈடுபட்ட 27 பேர், சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 12 பேர் மற்றும் குண்டர் சட்டத்தில் ஒருவர் என 103 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

News October 14, 2024

திருவாரூர்: மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்பு

image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான ஜனசக்தி சந்தா வழங்கும் சிறப்பு கூட்டம் திருவாரூர் மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மேலும் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் வை செல்வராஜ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

News October 14, 2024

திருவாரூர் எஸ்.பி உதவி எண் அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவை படுவோர் திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலக எண் 94981 00865 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News October 14, 2024

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள அலுவலக கூட்ட அரங்கில் (14-10.2024) இன்று இரவு 9.45 மணி அளவில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெற உள்ளது. இதில் அரசு துறை அதிகாரிகள் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

News October 14, 2024

திருவாரூர் மாவட்டத்துக்கு அதி கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் அக்.15-ஆம் தேதி (செவ்வாய்) கனமழை எச்சரிக்கையும், அக்.16-ஆம் தேதி (புதன்கிழமை) அதி கனமழை எச்சரிக்கையும் (ரெட் அலெர்ட்) விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 40-55 கி.மீ வரை பலத்த காற்று வீசும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 14, 2024

திருவாரூரில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் இருந்து பல்வேறு பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான பட்டா மாறுதல், உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ அவர்களிடம் மனுக்களை வழங்கினர். இந்த நிகழ்வில் ஏராளமான அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News October 14, 2024

திருவாரூரில் வாக்காளர் பட்டியல் குறித்த சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகளில் நவம்பர் 9-10, 23-24, ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்குதல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.30 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெறும். மேலும் 2025 ஜனவரி 1ஆம் தேதி அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ கொண்டு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News October 14, 2024

ரயில் விபத்தில் மோடி அரசு மீது சந்தேகம் உள்ளது – எம்.எல்.ஏ.

image

முத்துப்பேட்டையில் மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் அப்துல்சமது எம்எல்ஏ கூறுகையில்: மோடி அரசு மத்தியில் அமைந்த பிறகு தொடர்ந்து ரயில் விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் நல்ல வேலையாக உயிர்ச்சேதம் ஏதுமில்லை. இந்த விபத்துகள் குறித்து ஆய்வு செய்து இதுபோன்ற விபத்துகள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லையோ என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றார்.

error: Content is protected !!