Thiruvarur

News December 27, 2024

காலநிலை மாற்றத்தால் தவிக்கும் திருவாரூர் மாவட்டம்

image

காலநிலை மாற்றத்தால் தமிழக டெல்டா மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக திருவாரூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் அதீத மழை மற்றும் வெயிலின் தாக்கத்தால் வேளாண் உற்பத்தியானது பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அனைத்து டெல்டா மாவட்டங்களுக்கும் அரசு சிறப்பு திட்டம் வகுக்க வேண்டும் என்பதே சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. SHARE!

News December 27, 2024

திருவாரூர் மாவட்டத்தில் 53 குண்டர் சட்டத்தில் கைது

image

திருவாரூர் மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் போதைப் பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்ட 53 நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்ய்ய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இதேபோல் மாவட்டத்தில் 206 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News December 26, 2024

திருவாரூரில் ரோந்து காவலர்களின் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (26.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இரவு நேர குற்றங்களை தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, எங்களது இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யவும் என காவல்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 26, 2024

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைது

image

மன்னார்குடி அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று மாலை தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த கோபாலசமுத்திரம் வடக்கு வீதியைச் சேர்ந்த அஜித்கரன் என்ற இளைஞர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில், மன்னார்குடி காவல் துறையினர் அஜித்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News December 26, 2024

முத்துப்பேட்டை: சிறுமியை திருமணம் செய்த இளைஞர் கைது

image

முத்துப்பேட்டை அருகே குக்கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை முத்துப்பேட்டை அருகே மன்மத கோட்டகம் கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் ஆசை வார்த்தைகள் கூறி கடந்த டிச.22-ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இது சம்பந்தமாக சிறுமியின் தாய் செல்வேஸ்வரி கொடுத்த புகாரின் அடிப்படையில் முத்துப்பேட்டை காவல்துறையினர் ஐயப்பன் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News December 26, 2024

திருவாரூர் சட்டமன்ற தொகுதியின் அனல் பறக்கும் அரசியல் வரலாறு

image

திருவாரூர் சட்டமன்றத் தொகுதி அரசியல், சமயம் ஆகியவற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தொகுதியாகும். ஆரம்பத்தில் தனித்தொகுதியாக இருந்த திருவாரூரில் 1962-ம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்றது. இதுவரை 14 சட்டமன்ற தேர்தல்களை சந்தித்த இத்தொகுதியில், திமுக – 8, சி.பி.எம் – 4, காங் 2 முறை வென்றுள்ளது. ஆனால் இதுவரை அ.தி.மு.க. இந்த தொகுதியில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. ஷேர் செய்யவும்!

News December 26, 2024

திருவாரூரில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

image

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (டிச.26) காலை 10:30 மணியளவில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம். SHARE!

News December 25, 2024

திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் சாலைகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாகன விபத்துகளால் ஏற்படும் உயிர் சேதங்களைத் தவிர்க்க வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என திருவாரூர் மாவட்ட காவல் துறையினால் இன்று அறிவிக்கப்படுகிறது. இதனை கட்டாயமாக வாகன ஓட்டிகள் கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

News December 25, 2024

மன்னார்குடி அருகே ரூ.7.42 லட்சம் மோசடி

image

மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார். இவரை வாட்ஸப் எண் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் வாயிலாக பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறி ரூ.7.42 லட்சத்தை பெற்றுள்ளார். இதையடுத்து அந்நபரிடமிருந்து எவ்வித தகவலும் இல்லாததையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் திருவாரூர் சைபர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.

News December 25, 2024

முத்துப்பேட்டையில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

image

முத்துப்பேட்டை அருகே ஜாம்புவானோடை கல்லடிகொல்லை பகுதியை சேர்ந்தவர் விவசாயி, வீரபாண்டியன் (50). இவர் அதே பகுதியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு படித்து வரும் 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் முத்துப்பேட்டை மகளிர் காவல் நிலைய போலீசார் வீரபாண்டியன் மீது போக்ஸோ வழக்கு பதிந்து, கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!