Thiruvarur

News February 21, 2025

திருவாரூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூரில் தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை (பிப்.22) நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது. இதில் 150-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்தார்.

News February 20, 2025

விவசாயிகள் குறைதீர் கூட்டம் தேதி அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட விவசாய குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பிப்.28ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் மாவட்ட முழுவதும் இருந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு பதிலளிக்க உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார். SHARE NOW>

News February 20, 2025

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

image

திருவாரூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகளின் குறைகளை தீர்ப்பது தொடர்பான கூட்டம் இன்று பிப்.20 ஆம் தேதி மாலை 4 மணி அளவில் வருவாய் கோட்ட அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது என வருவாய் கோட்ட அலுவலர் சௌமியா தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் தவறாமல் அனைத்து விவசாயிகளும் கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News February 19, 2025

உ.வே.சா.வுக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியர்

image

தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள் விழா வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (பிப்.19) கொண்டாடப் பட்டது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகன சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் ஆகியோர் உ.வே.சாவின் உருவச் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினர். அதில் வட்டாட்சியர் ஶ்ரீராம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

News February 18, 2025

திருவாரூர் மாவட்ட எஸ்.பி அதிரடி 65 பேர் கைது

image

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண் கரட் உத்தரவின்படி, திருவாரூர் மாவட்டத்தில் வார இறுதி நாட்களில் காவலர்களை பெருமளவில் ஒன்று திரட்டி சட்ட விரோத செயல்களாக கஞ்சா, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை, கள்ள சந்தையில் மது விற்பனை, அண்டை மாநில மது கடத்தல், சட்ட விரோத மணல் கடத்தலில் ஈடுபட்ட சுமார் 65 நபர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News February 17, 2025

நியூ பாரத் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம்

image

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் சனிக்கிழமை 22.02.2025 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவாரூர் புதுத்தெருவில் உள்ள நியூ பாரத் மேல்நிலைப் பள்ளியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

News February 17, 2025

திருவாரூர்: அனைத்து துறை அலுவலர்கள் முன்னேற்பாடு கூட்டம்

image

இன்று பிப்.17, திருவாரூர் மாவட்டத்தில் எதிர்வரும் மார்ச் மாதம் துவங்கி நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகளுக்கான அனைத்து துறை தலைமை அலுவலர்களுக்கான முன்னேற்பாடு கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் திரு.வி.மோகனச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

News February 17, 2025

பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம்- கலெக்டர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் பிப்.19ஆம் தேதி நீடாமங்கலத்தில் சிறுபான்மையினருக்கான பொருளாதார மேம்பாட்டு கடன் உதவி முகாம் நடைபெறுவதாக கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதில் டாம்கோ மூலம் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் மற்றும் பொருளாதார மேம்பாட்டுகழகம் மூலம் பிற்படுத்த உறுப்பினர்களுக்கு கடன் உதவி முகாம் நடைபெற இருக்கிறது. உரிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 17, 2025

எல்லை சாலைகள் அமைப்பில் 411 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் எல்லை சாலைகள் அமைப்பில்(BRO) உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சமையல்காரர், கொத்தனார், கொல்லர், மெஸ் வெய்டர் உள்ளிட்ட 411 பணியிடங்கள் உள்ளன. ரூ.5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆர்வமும் தகுதியும் உள்ள ஆண்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். 18-25 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். SHARE NOW.

News February 16, 2025

திருவிடச்சேரி: நிலை தடுமாறி ஆற்றில் இறங்கிய கார்

image

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகில் திருவிடச்சேரி என்ற ஊரில் (16.02.25) மாலை நன்னிலத்திலிருந்து குடவாசல் சென்றுக்கொண்டிருந்த கார் ஒன்று திடீரென்று நிலை தடுமாறி பக்கத்தில் உள்ள புத்தாற்றில் இறங்கியது. இதில் பயணம் செய்த யாருக்கும் எந்தவித பாதிப்புமில்லை.ஆபத்தான ஆற்று ஓரங்களில் தடுப்புச்சுவர் அரசு அமைத்து தந்தால் இது போன்ற சம்பவத்தை தடுக்கலாம் என சமுக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!