India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…
சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.
மணவாளநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எரவாஞ்சேரி பட்டக்கால் தெரு அருகே அமைந்துள்ள வாய்க்காலில் சேதமடைந்த பழைய பாலம் அகற்றப்பட்டு ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் 3 மீட்டர் அகலம் கொண்ட புதிய கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பாலமானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. SHARE NOW!
திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அணியில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச்.30 காலை 9 மணிக்கு கிடாரம்கொண்டானில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9629675870 மற்றும் 9577299772 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு SHARE பண்ணுங்க.
மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..
திருவாரூர் மாவட்டத்தில் ஆயுஸ் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஆயுஸ் மெடிக்கல் ஆபிஸர், ஆயுஸ் சித்தா டாக்டர், தியோபெடிக் உதவியாளர், மல்டி ப்ரப்போஸ் ஒர்க்கர்ஸ் பணிக்கு செயற் செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் திருவாரூர் என்ற முகவரியில் வரும் 05.04.25 க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
முத்துப்பேட்டை கோபாலசமுத்திரம் கிழக்கு கடற்கரை சாலையில் இறால் பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டம் நடத்த கிராம மக்கள் திரண்டு பேரணியாக வந்தபோது இன்ஸ்பெக்டர் இம்மானுவேல் ராயப்பன் தடுத்து நிறுத்தி விவசாய சங்க மாவட்ட தலைவர் முருகையனை தள்ளினார். இதனைக்கண்ட மக்கள் கூச்சலிட்டனர். இதனால் போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
வலங்கைமான் அருகே மணலூரை சேர்ந்த சங்கர்(55), சோத்தமங்கலத்தைச் சேர்ந்த முருகானந்தம் (44) ஆகியோர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு இருவரும் வலங்கைமான் ஊத்துக்காடு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு செல்லும் போது சாலையோர மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து வலங்கைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் பி.எம். கிசான் திட்டத்தில் நிதி உதவி பெற்று வரும் விவசாயிகள் தங்களது நில உடமை பதிவுகளை வரும் மார்ச்.31ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு திருவாரூர் கலெக்டர் மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதுபோல இதுவரை பி.எம் கிசான் திட்டத்தில் பதிவு செய்யாத விவசாயிகள் வரும் 31-ஆம் தேதிக்குள் தங்களது விபரங்களை சரிபார்த்து பதிவு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். SHARE NOW!
TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
Sorry, no posts matched your criteria.