India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் நேற்று முதல் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மூலம் மாவட்ட ஆட்சியர் உட்பட அரசு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை குடவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் காலை உணவை மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையல் பணியாளர்கள், தலைமை ஆசிரியர் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. கும்பகோணம் மண்டலத்தில் 756 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை <
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் உள்ள தேவாசிரியன் மண்டபத்தில் மராட்டிய மன்னர்கள் காலத்தில், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் முழுவதும் மூலிகைகளை மட்டும் பயன்படுத்தி வரையப்பட்ட 96 ஓவியங்கள் உள்ளன. அவை, சிவலீலைகளை விளக்கும் விதமாகவும், திருவாரூர் பெருமைகள் சொல்லும் வகையிலும் வரையப்பட்டன. பக்தி மட்டுமல்லாது அவை பண்டைய வரலாற்றுச் சின்னமாகவும் பார்க்கப்படுகிறது. இது தெரியாத உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
திருவாரூர் மாவட்ட அனைத்திந்திய இளைஞர் மற்றும் மாணவர் பெருமன்றம் சார்பில் 1000 இளைஞர்கள் மாணவர்கள் பங்கேற்கும் இரத்ததான முகாம் திருவாரூர் மருத்துவமனையில் வரும் 23.03.2025 (ஞாயிறு) காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. முகாமை திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கே. கலைவாணன் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார். நாகை எம்பி வை.செல்வராஜ், மருத்துவ கல்லூரி முதல்வர் எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்கின்றனர்.
மன்னார்குடி ரோட்டரி சங்கம் சார்பில் வரும் ஜூலை.13-ஆம் தேதி நடைபெற உள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுகளுக்கு தயாராகும் ஏழை மாணவ மாணவிகளுக்கு உதவும் வகையில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மன்னார்குடி வடசேரி சாலையில் அமைந்துள்ள ஆண்டாள் வெங்கடேசன் அரங்கத்தில் நாளை (மார்ச்.20) மாலை 4 மணியளவில் நடைபெறும் அறிமுக வகுப்பில் ஆர்வமுள்ளோர் கலந்து கொள்ளும்மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக மன்னார்குடி கோட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் எள் பயிர்கள் பெரிது பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, பயிர் காப்பீடு செய்வதற்கான தேதியை மாவட்ட ஆட்சியர் நீட்டித்து தர வேண்டும் என காவிரி டெல்டா பாசன விவசாய சங்க தலைவர் தர்மசுவாமிநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயில் ஆழி தேரோட்டம் 2025 முன்னிட்டு அலுவலர்களுடனான ஒருங்கிணைப்பு கூட்டம் ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கருண்கரட் உடனிருந்தார். மேலும், இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனை கண்டித்து தமிழக முழுவதும் இந்திய மாதர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இன்று (18.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகள் விவரம் வழங்கப்பட்டுள்ளது. இரவு நேர குற்றங்களைத் தடுக்க காவல் துறையின் உடனடி உதவிக்கு, இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும் என காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் முழுவதும் அந்தந்த வருவாய் கிராமங்களில் நடைபெற்று வரும் நில உடமை பதிவுகள் சரிபார்த்தல் முகாமில், விவசாயிகள் தனித்துவமான அடையாள எண்ணை பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே மத்திய அரசு வழங்கும் ரூ.6000 கிடைக்கும் என்று மாவட்ட வேளாண் இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். எனவே, விவசாயிகள் இதற்கு மார்ச் 31ஆம் தேதிக்குள் விண்ணபிக்கவும். இதை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.