Thiruvarur

News February 24, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பிப்ரவரி 24 இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர்  வ.மோகனச்சந்திரன் பொதுமக்கள் கொண்டு வந்த மனுக்களை பெற்றுக் கொண்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார்.

News February 24, 2025

தபால் ஆபிசில் வேலை: உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் 2,292 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் இங்கு <>கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். SHARE பண்ணுங்க.

News February 24, 2025

ரேஷன் கடையில் இன்று சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின்( phh-Ayy) ரேஷன் கடையில் e-kyc விரல் ரேகை பதிவு செய்வதற்காக வட்டாரம் வாரியாக அந்தந்த ரேஷன் கடையில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று 24.2.2025 அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. SHARE NOW.

News February 22, 2025

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (22.02.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 22, 2025

விளையாட்டு வீரர்களுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவர்கள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உடையவர்கள் ஊராட்சிகளில் உள்ள ஊராட்சி விளையாட்டு மன்றத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவுசெய்து பயன்பெற வேண்டும். உபகரணங்களை பயன்படுத்தி விளையாட்டு திறமைகளை வளர்த்துக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் வ.மோகனசந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News February 22, 2025

திருவாரூரில் இன்று வேலை வாய்ப்பு முகாம்

image

திருவாரூரில் தனியார்துறைவேலை வாய்ப்பு முகாம் இன்று (பிப்.22) நடைபெற உள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், திருவாரூர் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

News February 22, 2025

திருவாரூரில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது

image

திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க, வார விடுமுறை நாளான கடந்த ஜனவரி 10ஆம் தேதி, ரேஷன் கடைகள் செயல்பட்டன. இந்த வேலைநாளை ஈடுசெய்ய, இன்று (பிப்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று சனிக்கிழமை (பிப்.22) திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW.

News February 21, 2025

வீடு மனை தோஷங்களை நீக்கும் மண்ணச்சநல்லூர் பூமிநாத சுவாமி!

image

திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் மன்னச்சநல்லூரில் அமைந்துள்ளது பூமிநாத சுவாமி கோயில். இங்கு சிவபெருமான் வாஸ்து கடவுளாக அருள்பாலிக்கிறார். சொந்த வீடு வாங்க,புதிய வீடு கட்டுமானம் தொடங்கியதும் வாஸ்து குறைகளால் ஏற்படும் தடங்கள்,நிலம் மனை விற்பதில் தடை,சொத்து வழக்கு பிரச்சனை உள்ளிட்ட 16 விதமான மண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்வதற்கு சக்தி வாய்ந்த ஸ்தலமாக இது விளங்குகிறது.

News February 21, 2025

குடும்ப அட்டையில் விரல் ரேகை பதிவு செய்ய சிறப்பு முகாம்

image

திருவாரூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களின்( phh-Ayy) ரேஷன் கடையில் e-kyc விரல் ரேகை பதிவு செய்வதற்காக வட்டாரம் வாரியாக அந்தந்த ரேஷன் கடையில் சிறப்பு முகாம் நடத்த மாவட்ட ஆட்சியர் மோகனசுந்தரம் உத்தரவிட்டுள்ளார் அதன்படி24.2.2025 அனைத்து ரேஷன் கடைகளிலும் அன்று சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது இதற்கு கண்காணிப்பு அலுவலரையும் அவர் நியமித்துள்ளார்

News February 21, 2025

திருவாரூர் மாவட்ட பசுமை முதன்மையாளர்கள் விருது

image

திருவாரூர் மாவட்டத்தில் முதன்மையாளர்கள் விருது 2024 வழங்கப்பட இருக்கிறது. இது தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் 100 பேர்க்கு தலா ரூ.1,00,000 வழங்கப்படுகிறது. விருதுபெறவிண்ணப்பிக்க ஏப்ரல் 15 கடைசி நாள் ஆகும். விருது பெறத் தகுதியானவர்கள் www.tnpcb.gov.in பெற இணையத்தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!