Thiruvarur

News March 29, 2025

திருவாரூரில் அருளும் வராஹ பெருமான்

image

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த மகாதேவப்பட்டினம் பகுதியில் சரபோஜி மன்னர் காலத்தில் கட்டப்பட்ட 400 ஆண்டு பழமையான வராஹப் பெருமான் கோயில் உள்ளது. தற்போது இப்பகுதி மகாதேவபட்டினம் அரண்மனை என்று அழைக்கப்படுகிறது. சுற்றி அமைக்கப்பட்ட மதில் சுவர்களுக்கு இடையே சன்னதியில் வராஹப் பெருமான் காட்சி தருகிறார். வாரம்தோறும் சனிக்கிழமைகள் வராஹப் பெருமானின் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். SHARE பண்ணுங்க.

News March 29, 2025

பெண்ணை ஏமாற்றிவிட்டு சிங்கப்பூர் சென்றவர் கைது

image

திருவாரூர் வடபாதிமங்கலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சில ஆண்டுகளுக்கு முன், அணக்குடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக, திருவாரூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். ஆனால் பாலமுருகன் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவருக்கு மாவட்ட நீதிமன்றம் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்த நிலையில், நேற்றுமுன்தினம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அவர் கைது செய்யப்பட்டார்.

News March 28, 2025

கட்டணமில்லா பேருந்து அட்டைகள் ஜூன்30 வரை நீட்டிப்பு

image

திருவாரூர் மாவட்டத்தில் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உள்ளிட்டோருக்கு கட்டணமில்லா பேருந்து அட்டைகளை தமிழக அரசு 07/09/2023 முதல் வழங்கிவருகிறது. இந்த அட்டைகள் 31/03/25 வரைதான் செல்லுபடியாகும் என்ற நிலையில் அட்டையினை ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை பயன்படுத்தி கொள்ளு மாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News March 28, 2025

திருவாரூர் மாவட்டத்தில் திடீர் சத்தம்: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

image

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வானில் இருந்து பலத்த சத்தம் கேட்ட விவகாரம் தொடர்பாக ஆட்சியர் மோகனச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், இந்திய விமானப் படையின் SONIC BOOM, அதாவது ஒலியைவிட வேகமாகச் செல்லும் விமானத்தை இயக்கிப் பார்த்ததால் ஏற்பட்ட சத்தம் என தெரிவித்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார். 

News March 28, 2025

திருவாரூர் மக்களே உஷார் – யாரும் வெளிய வராதிங்க!

image

தமிழ்நாட்டில் வறண்ட காற்று காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் 98-102.2 டிகிரி வரை பதிவாகக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ▶ காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்கவும் ▶ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளனர். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க…

News March 28, 2025

கொலை வழக்கில் சிக்கிய திருவாரூர் நபர்

image

சிதம்பரம் அம்மாபேட்டையில் நேற்று முன்தினம் இரவு, ஒரு வீட்டில் திருட முயன்றபோது வீட்டின் உரிமையாளர் கத்தியால் வெட்டப்பட்டார். அதுகுறித்த விசாரணையில் திருவாரூர், நன்னிலம் முடிகொண்டான் பகுதியைச் சேர்ந்த கேசவன் (52) என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் 2020இல் அம்மாபேட்டை பகுதியில், நடராஜன் என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் தேடப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்தது.

News March 27, 2025

மணவாளநல்லூர் ஊராட்சியில் புதிய பாலம் திறப்பு

image

மணவாளநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் எரவாஞ்சேரி பட்டக்கால் தெரு அருகே அமைந்துள்ள வாய்க்காலில் சேதமடைந்த பழைய பாலம் அகற்றப்பட்டு ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் 3 மீட்டர் அகலம் கொண்ட புதிய கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் புதிய பாலமானது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. SHARE NOW!

News March 27, 2025

திருவாரூர் கிரிக்கெட் வீரராக வாய்ப்பு

image

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அணியில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான வீரர்கள் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மார்ச்.30 காலை 9 மணிக்கு கிடாரம்கொண்டானில் உள்ள திருவிக அரசு கலைக்கல்லூரியில் தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9629675870 மற்றும் 9577299772 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆர்வலர்களுக்கு SHARE  பண்ணுங்க.

News March 26, 2025

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை

image

மத்திய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.பி.ஆர்.ஐ.,) டெக்னீசியன் பிரிவில் 17 காலியிடங்களுக்கு தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு 18-28 வயதுடைய பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் cbri.res.in என்ற இனையம் மூலம் 15.04.2025ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம், இதனை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க..

News March 26, 2025

திருவாரூர்: வேலைவாய்ப்பு அறிவிப்பு 

image

திருவாரூர் மாவட்டத்தில் ஆயுஸ் திட்டத்தின் கீழ் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிய ஆயுஸ் மெடிக்கல் ஆபிஸர், ஆயுஸ் சித்தா டாக்டர், தியோபெடிக் உதவியாளர், மல்டி ப்ரப்போஸ் ஒர்க்கர்ஸ் பணிக்கு செயற் செயலாளர், மாவட்ட நல வாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகம் திருவாரூர் என்ற முகவரியில் வரும் 05.04.25 க்குள் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் கலெக்டர் வ.மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!