India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருவாரூர் மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நாகை பாராளுமன்ற தொகுதி வை. செல்வராஜூக்கு கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திருவாரூர், அடியக்கமங்கலம், கொடிக்கால்பாளையம், புலிவலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் நியாசுதீன் தலைமையில் இருசக்கர வாகண பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. இதில் மமக அமைப்பு செயலாளர் ஹலீம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அம்பேத்கரின் 143 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதாரணியம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சியின், தெற்கு மாவட்ட செயலாளர் வெற்றி தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வம் மற்றும் ஒன்றிய செயலாளர் நகர செயலாளர் கிளை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
பாடல் பெற்ற 108 வைணவ ஆலயங்களில் ஒன்றான திருவாரூர் அருகில் உள்ள திருக்கண்ணமங்கை அருள்மிகு ஸ்ரீ அபிஷேகவல்லி தாயார் சமேத ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா இன்று முதல் தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து 18 ஆம் தேதி கருடசேவை திருவிழாவும் 23 ஆம் தேதி திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாஜக சார்பில் போட்டியிடும் நாகை நாடாளுமன்ற வேட்பாளர் எஸ் ஜி எம் ரமேஷ் கோவிந்த் திருத்துறைப்பூண்டி நகர் பகுதி மற்றும் ஒன்றிய பகுதிகளில் நேற்று தீவிர
வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நெடும்பலம் பகுதியில் உள்ள சோடா கம்பெனியில் சோடா தயாரித்து கொடுத்து அங்கு வேலை பார்த்தவர்களிடம் நூதன வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு பாஜக வேட்பாளராக எஸ்ஜிஎம் ரமேஷ் அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக கோட்டூரில் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில் கோட்டூர் பாஜக ஒன்றிய தலைவர் அரவிந்த் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
முத்துப்பேட்டை அடுத்த பின்னத்தூர் இடையர்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோதண்டராமன். அவரது மனைவி தங்கராணி ஆகியோர் தனது பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தரக்கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு இன்று உண்ணாவிரதம் இருந்தனர். தகவல் அறிந்து அங்கு வந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஏப்ரல்.25ஆம் தேதிக்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதால் அங்கிருந்து புறப்பட்டனர்.
திருவாரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. ஜுன் 30 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த பயிற்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம். 12 நாட்கள் பயிற்சிக்கு ரூ.1,770 கட்டணமாக செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலரை 9659067172 , 04366-290620 என்கிற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் 1 மணி வரைக்கும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இடி மின்னலுடன் மிதமான பெய்ய வாய்ப்பிருப்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாய் இருக்கும் படி அறிவுறுத்துப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் தனிப்பிரிவு காவலர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
நாகை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கீரனூர் ஊராட்சியில் இந்தியா கூட்டணி வேட்பாளர் வை. செல்வராஜ் திமுக கீரனூர் இளைஞர் அணி அமைப்பாளர் இரா.ஓவியநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்தியா கூட்டணிக்கு வாக்கு சேகரித்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.