Thiruvarur

News February 16, 2025

செங்கல்சூளை உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட அனைத்து செங்கல் சூளை உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந் திரன் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் இருந்து வரும் அனைத்து செங்கல்சூளை உரிமையாளர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.

News February 16, 2025

திருவாரூர்:மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

image

திருவாரூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திருவாரூர் கோட்ட மின் நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் வரும் 21ஆம் தேதி நடக்கிறது. அதன்படி காலை 11 மணியளவில் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெறும். இதில் திருவாரூர், கச்சனம், அடியக்கமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல், நன்னிலம், ஶ்ரீவாஞ்சியம், ஆலங்குடி, வலங்கைமான், பேரளம் ஆகிய பகுதிக்கு உட்பட்டவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 16, 2025

திருவாரூர் :அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு

image

வலங்கைமான், ஏரிவேளூர் ரேஷன் கடையில், தங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் கைரேகை பதிவு செய்ய வேண்டும். கைரேகை பதிவு செய்யாத உறுப்பினர்கள் தவறாமல் ஒரு வார காலத்திற்குள் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News February 16, 2025

தீராத கடன் பிரச்சினை இருக்கா – இந்த கோயிலுக்கு போங்க

image

திருவாரூர் செல்லும் சாலையில் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை கிராமத்தில் ஸ்ரீ சாரபரமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கும் ருணவிமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டால் தீராத கடன் பிரச்சனையும், முற்பிறவியில் செய்த பாவங்களும் தீரும் என்பது ஐதீகம். மாசி மாதத்தில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி இங்குள்ள சுவாமி அம்பாள் மீது நேரடியாக விழுவது தனி சிறப்பு

News February 15, 2025

திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் நவம்பர் 20 அன்று விடுமுறை விடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை பிப்ரவரி 15 பள்ளிகள் அனைத்தும் முழு வேலை நாளாக செயல்படும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மாலை வேலை முடிவடையும் நேரத்தில் இச்செய்தி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மாணவர்கள் இடத்தில் சற்று குழப்பம் நீடிக்கிறது.

News February 14, 2025

திருவாரூர் மாவட்டத்தில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கம்

image

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக மாவட்டம் முழுவதும் 532 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதால் எடை இழப்பை தங்கள் மீது சுமத்துவதாகவும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர். அறுவடை தொடங்கி 25 நாட்களில் 25 லட்சம் நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளதாக பணியாளர்கள் கூறுகின்றனர்.

News February 14, 2025

இளைஞர் கொலையில் மேலும் 7 பேர் கைது

image

கூத்தாநல்லூா் அருகே வடபாதிமங்கலம், மாயனூரைச் சோ்ந்தவா் சோமசுந்தரம் (33). இவரது மனைவியின் மூத்த சகோதரா் சிவநேசன் (28) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த பிப்.8 ஆம் தேதி நள்ளிரவு ஒரு கும்பல் சோமசுந்தரத்தை தாக்கி கொலை செய்தது. இந்த கொலை வழக்குத் தொடா்பாக, சிவநேசன், கோபி, திலீபன் சூா்யா, வடிவழகன், விக்னேஷ், புதிய பாண்டி, சக்திதாசன், பூசங்குடி சுரேந்தா் ஆகிய 7 போ் கைது செய்யப்பட்டனா்.

News February 13, 2025

தங்கப்பதக்கம் வென்ற திருவாரூர் வீரர்

image

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடந்த 38ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் ஆண்களுக்கான தடகளம் ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்ற மன்னார்குடி அடுத்த செட்டிச்சத்திரம் சோனாப்பேட்டை பெரியார் நகரை சேர்ந்த இளம் வீரர் பிரவீன் சித்ரவேல் என்பவர் 16.50 மீட்டர் நீளம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை தேடித் தந்துள்ளார்.

News February 13, 2025

திருவாரூர் மாவட்டத்தில் மூன்றாம் திருப்புதல் தேர்வு தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளில் பயிலும் 6 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் திருப்புதல் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 முதல் 9 வகுப்புகளுக்கு பிப்ரவரி 24 முதல் 26 வரை காலை மாலை இருவேளையும், 10 ஆம் வகுப்புக்கு மார்ச் 3 முதல் 8 வரையும் நடைபெறும் என திருவாரூர் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

News February 13, 2025

434 காலிப்பணியிடங்கள்: ரூ.50,000 சம்பளத்தில் வேலை

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

error: Content is protected !!